இந்தோனேசியாவில் சோகம்: படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் சோகம்: படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் படகு ஒன்று சென்றது. சுமார் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மீட்புக்குழு தலைவர் முகமது அராபா கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com