என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sai sudharsan"

    • சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
    • இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில், கழுத்துவலியால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமாகியுள்ளதால் அதை கவனத்தில் கொண்டு அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, 2-வது டெஸ்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக கொல்கத்தாவில் இந்திய வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். இதில் சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் ஆகியோர் ஒற்றைக்காலில் மட்டும் காலுறை (பேடு) கட்டிக் கொண்டு சுழற்பந்து வீச்சு யுக்தியை திறம்பட சமாளிப்பதற்கான பயிற்சி எடுத்தனர். இது கொஞ்சம் ஆபத்தான பழங்கால பயிற்சி முறையாகும். பந்து நேராக காலில் தாக்கினால் எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.

    இடக்கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் வலது காலில் காலுறை இன்றி வலை பயிற்சியில் ஈடுபட்டார். முன்னங்காலை எடுத்து வைத்து பந்தை தடுப்பதை காட்டிலும் பேட்டை அதிகமாக பயன்படுத்துவதற்கு இந்த பயிற்சி முறை வழிவகுக்கும். அத்துடன் கிரீசுக்கு வெளியே வந்து சுழற்பந்தை அடித்து ஆடுவதற்கும் ஊக்குவிக்கும். அவர்களின் வித்தியாசமான பயிற்சியை கம்பீர் உன்னிப்பாக கவனித்தார்.

    • சாய் சுதர்சன் எல்லைக் கோட்டின் அருகே தரையில் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
    • கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 இன்னிங்சில் 759 ரன்களைக் குவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இதற்கிடையே, டெல்லி டெஸ்ட்டின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது சாய் சுதர்சன் தனது பயிற்சி உடையில் எல்லைக் கோட்டிற்கு அருகே தரையில் அமர்ந்து மைதானத்தில் பந்து பொறுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில், சாய் சுதர்சன் பவுண்டரி லைனில் அமர்ந்திருந்தபோது ரசிகர் ஒருவர், குஜராத் டைட்டன்சை விட்டுவிட்டு சி.எஸ்.கே. அணிக்கு வாங்க என உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

    இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு இதே கோரிக்கையை விடுதது வருகின்றனர்.

    கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைக் குவித்து 'மிஸ்டர் கன்சிஸ்டன்ட்' என பெயர் பெற்றவர் சாய் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த வீரர் உள்ளூர் அணியான சிஎஸ்கேவில் விளையாட வேண்டும் என்பதே சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஸ்ட்ரோக் பிளேயர் என்பதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் அடங்கும். கடினமான 3ஆவது இடத்தில் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் காண்பிக்கவில்லை. இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியன் டென் டோஸ்கேட், 3ஆவது இடத்திற்கு போதுமான பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள் என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

    சாய் சுதர்சன் பற்றி ரியன் டென் டோஸ்கேட் கூறியதாவது:-

    சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஆதரவாக இருக்கிறார். கோச்சிங் ஸ்டாஃப் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். உறுதியளித்த அவருடைய திறமையான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என நாங்கள் உணர்கிறோம்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வாய்ப்பை பெறலாம். முதல் மூன்று அல்லது நான்கு இடத்தில் விளையாட மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். சுப்மன் கில் தற்போது 4ஆவது இடத்தில் விளையாடி வருகிறார். ஆகவே, சாய் சுதர்சன் இதை அறிந்திருப்பார்.

    அந்த மாதிரியான போட்டியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் ஒரு தொழிலாகத் தொடரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்ன மாதிரி, அவர் வெளியே சென்று நாம் நினைக்கும் அளவுக்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

    ஒரு இடத்திற்காக போராடுகிறீர்கள் என்பதை அவரால் மறைக்க முடியாது. உங்களுக்குத் தெரியும், கருண் நாயர் இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த இடத்திற்கு நிறைய நல்ல வீரர்கள் போராடுகிறார்கள். எனவே சாய் சுதர்சன் தன்னை நம்புவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து 3ஆவது இடம் அவருக்கு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு ரியன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.

    • கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா "ஏ"- ஆஸ்திரேலியா "ஏ" அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    அந்த அணியைச் சார்ந்த யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும், சாம் கோன்டாஸ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியா "ஏ" தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா "ஏ" முதல் இன்னி்ங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா "ஏ"வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.

    கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும், ஆயுஷ் படோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொதப்ப, சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ஏ 194 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 16 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
    • இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.

    இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.

    • முதல் டெஸ்டிற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சுப்மன் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 140 ரன்கள் எடுத்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    69ஆவது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சாய் சுதர்சன் 134 பந்தில் அரைசதம் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

    • பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை.
    • இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    • முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 5ஆவது நாள் பீல்டிங் செய்தபோது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

    முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின்போது பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் சரியாகிவிட்டால், ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
    • இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார்.

    லீட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சாய் சுதர்சனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய வீரரான ஹர்திக் பாண்ட்யா, " நீ இதற்கு தகுதியானவன், சாய். நன்றாக செல்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

    சாய் சுதர்சன் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.
    • கேஎல் ராகுல் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அவ்வபோது இருவரும் பவுண்டரிகளை பறக்க விட்டனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 41 ரன்கள் எடுத்த போது பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் தொடக்க முதலே பதட்டத்துடன் காணப்பட்ட அவர் டக் அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

    அவருக்காக 2 வீரர்களை லேக் சிலிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதே திசையில் ஸ்டோக்ஸ் பந்தை வீசினார். கிட்டதட்ட அந்த பால் வைடு போல சென்றது. அந்த பந்தை அடிக்க முற்பட்டு அவர் ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.

    • இங்கிலாந்து இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
    • இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.

    இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான்கள் அறிமுகமாகிய ஜூன் 20-ந் தேதியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி (ஜூன் 20-ந் தேதி 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்கள்.

    அதனை தொடர்ந்து விராட் கோலி ஜூன் 20-ந் தேதி 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். அந்த வரிசையில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் இதே நாளில் அறிமுகமாகியுள்ளார். இவரும் பல சாதனைகள் படைக்க ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
    • சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவம் உள்ள வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இளம் வீரர்கள் கொண்ட இந்த அணியில் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாக சாய் சுதர்ஷன் இருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தற்போது இந்திய அணியில் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். அவர் மிகவும் ஆக்ரோஷமாகவும் பயமற்றவராகவும் தெரிகிறார். இங்கிலாந்து சூழ்நிலைகளிலும் சர்ரே அணிக்காகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

    இதனால் நான்காம் இடத்தில் விராட் கோலியின் ரோலை ஏற்று இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக அவர் வருவார் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் ஒரு வீரரை நான் காண விரும்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதம், இளம் இந்திய டெஸ்ட் வீரர்களும் அதே வழியில் விளையாடுவதை நான் காண விரும்புகிறேன் என்று கூறினார்.

    ×