என் மலர்
நீங்கள் தேடியது "சவுரவ் கங்குலி"
- கவுதம் கம்பீர் தலைமயில் இந்திய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
- 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆடுகளம் மிகவும் மோசமான அமைக்கப்பட்டதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. மேலும், இவ்வாறுதான் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்ற கம்பீர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருந்தே தண்ணீர் தெளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கம்பீர் ஆடுகளம் குறித்து குறை கூறவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கம்பீர் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தோல்வியடைந்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வேண்டுமா? என கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கங்குலி "தற்போதைய நிலையில் கவுதம் கம்பீரை நீக்குவதற்கான கேள்வி இல்லை. இங்கிலாந்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்தாவிலும் சிறப்பாக விளையாடும் என் முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
- இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது.
- ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
புதுடெல்லி:
ஆசியக் கோப்பை தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தனையும் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் கை குலுக்காமல் சென்றது குறித்து பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:
இந்திய அணியை அனைத்து நாட்களிலும் வீழ்த்தும் தரம் எந்த ஆசிய அணியிடமும் இல்லை. பாகிஸ்தான் நமக்கு பொருத்தமாக இல்லை என்பதை மரியாதையுடன் சொல்வேன். ஏனெனில் அந்த அணியில் தரம் தடுமாறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் விளையாடுகிறது. இந்திய அணி கிரிக்கெட்டில் வெகுதூரம் முன்னோக்கி இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் ஓரிரு நாட்களில் நம்மை தோற்கடிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான நாளில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம்.
நான் 15 ஓவருக்கு பின் போட்டியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. கடந்த 5 ஆண்டாக இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பு கொடுக்கிறோம். அது உடனடியாக உடைந்து ஒருதலைபட்சமாக முடிகிறது என தெரிவித்தார்.
- செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
- ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்' என தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்ட போது, 'அது பற்றி எனக்கு தெரியாது. அதனால் அது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்' என்றார்.
மேலும் கங்குலி கூறுகையில், 'ஐ.பி.எல். முடிந்த உடனே இந்திய அணியினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடினார்கள். இப்போது சில வாரங்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது. எனவே ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்' என்றார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, 'உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்' என்றார்.
- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படுபவர் சவுரவ் கங்குலி.
- 2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்தவர் கங்குலி.
கிரிக்கெட் ரசிகர்களால் "தாதா" என்று அன்பாக அழைக்கப்படுபவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. இவர் தனது 53-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய தேசிய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தற்போது அவர் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், விஸ்டன் இந்தியாவின் தலையங்கக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
கொல்கத்தாவில் பிறந்த கங்குலி, தனது மூத்த சகோதரர் சினேஹாசிஷ் மூலம் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ், சுனிஸ் கவாஸ்கர், சச்சின், தோனி என எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தாலும் இவர் ஒருவரின் பெயர் இடம்பெறாமல் அந்த பட்டியல் பூர்த்தி அடையாது. அவர்தான் 'கிரிக்கெட்டின் தாதா' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோஷமான கேப்டன் என்றழைக்கப்படும் கங்குலி இந்திய அணிக்கு புதிய பாய்ச்சலை கொண்டு வந்ததில் முக்கியமானவர்.
ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தரப் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து 1992-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
2000-ம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் பதவி விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2004 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது.
2000-ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையால் சிக்கித் தவித்த இந்திய அணியை மீட்டெடுத்து இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வ்ந்தார். இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கி திருப்பிய கங்குலி வெளிநாடுகளிலும் வெற்றி பெறக்கூடிய ஒரு வலிமையான அணியாக இந்தியாவை மாற்றினார்.
கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனியை அறிமுகப்படுத்தியவர் கங்குலி தான். தோனியின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்பளித்ததில் கங்குலிக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்வரிசையில் களமிறங்கிய தோனியை முன்வரிசையில் ஆட வைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றியவர் கங்குலி.
மேலும் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைப் போன்ற பல ஸ்டார் வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தி அவர்களையும், அணியையும் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் கங்குலி.
இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மைதானத்திலேயே சட்டையை கழற்றி ஆகரோஷமாக கொண்டாடினார்.
இதனையடுத்து 2002-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அப்போது கேப்டன் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் தனது சட்டையைக் கழற்றி கொண்டாடிய நிகழ்வு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
சிறந்த பேட்ஸ்மேன், பவுலராகவும் வலம் வந்த சவுரவ் கங்குலி வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன்களில் முக்கியமானவர். குறிப்பாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை இவரையே சேரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், கங்குலி கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சில காலம் பணியாற்றிய கங்குலி இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய கங்குலியின் ஆக்ரோஷமான பாணியும், தலைமைப் பண்பும், இளம் வீரர்களை ஊக்குவித்து, அணியை வலிமையாக்கியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் (9-வது இடம்), இதில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் (சச்சின் மற்றும் இன்சமாம் உல் ஹக்கிற்கு அடுத்து). அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள். டெஸ்ட் போட்டிகளில் 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 வெற்றிகளைப் பெற்றார்.
- 2-வது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
- ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
பிர்மிங்காம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய் சுதர்சன், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.
பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.
என்று கங்குலி கூறினார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல.
கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை (short ball) சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன்.
இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
- கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா ஆகியோர் படகு சாகசத்தில் ஈடுபட்டனர்.
- அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. அவரது மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஒரு படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா கங்குலி ஆகியோர் கடல் நீரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
- சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.
- படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் பூரி கடற்கரையில் நடந்த விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.
அவர்கள் பயணித்த வேகப் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இருப்பினும், அருகிலுள்ள உயிர்காப்பாளர்கள் உடனடியாக செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
சினேகாஷிஷ் கங்குலியும் அவரது மனைவி அர்பிதா பூரியும் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.
- ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தக் கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
துபாய்:
ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.
அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
- டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- லக்னோ அணியுடன் நடந்த போட்டியின் போது விராட் கோலி ஒவ்வொருவரிடமும் வாக்குவாதம் செய்தார்.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பெங்களூரு மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு ஒவ்வொரு விக்கெட் விழும் போது விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருக்கும் டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலியை கூட முறைத்துக் கொண்டார். கடைசியாக டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் கை கொடுக்காமல் சென்றனர். மேலும், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலி அன்பாலோ செய்தார். இதையடுத்து ஐபிஎல் தொடரின் 50-வது போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
एक्शन का रिएक्शन ऐसा होना चाहिए. यही लीजेंड की पहचान होती है. happy for Sourav Ganguly....#IPL2O23 #SouravGanguly #DelhiCapitals #ViratKohli pic.twitter.com/gf8KWsngLY
— Shivam शिवम (@shivamsport) May 6, 2023
பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால் தான் விராட் கோலி அமைதியை கடைபிடிக்கிறார். இல்லையென்றால், அவரது ஆக்ரோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவ்வளவு ஏன், லக்னோ அணியுடன் நடந்த போட்டியின் போது விராட் கோலி ஒவ்வொருவரிடமும் வாக்குவாதம் செய்த நிலையில் கடைசியாக கவுதம் காம்பீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவருக்கு போட்டியின் முழு சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அமைதியை கடைபிடித்த விராட் கோலி மற்றும் டெல்லியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி இருவரும் சமாதானமாக சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு 51 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைந்துள்ளது.
- இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
- சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை கங்குலிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்புக்கான கால அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில், கங்குலிக்கான பாதுகாப்பை இசட் பிரிவுக்கு உயர்த்த மேற்கு வங்காள அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில மூத்த அதிகாரி தெரிவித்தார். இசட் பிரிவு பாதுகாப்பின் படி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.
சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். வரும் 21-ம் தேதி கங்குலி கொல்கத்தா வருகை தருகிறார். அதன்பிறகு அவருக்கு தினமும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.






