என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே கோப்பை"

    • இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகல்.
    • எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று இமாசலபிரதேசத்தையும், நாளை மறுநாள் பஞ்சாப்பையும் சந்திக்கிறது.

    இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகி இருப்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

    கடந்த அக்டோபர் 25-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை, விஜய் ஹசாரே போட்டியில் ஆடி உடல் தகுதியை நிரூபிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் உறுதியாகும்.

    • விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.
    • தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மத்தியப் பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி, போட்டியின் தொடக்கத்தில் வலைப் பயிற்சியின் போது அவர் தாக்கப்பட்ட அதே இடமாகும்.

    இந்த காயம் குணமடைந்த ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தமிழ்நாட்டின் மீதமுள்ள ரஞ்சி டிராபி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள்.
    • விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

    விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மும்பை அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் - முஷீர் கான் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.

    இதில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள்.

    குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

    இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம். நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும்.

    களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம்.

    என்று சர்பராஸ் கூறினார்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
    • கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.

    கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.

    இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.

    445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.

    இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுச்சேரி- ஜார்கண்ட் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் ஜார்கண்ட் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் (ஏ பிரிவு) நடந்த புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 7 விக்கெட்டுக்கு 368 ரன்கள் குவித்தது.

    கேப்டன் குமார் குஷாக்ரா 105 ரன்களும், அனுகுல் ராய் 98 ரன்களும் எடுத்தனர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 41.4 ஓவர்களில் 235 ரன்னில் அடங்கி தோற்றது.

    முன்னதாக புதுச்சேரி கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 29 வயதான அமன் கான் 10 ஓவர்களில் 123 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் (சர்வதேச மற்றும் உள்ளுர் ஒருநாள் போட்டிகளை சேர்த்து) ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது.

    இதற்கு முன்பு இதே தொடரில் பீகாருக்கு எதிரான ஆட்டத்தில் அருணாசலபிரதேச பவுலர் மிபோம் மோசு 116 ரன்களை வழங்கியதே மோசமான பவுலிங் சாதனையாக இருந்தது.

    • விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்
    • 3-வது போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடவில்லை.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் விளையாடுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போட்டிகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்த தொடரில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் விளையாடிய அவர் இன்று நடக்கும் 3-வது போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடவில்லை.

    இந்நிலையில் விராட் கோலி அடுத்த போட்டியில் எப்போது விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 6-ம் தேதி ஆலூரில் நடைபெறும் ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த தொடரில் முதல் 2 போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது.
    • அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

    சென்னை:

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் எடுத்தார். மேலும் ஆயுஷ் லோஹருகா, சகிபுல் கானி ஆகியோரும் சதம் அடித்தனர்.

    இந்த நிலையில் உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.

    சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இது அணிகளுக்கு இடையே சரியான போட்டி உருவாகும் வாய்ப்பை முழுமையாக நீக்குகிறது. வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

    ஆனால் நான் மீண்டும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சில அணிகளிடையே தரத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இது ஒருதலைப்பட்சமாக மாறி எந்தவித போட்டியும் இல்லாமல் போகிறது. இது ஒரு சிறந்த சூழ்நிலை அல்ல.

    வைபவ் சூர்யவன்ஷி என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்கிறார். ஆனால் அருணாச்சலப்பிர தேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    விராட் கோலி 101 பந்தில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த மும்பையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இது ரோகித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    மற்றொரு போட்டியில் டெல்லி- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 6 போட்டிகளில் விராட் கோலி 3 சதம் 3 அரைசதம் விளாசி செம பார்மில் உள்ளார். 

    • அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர்.
    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் பல சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    •அதன்படி அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா 28 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    •பீகார் அணியில் சூர்யவன்ஷி, ஆயுஷ் லோஹருகா, கானி ஆகியோர் செஞ்சுரி போட்டனர். விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    •சீனியர் பிரிவில் சூர்யவன்ஷி இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் 3 சதம் 20 ஓவர் போட்டியில் வந்தவை. 15 வயதுக்கு முன்பாக லிஸ்ட் ஏ மற்றும் 20 ஓவர் போட்டியில் சதத்தை ருசித்த ஒரே வீரர் சூர்யவன்ஷி தான்.

    •அருணாசலபிரதேச வேகப்பந்து வீச்சாளர் மிபோம் மோசு 9 ஓவர்களில் 116 ரன்களை வாரி வழங்கினார். அவர் 'லிஸ்ட் ஏ'-ல் அதிக ரன்களை அள்ளிகொடுத்த மோசமான பந்து வீச்சாளர் பட்டியலில் இணைந்தார். 2023-ம்ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் பேஸ் டி லீட் 115 ரன்களை வழங்கியதே முந்தைய மோசமான பந்து வீச்சாக இருந்தது

    விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் பீகார் வீரர்கள் சூர்யவன்ஷி 36 பந்திலும், சகிபுல் கானி 32 பந்திலும் சதம் விளாசிய நிலையில் அதற்கு சற்று முன்பாக ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் அடித்தார். ஆனால் அவரது சதத்துக்கு பலன் இல்லை.

    அமதாபாத்தில் நடந்த கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ('ஏ' பிரிவு) முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 9 விக்கெட்டுக்கு 412 ரன்கள் குவித்தது. 33 பந்தில் சதத்தை எட்டிய இஷான் கிஷன் 125 ரன்களில் (39 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரேயில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். தேவ்தத் படிக்கல் 147 ரன்கள் (118 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டினார்.

    விஜய் ஹசாரே தொடரில் நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
    • விராட் கோலி 101 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்நிலையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார். இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ரன்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    • மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 83 பந்து சதம் அடித்துள்ளார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.

    இந்நிலையில் சீக்கிம்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 61 பந்தில் சதம் விளாசிய மும்பை வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் இருவரும் அசத்தி வருகின்றனர்.

    • விஜய் ஹசாரே தொடரில் நடக்கும் லீக் போட்டி ஒன்றில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர்.
    • இதில் ஒடிசா வீரர் ஸ்வஸ்திக் இரட்டை சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இன்று நடக்கும் ஒரு லீக் போட்டியில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்வஸ்திக் சமல் 212, சாமந்த்ரே 100 ரன்கள் எடுத்தனர்.

    இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் விளாசி ஸ்வஸ்திக் சமல் சாதனை படைத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14-வது இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×