search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sourav Ganguly"

    • கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.
    • டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் கேரி கிர்ஸ்டன் என்ற சிறந்த பயிற்சியாளர் இருந்தார்.

    கிளப் ப்ரேரி ஃபயர் யூடியூப் சேனலில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் யுவராஜ் சிங் கலந்துரையாடினார். அப்போது தனக்கு பிடித்த இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்பதை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சவுரவ் கங்குலி, டோனி, ராகுல் டிராவிட், கும்ப்ளே ஆகியோரில் இருந்து தனக்குப் பிடித்த கேப்டனை யுவி தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சௌரவ் கங்குலி மற்றும் டோனியின் தலைமையின் கீழ் நான் அதிகம் விளையாடினேன். சவுரவ் இருந்த நேரத்தில் நான் அணிக்கு வந்தேன். கங்குலியின் கேப்டன்சியின் நல்ல விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் கங்குலி எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார்.

    கங்குலி எனக்கு, சேவாக் மற்றும் பஜ்ஜிக்கு ஆகியோருக்கு பல வாய்ப்புகளை வழங்கி தொடர்ந்து போட்டிகளில் களமிறக்கினார், இதனால் எங்களுக்கு நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்தது. மேலும் ஜாகீர் கானையும் அவர் ஊக்குவித்தார். கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.

    கங்குலிக்கு பிறகு ராகுல் சில காலம் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு டோனி கேப்டனானார்.

    டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் ஒரு சிறந்த பயிற்சியாளர் இருந்தார். கேரி கிர்ஸ்டன்.. அவர் அணியுடன் சேர்ந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்று எங்களை வீரராக ஆக்கினார். ஒரு அணியாக நாம் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் கேரி கிர்ஸ்டன்.

    டோனி ஒரு சிறந்த கேப்டன். சௌரவ் மிகவும் ஆக்ரோஷமானவர். அணியை முன்னோக்கி கொண்டு செல்வது பற்றி எப்போதும் சிந்தித்தவர். டோனியிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், அவரிடம் எப்போதும் 'பிளான் பி' இருந்தது. எனது கேரியரில் பல்வேறு வகையான கேப்டன்களுடன் விளையாடினோம்.

    பின்னர் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனானார். அணி சிக்கலில் இருந்தால், அவர் முன்னோக்கி வந்து பந்து வீசுவார். கும்ப்ளே இக்கட்டான சமயங்களில் முன்னுக்கு வரும் திறன் கொண்ட ஒரு சிறந்த கேப்டன்.

    எனக்கு அணியை கட்டமைத்த கேப்டன் சவுரவ் என்று நான் கூறுவேன். அவர் இளம் வீரர்களை முன்னோக்கி உருவாக்கி அவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றினார். நான் சௌரவை எனக்கு பிடித்த கேப்டன் என்று அழைப்பேன்.

    டி-20யின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில்:-

    ஒரு வீரராக, நான் டி20 கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மாவை தேர்வு செய்வேன். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தை மாற்ற முடியும். அவர் எனது முதல் தேர்வாக இருப்பார்.

    இவ்வாறு யுவாராஜ் கூறினார்.

    • ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார்.
    • 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்டை பார்க்கிறேன். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் திரும்பியதில் (வங்காளதேசத்துக்கு எதிரான தொடர் 19-ந்தேதி தொடக்கம்) ஆச்சரியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார். அதே சமயம் அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் (20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி) முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல போட்டிகளை தவற விட்டுள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அதற்குள் அவர் அணிக்கு திரும்ப வேண்டும். இந்த தொடரை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய அணிக்கு உண்மையான சவால் அளிக்கக்கூடிய போட்டியாக இது இருக்கும். அடுத்த ஆண்டு ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு தொடர்களும் நமக்கு முக்கியமானது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் இருக்கிறார்கள். ஷமியும் இணையும் போது பந்துவீச்சு மேலும் வலுவடையும். ஆகாஷ் தீப் திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசுகிறார். கவனிக்கத்தக்க ஒரு பவுலராக இருக்கிறார்.

    வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை இரு டெஸ்டிலும் வீழ்த்தியது எளிதான விஷயமல்ல. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் இந்திய அணி முற்றிலும் வித்தியாசமானது. உள்நாடோ, வெளிநாடோ எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. எனவே வங்காளசேதம் இந்திய மண்ணில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் தோற்கடித்த நம்பிக்கையுடன் வருவதால் இந்த முறை வங்காளதேசத்திடம் இருந்து கடினமான போட்டியை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    26 வயதான ரிஷப் பண்ட் இதுவரை 33 டெஸ்டுகளில் விளையாடி 5 சதம் உள்பட 2,271 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.
    • விராட் கோலிக்கு பேட்டிங் வரிசையில் 5-வது இடம் கொடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கியவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

    இவர் ஆல்-டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் சர்மா, கங்குலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல பும்ராவுக்கும் இடம் கொடுக்கவில்லை.

