என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Axar patel"

    • ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரவி பிஷ்னோய் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். எனவே, இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவது முக்கியமானதாகும்.

    கடந்த போட்டியில் சிறுகாயம் (Niggle) காரணமாக இஷான் கிஷன் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியிால் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோதுல் முதல் போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தெரிகிறது.

    அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் இருவரும் அணியில் இணைந்தால் ரவி பிஷ்னோய் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால், திலக் வர்மா அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

    • முதலில் விளையாடிய குஜராத் அணி 318 ரன்கள் குவித்தது.
    • அக்சர் படேல் 111 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.

    விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் குஜராத்- ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.

    ஒரு கட்டத்தில் அந்த அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் விஷால் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 70 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 111 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 319 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. தொடக்க வீரர் ஞானேஷ்வர் 125 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோனி பிரசாத் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.

    இருந்தபோதிலும், ஆந்திராவால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆந்திரா 311 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
    • அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.

    இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார்.  தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது.
    • சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்தப் போட்டியையொட்டி இந்திய வீரர் திலக் வர்மா பேட்டி அளித்தார். அப்போது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-

    அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவரிசையிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்கள். நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி ஆட தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும் போது அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு முன்னதாக களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆட்டத்தில் அக்ஷர் படேல் 3-வது வீரராக ஆடியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்தே திலக் வர்மா இந்த விளக்கத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
    • ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.

    தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

    இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது:-

    துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

    என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் நேற்று ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி நடந்தது.
    • இதில் கொல்கத்தா அணி, டெல்லி அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

    நாங்கள் பவர் பிளேவில் சரியாக செயல்படவில்லை. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்து விட்டோம் என நினைக்கின்றேன்.

    நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் சரியான ஷாட்களை ஆடவில்லை. சிறிய முறையில் அவுட்டாகி விட்டோம். பவர் பிளேக்கு பிறகு கொல்கத்தா அணியை நாங்கள் நல்ல முறையில் ரன் அடிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம்.

    நாங்கள் இன்று சரியாக செயல்படவில்லை. குறைந்தபட்சம் ஒன்று அல்லது மூன்று வீரர்கள் நன்றாக அடித்து இருந்தால் வெற்றியைப் பெற்று இருக்கலாம். ஆனால் இலக்கிற்கு அருகே வந்து தான் தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

    களத்தில் பொறுப்பான ஆட்டத்தை ஒவ்வொரு வீரர்களும் வெளிப்படுத்த வேண்டும். விப்ராஜ் ரன் குவித்து வந்தபோது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கடைசி வரை ஆஸ்டோஸ் சர்மா நின்று இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

    தற்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி இருக்கின்றது. இதில் மீண்டு வந்து விடுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • 205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்.
    • எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

    மும்பைக்கு சாதகமாக தான் இந்தப் போட்டி சென்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு கட்டுப்பாட்டில் இருந்தோம். நடு ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தும், சில தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்து ஒரு ஓவர் எஞ்சியிருக்கும் நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்று இருக்கிறோம்.

    இந்தப் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அனைத்துப் போட்டிகளிலும் உங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்து உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடாது.

    205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். பனிப்பொழிவும் இருக்கும். ஒருவேளை நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.

    எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குல்தீப் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனக்கு எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் குல்தீப்பிடம் பந்தை கொடுத்தால் போதும்.

    இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த போட்டி குறித்து மறந்துவிட்டு அடுத்த போட்டி நோக்கிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    • ஒரு கேப்டனாக சரியான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை.
    • ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    2010ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக சேப்பாக்கம் மைதான்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    சிஎஸ்கே அணிக்கெதிரான வெற்றி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:-

    மூன்று போட்டிகளில் மூன்று வெற்றி என்பது எளிதாக கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பங்களிப்பை கொடுத்தார்கள். டீம் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக ஹாட்ரிக் வெற்றி சந்தோசம் அளிக்கிறது.

    எனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று அதிகமாக பந்து வீசவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சில சிறந்த கேட்ச்கள் இருக்கும். சில கேட்ச்கள் தவறவிடப்படும். ஒரு கேப்டனாக தரமான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை. ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    இவ்வாறு அக்சர் படேல் தெரிவித்தார்.

    • கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சுழற்பந்து வீச்சில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.

    ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    ஆல்-ரவுண்டர்கள்

    அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.

    பந்து வீச்சாளர்கள்

    மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சு

    மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.

    ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.

    வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
    • கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த தொடரில் சென்னை, மும்பை, ஐதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் எந்த மாற்றமும் இல்லை. மீதியுள்ள கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், ஷ்ரேயாஸ், டெல்லி ஆகிய 5 அணிகளும் புதிய கேப்டன்களுடன் விளையாட உள்ளனர்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்களில் மாற்றம் இல்லை.

    மற்ற 5 அணிகளில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், டெல்லி அணிக்கு அக்ஷர் படேலும் புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    9 அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14-ந் தேதி தான் கேப்டனை அறிவித்தது. டெல்லி அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது.

    இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். இதனால் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அறிவித்தது. துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டு பிளெசிஸ் டெல்லி அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.

    இந்த சூழ்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கேப்பிட்டல்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என டெல்லி அணியின் புதிய கேப்டன் அக்ஷர் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம். என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்.

    எங்கள் பயிற்சியாளர்களும் அணி ஊழியர்களும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை ஒன்றிணைப்பதன் மூலம் மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன், கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனை எதிர்நோக்குவதால், அணியில் சேர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    என்று அக்ஷர் படேல் கூறினார்.

    • அக்‌ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • ரூ.18 கோடிக்கு அக்‌ஷர் படேல் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டுமே இன்னும் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கம்மின்ஸ்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன்கில்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய 5 அணிகளின் கேப்டன்கள் மாற்றம் இல்லை.

    நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும் (கடந்த சீசன் ஷ்ரேயாஸ் ஐயர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும் (டுபெலிஸ்), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப்பண்ட்டும் (கே.எல்.ராகுல்), பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (ஷிகர் தவான்) புதிய கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கேப்டனுக்கான தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.

    இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கேப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×