என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ishan Kishan"

    • இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • டி20 பந்து வீச்சு தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏ குரூப்-ல் இடம் பெற்ற இந்திய அணி, 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

    3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 2 போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இந்த நிலையில் ஐசிசி ஆடவருக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன் 22 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர் பதும் நிசங்கா 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 1 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 பந்து வீச்சு தரவரிசையை பொறுத்தவரை ஜிம்பாப்வே அணி வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் பும்ரா 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்திற்கும் அக்சர் படேல் 4 இடங்கள் முன்னேறி 14-வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். இதை தவிர பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ஆல் ரவுண்டர்களில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஷிவம் துபே 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • இஷான் கிஷன் ஸ்கோரில் 10 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
    • இஷான் கிஷன் அவுட்டாகும்போது இந்தியா 8.4 ஓவரில் 88 ரன்கள் குவித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    7-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது. 8-வது ஓவரை சதாப் கான் வீசினார். இந்த இஷான் கிஷன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் இந்தியாவுக்கு இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இந்தியா 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தயிா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    • இந்தியா பவர் பிளேயில் 52 ரன்கள் எடுத்தது.
    • 7-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    • 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.

    இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். தற்போது வரை 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 104 ரன்கள் அடித்துள்ளது.

    • இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.
    • அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின்பு பேசிய இஷான் கிஷன், "சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம்; நீங்கள் ஒரு சாதனையை நெருங்கியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. விளையாடும்போது சிக்சருக்கு அடிக்கக்கூடிய பந்தாக இருந்தால் அடித்துவிட வேண்டும், அப்போது சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.

    • 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.

    இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்
    • சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் அபிஷேக் சர்மா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூரியகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். 103 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 

    • ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரவி பிஷ்னோய் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். எனவே, இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவது முக்கியமானதாகும்.

    கடந்த போட்டியில் சிறுகாயம் (Niggle) காரணமாக இஷான் கிஷன் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியிால் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோதுல் முதல் போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தெரிகிறது.

    அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் இருவரும் அணியில் இணைந்தால் ரவி பிஷ்னோய் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால், திலக் வர்மா அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

    • இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன.
    • சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.

    இந்தியா- நியூசிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இவர்கள் 250-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுகிறார்கள். இதனால் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அமைதியாக இருந்து திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் உள்ளது என நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜேக்கப் ஓரம் கூறியதாவது:-

    மைதானத்தில் எல்லா திசைக்கும் பந்துகள் பறந்து கொண்டிருந்தால், எங்களுக்கு தொடர்ந்து அமைதியாக இருந்து, திட்டங்களை நியாபகப்படுத்தி, அவற்றை வெளிப்படுத்துவதில் மைதானத்தில் சற்று குழப்பம் நிலவியது. ஆனால், நான் மீண்டும் சொல்கிறேன், இது எல்லாம் கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி.

    இதேபோல்தான் 1900 முதல் 2000 வரை ஜெயசூர்யா அதிரடியாக விளையாடினார். இது விளையாட்டின் இயல்பான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

    நீங்கள் பார்ப்பது என்னவென்றால், பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது. பந்துவீச்சுப் பயிற்சியாளராக அதுவே இப்போது எங்களுக்குள்ள சவால். மேலும் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

    ஆனால் விஷயம் என்னவென்றால், அபிஷேக் சர்மா மட்டும் தனியாக இல்லை. சூர்யகுமார் சிறப்பாக விளையாடியுள்ளார். இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். இந்திய பேட்டிங் வரிசை முழுவதும் சவால்கள் நிறைந்ததாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள மூன்று பேரையும் சாய்ப்பது எளிதாக காரியம் அல்ல.

    இவ்வாறு ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியில் எளிதில் வென்றது.

    ராய்ப்பூர்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. மிட்செல் சாண்ட்னர் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்னும், ஷிவம் துபே 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
    • ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.

    இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.

    எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:

    32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)

    33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)

    35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)

    36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)

    40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)

    41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)

    42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)

    முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    32 பந்துகள்: சகிபுல் கனி

    33 பந்துகள்: இஷான் கிஷன்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    ×