என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsNZ"

    • இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.

    முன்னதாக ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.

    இந்நிலையில் நான் வியந்து பார்க்கும் ஒருவராக விராட் கோலி இருப்பார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் கையொப்பமிட்ட ஜெர்சி நிச்சயமாக எனது அலுவலகத்தில் சட்டமிட்டு வைக்கப்படும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர் ஒவ்வொரு நாளும் விளையாடும் விதத்திற்காக விராட் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாக நான் வியந்து பார்க்கும் ஒருவராக அவர் நிச்சயமாக இருக்கிறார் என அவர் கூறினார்.

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சூர்யகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் 30 பந்துகளில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் (1822) 3000* ரன்களை கடந்து சூர்யகுமார் சாதனை படைத்தார். 

    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. 

    • சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்
    • சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் அபிஷேக் சர்மா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூரியகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். 103 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 

    • 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. .
    • சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
    • சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்த போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
    • சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன்மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள். பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.

    • ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரவி பிஷ்னோய் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். எனவே, இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவது முக்கியமானதாகும்.

    கடந்த போட்டியில் சிறுகாயம் (Niggle) காரணமாக இஷான் கிஷன் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியிால் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோதுல் முதல் போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தெரிகிறது.

    அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் இருவரும் அணியில் இணைந்தால் ரவி பிஷ்னோய் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால், திலக் வர்மா அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

    • முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் சஞ்சுவை இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் வழி விடுங்க.. சேட்டான தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் யாதவ் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று செல்வார். இதனை சஞ்சு சாம்சன் சிரித்தப்படியே நடந்து செல்வார்.

    கேரளா சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • 23 பந்துகளில் 65 ரன்கள் அடித்திருந்த நிலையில் சிவம் துபே ரன் அவுட்டனார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    இப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சிவம் துபே 3வது இடத்திற்கு முன்னேறினார். 

    • முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது
    • 4 ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    முதல் 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    தோல்விக்கு பின்பு பேசிய கேப்டன் சூர்யகுமார், "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வேண்டுமென்றேதான் 6 பேட்டர்களுடன் நாங்கள் விளையாடினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்" என்று தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
    • அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமாயர் யாதவ் வந்த வேகத்தில் 8 ரன்னில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    18.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.

    ×