    அவருடன் (கம்பீர்) சேவாக் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். 3-வது இடம் ராகுல் டிராவிட்டுக்கும், 4-வது இடம் சச்சின் தெண்டுல்கருக்கும் கொடுத்துள்ளார். 5-வது இடத்தை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் 6வது இடத்தை பெற்றுள்ளார். கம்பீரின் அணியில் யுவராஜ் சிங் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆவார். பந்து வீச்சில் கும்ப்ளே, அஸ்வின், பதான், ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக சேர்த்துள்ளார்.

    கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா லெவன்:-

    1. சேவாக், 2, கம்பீர், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. விராட் கோலி, 6. யுவராஜ் சிங், 7. எம்.எஸ். டோனி (வி.கீப்பர்), 8. அனில் கும்ப்ளே, 9. அஸ்வின், 10. இர்பான் பதான், 11. ஜாகீர் கான்.

    கவுதம் கம்பீர் 2003-ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கெதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இநதிய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றவர் ஆவார்.

    • இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
    • இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிகிறது. இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதற்காக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

     


    எனினும், தற்போதைய தகவல்களின் படி ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க இருந்த பாத்திரத்தை வங்காள மொழி நடிகரான பிரசென்ஜித் சாட்டர்ஜீ நடிப்பார் என்று தெரிகிறது.

     


    பிரசென்ஜித் சாட்டர்ஜீ இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார். 61 வயதான சாட்டர்ஜி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கங்குலி படத்தில் நடிப்பது பற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆயூஷ்மான் குர்ரானா ஆகியோர் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். 

    • அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக். இன்னிங்ஸில் தான் எதிர்கொள்ளும் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதில் பெயர்பெற்றவர் சேவாக். உலகின் எந்த அணியை எதிர்கொண்டாலும், பேட்டிங்கில் இவர் சந்திக்கும் முதல் பந்து எப்போதும் பவுண்டரியை தொட்டு விடும்.

    இதனாலேயே பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இப்போதும் சேவாக் பற்றி பேசும் போது, அவரின் அதிரடி ஆட்டத்தை நிச்சயம் குறிப்பிடுவர். எதிரணி வீரர்கள் இவரை கண்டால் அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இங்கிலாந்தில் சேவாக் ஆடிய இன்னிங்ஸ் ஒன்றில் குறிப்பிட்ட ஓவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    அந்த வீடியோவில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி அது. நாங்கள் 320 அடிக்க வேண்டி இருந்தது. நான் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தேன். சேவாக் எனக்கு பின்னால் இருந்தபடி வசில் அடித்தார். நான் அவரிடம் கடுமையாக திட்டி, நாம் 320-க்கும் அதிக ரன்களை அடிக்க வேண்டியுள்ளது, உனக்கு இது ஜோக் ஆக இருக்கிறதா என கேட்டேன்.

     


    அவர் என்னிடம் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பிறகு, போட்டி தொடங்கி நாங்கள் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை துரத்தி இருந்தோம். ரோனி இரானி பந்து வீச ஆயத்தமானார். நான் சேவாக்-இடம் சென்று நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம். விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுமாறு கூறினேன்.

    அவரும் சரி என கூறிவிட்டு கிரீஸ்-க்கு சென்றார். ரோனி வீசிய முதல் பந்தை மிட் ஆஃப் மேல் அடித்தார் அது பவுண்டரியாக மாறியது. நான் அவரிடம் சென்று அருமையாக ஷாட் இந்த ஓவரில் நான்கு ரன்கள் வந்துவிட்டது ரன்களை மட்டும் ஸ்டிரைக் செய்தால் போதும் என்று சேவாக்-இடம் கூறினேன். அவர் அதற்கு சரி சரி... பிரச்சினை இல்லை என்று கூறி கிரீஸ்-க்கு சென்றார்.

    அடுத்த பந்தை சேவாக் மிட் ஆன் மீது விளாசினார். அந்த பந்தும் பவுண்டரியை தொட்டது. நான் மீண்டும் அவரிடம் சென்று அருமையான ஷாட் 8 ரன்கள் கிடைத்துவிட்டது. இப்பவும் கூட சிங்கில் எடுக்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் பிர்ச்சினை இல்லை, அப்படியே செய்யலாம் என கூறி அடுத்த பந்தை அடுக்க தரையில் உட்கார்ந்து ஸ்வீப் செய்தார். அந்த பந்து பின்புறம் பவுண்டரியை தொட்டது.

