என் மலர்
நீங்கள் தேடியது "INDvsNZ"
- 7 விக்கெட்டுக்கு களம் இறங்கி விராட் கோலியுடன் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
- 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.
மறுமுனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேமிசன், கிளார்க் என யார் என்று பார்க்காமல் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. 44-வது ஓவரை பால்க்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவரின் முதல் அரைசதம் ஆகும். இதில் தலா 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடங்கும். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 37 பந்தில் 61 ரன்கள் தேவைப்பட்டது.
- விராட் கோலியின் 54-வது ஒருநாள் சதம் இதுவாகும்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.
- டேரில் மிட்செல் இந்த தொடரில் 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் சதம் விளாசினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார்.
இருவரின் சதத்தால் நியூசிலாந்து 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பிலிப்ஸ் 88 பந்தில் 106 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங் ப்தில் ஆட்டமிழந்தார்.
- முதல் போட்டியில் 84 ரன்கள் அடித்திருந்தார்.
- 2-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் விளாசியிருந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இநத் ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. என்றாலும் ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தார். வில் யங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டேரில் மிட்செல் அடிக்க வேண்டிய பந்த தவறாமல் அடித்து பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விராட்டினார். அவர் 56 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
டேரில் மிட்செல் முதல் போட்டியில் 71 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் அடித்திருந்தார். 2-வது போட்டியில் 117 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 131 ரன்கள் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.
தற்போது அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 3 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜடேஜா முதல் போட்டியில் 44 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
- 2-வது போட்டியில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் முதல் இரண்டு போட்டிகள் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் ஜடேஜாவின் ஃபார்ம் கவலை அளிக்கவில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-
ஜடேஜா ஃபார்ம் குறித்து இந்திய அணியில் எந்த ஒரு கவலையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு விக்கெட் வீழ்த்துவதுதான் விசயம். அவர் ஒரு விக்கெட் வீழ்த்திவிட்டால், பின்னர் அவரை வேறொரு வீரராக பார்ப்பீர்கள்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.
ஜடேஜா சமீப காலமாக 2900 ரன்கள் விட்டுக்கொடுத்து 32 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டியில் 209 போட்டிகளில் 232 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
- கடைசி போட்டிக்காக இந்திய அணி இந்தூர் சென்றுள்ளார்.
- உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார்.
கடந்த 14-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இதற்காக இந்தூர் சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை இந்திய அணி வீரரான விராட் கோலி உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். நாளை வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
- முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
- நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.
பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். வில் யங் 98 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். டேரில் மிட்செல் அபாரமாக விளையாடி 96 பந்தில் சதம் விளாசினார்.
இருவரும் நிலைத்து விளையாட நியூசிலாந்து அணி வெற்றி நோக்கி பயணித்தது. இருவரும் ஆட்டமிழக்காமலும், அதிரடியை நிறுத்தாமலும் விளையாடியதால் நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும், கிளென் மிட்செல் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
- நியூசிலாந்து தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
- டேரில் மிட்செல் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.
பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
இருவரும் அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 31 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றி்கு 19 ஓவரில் 128 ரன்கள்தான் தேவை. இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தாவிடில், நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
- நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
- ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம்.
வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ஹர்ஷித் ராணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன்.
ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம். அதனால் தான் வலைபயிற்சியில் என்னால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதில் நான் கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது.
விராட் கோலி களத்தில் நின்றது வரை 5-6 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்து விடும் போல் தோன்றியது. ஆனால் அவர் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரிக்கெட்டில் எதையும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும் மாறும்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் புதிய பந்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கு தடுமாறுகிறார்களா? என கேட்கிறீர்கள். நீங்கள் என்ன கிரிக்கெட்டை பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் கூட முகமது சிராஜ் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினார்.
புதிய பந்தில் நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினோம். கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், மிடில் வரிசையில் விக்கெட்டுகளை சாய்ப்போம். அதைத் தான் நாங்கள் செய்தோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை.
இவ்வாறு ஹர்ஷித் ராணா கூறினார்.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.
- 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 300 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் அதிக முறை 300+ ரன்களை சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்திய அணி இதுவரை 20 முறை 300+ ரன்களை சேசிங் செய்து யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (15 முறை) அணி உள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (14), பாகிஸ்தான் (12), இலங்கை (11), நியூசிலாந்து (11) ஆகிய அணிகள் உள்ளன.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதன்முறையாக இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான ராஜ்கோட்டில் அவர் அணியுடன் இணைவார்.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக டி20 அணியில் இடம் பெற்றிருந்த இடதுகை பேட்டரான திலக் வர்மா காயம் காரணமாக முதல் 3 டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் காயமடைவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.






