என் மலர்
நீங்கள் தேடியது "INDvsNZ"
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.
- 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 300 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் அதிக முறை 300+ ரன்களை சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்திய அணி இதுவரை 20 முறை 300+ ரன்களை சேசிங் செய்து யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (15 முறை) அணி உள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (14), பாகிஸ்தான் (12), இலங்கை (11), நியூசிலாந்து (11) ஆகிய அணிகள் உள்ளன.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதன்முறையாக இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான ராஜ்கோட்டில் அவர் அணியுடன் இணைவார்.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக டி20 அணியில் இடம் பெற்றிருந்த இடதுகை பேட்டரான திலக் வர்மா காயம் காரணமாக முதல் 3 டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் காயமடைவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி
- நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
- கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.
இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.
ஆனால் ஒருமுனையில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரைசதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்தது. சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க தவறினார்.
- இருவரும் 60 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.
இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
- இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மேலும் பயிற்சி முடிந்த பிறகு சிறுவர்களுடன் சீனியர் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக அதில் ஒரு சிறுவன் சிறுவயது விராட் கோலி போல் இருப்பதால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
- ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணி முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான அணி சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒருநாள் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்த மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உடற் தகுதிச் சான்றை இன்னும் ஹர்திக் பாண்ட்யா பெறாததால், அவரை நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் டி20 உலக கோப்பை அணியிலும் அவர் உள்ளதால் வேலைப் பளு அதிகரித்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
- ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம்:-
சுப்மன் கில் (C), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் , நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மூன்று ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.






