என் மலர்
நீங்கள் தேடியது "boat accident"
- கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார்.
- வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீராங்கனை ஷகிதா ரசாவும் உயிரிழந்திருக்கலம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷகிதா ரசா 2012 மற்றும் 2013-ல் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019க்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
ஆனால், மகனுக்கு உடல்நலக்குறைவு, விவாகரத்து, வேலையின்மை என கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க முடியாத அளவுக்கு வருவாய் இல்லாமல் தவித்தார். மகனை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மகனை காப்பாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பதற்காகவும், சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய அவர் கடந்த ஆண்டு துருக்கி சென்றுள்ளார். குழந்தையை தன் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். விபத்து நடந்த அன்றும் பேசியிருக்கிறார்.
புகைப்படங்கள் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து ஷகிதா ராசாவின் உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவரது இறப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த படகு விபத்தில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
- கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியுள்ளது.
- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
ரோம்:
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.
- யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை
பாண்டா:
உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் மாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் 40 பேர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
- படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர், சிலர் நீந்தி கரையேறினர்.
- முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர்.
பாண்டா:
உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அதிக காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்ப்பட்டோர் பயணித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரையேறினர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புல்வா( 50), ராஜ்ராணி (45), கிஷான் (6 மாதம்) ஆகிய 3 பேர் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் 25 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த படகு பாண்டா மாவட்டம் மார்காவில் இருந்து பதேபூர் மாவட்டம் ஜராவ்லி காட் நோக்கி சென்ற நிலையில் கவிழ்ந்துள்ளது. படகு விபத்து தொடர்பாக மார்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், ராம்கேஷ் நிஷாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.
- பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிந்தது.
- படகில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.
ஹைதி நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது.
இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.
இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.
இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர் என ஹைதி நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.
எனினும் இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராயபுரம்:
சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரைக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது. படகில் இருந்த 11 பேரும் கடலில் தத்தளித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
11 மீனவர்களும் உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்தார். கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும். சேதம் அடைந்த படகிற்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. #Libya #BoatAccident