    இந்த முறை நான் அவரிடம் செல்லவில்லை. அவருக்கும் புரிந்துவிட்டது, அவர் என்னை பார்க்கவே இல்லை. அடுத்த பந்தை அவர் கவர்களின் மீது விளாசினார். அது சிக்சராக மாறியது. அந்த ஓவரின் ஐந்து பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிங்கில் எடுத்தார். அப்போது என்னை கடக்கும் போது, நான் சிங்கில் எடுத்துவிட்டேன் என்று கங்குலி கூறினார்.

    • விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

    2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

    "இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    • வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

    இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.

    இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    இந்திய பந்தய விழா, ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
    • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

    மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

    இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

    உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

    ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

    • இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு.
    • இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் இந்திய பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் விண்ணப்பித்து இருந்தால், காம்பீர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல் வாய்புகள் உண்டு. இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும். அபாரமான திறமை நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

     


    முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில், பத்து ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது.

    இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, "நமது அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்பது முழுமையான செயல்முறை. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு பற்றிய புரிதல், தரவரிசையில் வளர்ச்சி பெற்றுள்ள வீரர்களை அடையாளம் காண்பதில் சிறப்பான ஒருத்தரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார். 

    • டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம்.
    • பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பல விவாதங்களுக்கு பின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் அவரை உலகக் கோப்பையில் துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். அதற்கு அவருடைய கடைசி சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் தான் சாட்சியாகும். டி20 உலகக் கோப்பைக்காக நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பேட்டிங்கை தவிர்த்து பந்து வீச்சு துறையும் நன்றாக தெரிகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் அடிக்கடி 240 - 250 ரன்கள் அடிப்பதை பார்க்க முடிகிறது.

    அதற்கு காரணம் பேட்டிங் பிட்ச்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய மைதானங்கள். இம்பேக்ட் வீரர் விதிமுறையால் அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுவதால் புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. அங்கே அசத்துவதற்கு நீங்கள் மிகுந்த திறமையுடன் இருக்க வேண்டும். பும்ரா, அக்சர், குல்தீப் ஆகியோர் அதே சூழ்நிலைகளில் அசத்துகின்றனர்.

    இவ்வாறு கங்குலி கூறினார். 

    • என்னுடைய போன் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
    • பலருடைய போன் நம்பரும், என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும், அக்கவுண்ட்ஸும் அந்த போனில் தான் இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வீட்டிருருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தாகூர்புகூர் காவல் நிலையத்தில் கங்குலி புகார் அளித்துள்ளார். அதில் முக்கியமான டேட்டா இருப்பதால் கங்குலி அச்சமடைந்துள்ளார்.

    இது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது:-

    என்னுடைய போன் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த ஜனவரி 19-ம் தேதி காலை 11.30 மணிக்கு தான் போனை பார்த்தேன். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால், கவலை அடைந்தேன். ஏனென்றால், அதில், பலருடைய போன் நம்பரும், என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும், அக்கவுண்ட்ஸும் அந்த போனில் தான் இருக்கிறது. இதன் காரணமாக தனது போனை டிராக் செய்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு காவல் துறையிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து, காவல்துறையினர் கங்குலியின் போனை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 22 வயதான இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் (209) இரட்டை சதம் அடித்து இந்திய அணி கெளரவமான ஸ்கோர் வருவதற்கு உதவினார். மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இதே போல 2-வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தடுமாற்றமாக விளையாடிய போது 24 வயதான சுப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து (104) ரன்கள் குவித்து கடினமான இலக்கு வைப்பதற்கு உதவினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 2 வீரர்கள் சதமடித்த அரிதான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் 1996-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் 25 வயதுக்குள் சதமடித்திருந்தனர். 

    இந்நிலையில் சச்சின் -கங்குலி போல 25 வயதுக்குள் அசத்தியுள்ள கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த 2 இளம் வீரர்களை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 25 வயதிற்குட்பட்ட அந்த இருவரும் இக்கட்டான நேரத்தில் உயர்ந்து நின்றனர். இந்த இருவரும் அடுத்த தசாப்தம் மற்றும் அதையும் தாண்டி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    என்று சேவாக் கூறினார்.

    ×