என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே கோப்பை"

    • விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

    விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது.

    இந்நிலையில் விராட் கோலியும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவரது மாநில அணியான டெல்லிக்கு விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ந் தேதி ஆந்திராவுக்கு எதிராகவும் 26-ந் தேதி குஜராத்துக்கு எதிராகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ரெயில்வே அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார்.

    இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேறவுள்ளன. இதில் மும்பை அணி குரூப் சி பிரிவிலும், டெல்லி அணி குரூப் டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்தார்.
    • சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் விளையாடிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்தார். 

    அசிம் காசி 37 ரன்னும், சத்யஜீத் பச்சாவ் 27 ரன்னும் அடித்தனர். நவ்ஷாத் ஷேக் 31 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.

    இதையடுத்து 249 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சவுராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். சிராக் ஜானி 30 ரன்கள் அடித்தார். இதையடுத்து 46.3 ஓவர் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதுடன் விஜய் ஹசாரே கோப்பையை 2வது முறையாக தட்டிச் சென்றது.

    • முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணிகள் மோதி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் சதம் விளாசி அசத்தினார்.

    இறுதியில் தமிழ்நாடு அணி 47 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 132 ரன்களும் முகமது அலி 76 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×