என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யகுமார் யாதவ்"

    • அபிஷேக் சர்மாவை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.
    • கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார் என்றார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வருகின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்படுபவர்களைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.

    அவரது ஆட்டத்தை நினைத்து ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.

    அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம்.

    கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம் என தெரிவித்தார்.

    • நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம்.
    • அதன்பின் கைக்குலுக்குவது குறித்து முடிவு செய்வோம்.

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.

    இந்த போட்டியில் இருஅணி வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?. வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்வார்களா? போன்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

    கொழும்பில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து சூர்யகுமார் பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சூர்யகுமார் யாதவ் அளித்த பதில் பின்வருமாறு:-

    24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள். நன்றாக சாப்பிடுங்கள். 24 மணி நேரம் காத்திருங்கள்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    மேலும், நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்றார்.

    • உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.
    • ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.

    இஷான் கிஷன் 24 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர் ), ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். எராஸ்மஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.

    நம்பியா தரப்பில் லோரன் ஸ்டீன்காம்ப் அதிகபட்சமாக 20 பந்தில் 29 ரன் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் டும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பும்ரா தலா 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் சாம்சன், இஷான் கிஷன் தொடங்கிய விதம் இது ஒரு சுலபமான ஆடுகளம் என்பதை போல் உங்களுக்கு காட்டி இருக்கலாம்.

    ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.

    தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர்கள் ஆடிய விதத்தை பாராட்ட வேண்டும்.

    நமீபியா பந்துவீச்சாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார்கள். 6 முதல் 7 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் 240 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தோம்.

    பும்ரா 4 ஓவர்கள் முழுமையாக வீசியது இந்திய அணிக்கு நல்ல விஷயம். அடுத்த போட்டியிலும் அவர் கண்டிப்பாக விளையாடுவார். வருண் சக்கரவர்த்தி, அக் ஷர் பட்டேல் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள். இந்த இணையை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது நெருக்கடியாகதான் இருக்கும்.

    ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் எந்த நிலையிலும் பந்து வீசக் கூடியவர். வீரர்களின் கூட்டு முயற்சியை பாராட்டுகிறேன்.

    இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது. சிறு தடுமாற்றத்துடன் தான் இந்த தொடரை தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய பாதையில் சரியாக செல்கிறோம் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 15-ந்தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது.

    • T20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு.

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கஅணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.

    போட்டிக்கு பிறகு பேசிய சிராஜ், "சூர்யா எனக்கு கால் செய்து உடனே அணியில் சேருங்கள் என்றார்.. விளையாடாதீர்கள் என்றேன். அவர் கிண்டல் செய்கிறார் என நினைத்தேன். இந்தியாவில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் விளையாடுவது என் கனவு. அது எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய அமெரிக்கா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.

    மும்பையில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.

    அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சூர்யகுமாருக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியாவில் டி20 போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் நேற்று முறியடித்தார்.

    இவர் மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    • டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பையில் இன்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. முதலில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.

    அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சஞ்சய்கிருஷ்ணமூர்த்தி 37 ரன்னும், மிலிந்த் குமார் 34 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஷுபம் ரஞ்சனே 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு தலைசிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்.
    • இருவரும் ஆடும் லெவனில் இடம் பெறுவார்களா? என்பது சந்தேகம்தான்.

    டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நாளை முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக இந்திய அணி தங்களை தயார்படுத்தியது.

    பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிறது. நாளை டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    சிறந்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது கூடுதல் நன்மை. அதேவேளையில், எந்தவொரு எதிரணியை எதிர்த்து நாம் விளையாட இருக்கிறோம். அதற்கான காம்பினேசனை பார்க்க வேண்டும்.

    நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடுவது அவசியம் என்றால், அவர்கள் இருவரும் அணியில் விளையாடுவார்கள்.

    ஆனால், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இருவரைக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் யாரை தேர்வு செய்வது என்பதில் தலைவலி ஏற்படும்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில அக்சர் படேல் ஆல்-ரவுண்டர் ஆவார். இதனால் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோரில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை.
    • பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது

    2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் விளையாட பாதுகாப்பு காரணங்களால் மறுப்பு தெரிவித்த வங்கதேச அணிக்கு ஆதரவாகவும், அந்த அணியை நீக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு எதிராகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இது வாரியத்தின் முடிவு என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும்,அரசின் உத்தரவை ஏற்போம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

    "பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. அவர்கள்தான் கூறினார்கள். ஐசிசி அட்டவணையை உருவாக்கியது. நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். நாங்கள் கொழும்பிவிற்கு செல்வதற்காக பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. டெல்லிக்குப் பிறகு நாங்கள் கொழும்பு செல்கிறோம்." என தெரிவித்துள்ளார். 

    பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்குமா என தெரியவில்லை. ஆனால் மற்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.

    இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சூர்யகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் (1822) 3000* ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை படைத்தார். 

    • முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் சஞ்சுவை இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் வழி விடுங்க.. சேட்டான தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் யாதவ் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று செல்வார். இதனை சஞ்சு சாம்சன் சிரித்தப்படியே நடந்து செல்வார்.

    கேரளா சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×