என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தனியாக போராடிய சாய் சுதர்சன்: 194 ரன்களில் சுருண்ட இந்தியா "ஏ"
- கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா "ஏ"- ஆஸ்திரேலியா "ஏ" அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அந்த அணியைச் சார்ந்த யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும், சாம் கோன்டாஸ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியா "ஏ" தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் இந்தியா "ஏ" முதல் இன்னி்ங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா "ஏ"வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.
கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும், ஆயுஷ் படோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொதப்ப, சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ஏ 194 ரன்னில் சுருண்டது.
பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 16 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.






