என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netflix"

    • ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி.
    • பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது.

    புதுடெல்லி:

    ஹாலிவுட்டின் மிக பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்படும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய்.

    இந்நிலையில், வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுகிறோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

    இதனால், பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் சுமாா் 11,100 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம் வாா்னா் பிரதா்ஸை வாங்குவது கிட்டத்தட்ட உறுதியானது. சிஎன்என் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட ஸ்டுடியோக்கள் இனி பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    பாராமவுண்ட் நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள விலைக்கு வாா்னா் பிரதா்ஸை வாங்குவது லாபகரமாக இருக்காது. எங்கள் நிறுவனத்தின் நிதிநிலையைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம் என நெட்பிளிக்ஸ் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
    • கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் Made in Korea. இப்படத்தை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார்.

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுவயது முதல் கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென்கொரியா செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கு கிடைக்கும் நட்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு ஃபீல்குட் மூவியாக உருவாகி உள்ளது.

    சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படம் நேரடியாக மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.

    நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

    மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

     லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 'கூஸ்கோர் பண்டட்' ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேச காவல்துறை படக்குழுவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

    முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிராமண சமூகத்தை ஊழல்வாதிகளாகக் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    'பண்டட்' என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் புனைபெயர் மட்டுமே என்றும், எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை அடுத்து , நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

    • நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

    இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.

    நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

    மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனதிற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.   

    நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  

    இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துறந்தார் 'துரந்தர்'

    இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று (ஜனவரி 30) முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

    திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். 

    • நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் EKO வெளியாகியுள்ளது.
    • EKO படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

    Eko' (எக்கோ) என்ற மலையாள மர்ம த்ரில்லர் திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பிற மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.

    சந்தீப் பிரதீப், வினீத், நரேன் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், மர்மம் மற்றும் திகில் நிறைந்த ஒரு கதைக்களத்தைக் கொண்டது. குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகள் எதிர்பார்ப்பவர்களைக் கவரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், EKO படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "EKO என்ற மலையாளப் படம் ஒரு மாஸ்டர் பீஸ். எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.

    • 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி, டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது. அடுத்ததாக 2 புதிய சீசன்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். கடந்த 2023 வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் படத்திற்காக சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வாங்கியது அவரது நடிப்புத்திறனுக்கு சான்று.

    இதற்கிடையே பீக்கி பிளைண்டர்ஸ் தொடரை படமாக தயாரிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. படத்திலும் சிலியன் மர்ஃபி -யே டாமி ஷெல்பியாக நடிக்கிறார். முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் இந்த படத்திற்கு "தி இம்மோர்டல் மேன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் "தி இம்மோர்டல் மேன்" திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

     

    • ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
    • வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.

    உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் நெட்பிளிக்ஸ், பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. 

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், HBO MAX ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது. இதனால் இவை இனி நெட்பிளிக்ஸ் தளத்தில் கணக்கிடைக்க உள்ளது.

    முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் பல நிறுவனங்கள் வாங்க போட்டியிட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் வெற்றிகரமாக நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது. 

    • அதிக சந்தை மதிப்பை கொண்ட தளமாக இந்தியா இருக்கிறது.
    • நெட்பிளிக்ஸ் ஐதராபாத்தில் தனது புது அலுவலகத்தை திறந்துள்ளது.

    தென்னிந்திய திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குபதில் நல்ல கதையம்சம் கொண்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நெட்பிளிக்ஸ் நல்லவிலை கொடுத்து படத்தை வாங்குவதால் இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் படங்களை தவிர்க்கவும், உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.

    அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக இந்தியா இருந்தாலும் சந்தைப்போட்டி, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் குறைவாக வருவது (ARPU) போன்றவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை இரட்டிப்பு மூதலீட்டை போட்டு வாங்கும் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் உள்ளது.

    இருப்பினும் படங்களைவிட இணையத்தொடர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், செலவை குறைத்து தங்கள் சந்தை மதிப்பை கூட்ட இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. தற்போது ஐதராபாத்திலும் தனது அலுவலகத்தை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது.

    2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 2,3,4 சீசன்களும் பெரும் ஹிட் அடித்தன.

    தற்போது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது. இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்த தொடர் வெளியாகிறது.

    இந்நிலையில், அதே நாளில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் இந்த தொடர் தியேட்டர்களில் வெளியாகிறது. டிசம்பர் 31 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 2 தினங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சியாக இந்த தொடர் வெளியாகிறது. 350 தியேட்டர்களுக்கு மேல் இந்த தொடர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.

    உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.

    புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

    ×