என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "web series"

    • பல OTT பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
    • பல ஜானர்களில் வெளியான வெப் தொடர்கள் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, சோனி லிவ் போன்ற பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.

    கிரைம் திரில்லர், ரொமான்டிக் டிராமா, காமெடி, ஸ்போர்ட்ஸ் என பல ஜானர்களில் வெளியான தொடர்கள், சிறந்த நடிப்பு மற்றும் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.

    இந்த ரீவைண்டில், 2025இன் டாப் 10 தமிழ் ஓடிடி வெப் தொடர்களைப் பார்ப்போம். இவை ரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் புகழையும் பெற்றவை.

    இந்த லிஸ்டில் சூழல் 2, ஆபிஸ், ஓம் காளி ஜெய் காளி, மதுரை பையனும் சென்னை பொண்ணும், ஹார்ட் பீட், நடு சென்டர், வேடுவன், குற்றம் புரிந்தவன், போலீஸ் போலீஸ், குட் வைஃப் ஆகியவை அடங்கும்.

    இவை அனைத்தும் உணர்ச்சி, சஸ்பென்ஸ், ஹ்யூமர் கலந்து ரசிகர்களை ஈர்த்தன. வாருங்கள், ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்!


    1. சூழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 2:

    2022 ஆம் ஆண்டு வெளியான சூழல் வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

    அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த தொடர், மர்மமான ஊரில் நிகழும் கிரைம், உணர்ச்சி மோதல்களை விவரிக்கிறது. இப்படத்தின் கதை, ரகசியங்கள், சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். பார்த்திபன் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த தொடர் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.


    2. ஓம் காளி ஜெய் காளி:

    விமல், புகழ், கஞ்சா கருப்பு, பவானி ரெட்டி நடிப்பில், ஜெகநாத் இயக்கத்தில் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் வெளியானது.

    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த தொடர், ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    3. ஆபிஸ்:

    ஹாட்ஸ்டாரின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக ஆபிஸ் வெளியானது. குரு லக்ஷ்மன், கவிதா பாரதி, ஷிவா அரவிந்த் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். பிராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


    4. மதுரை பையனும் சென்னை பொண்ணும்:

    ஆஹாவில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்த தொடர், வேறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இருவரின் லவ் ஸ்டோரியை ஹார்ட்வார்மிங்காக சொல்கிறது.

    கன்னா ரவி, ஏஞ்சலின், குரேஷி நடிப்பில், விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.


    5. ஹார்ட் பீட் சீசன் 2:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 22ஆம் தேதி ஹார்ட் பீட் சீசன் 2 வெளியானது. தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், அமித் பார்கவ், யோகலக்ஷ்மி நடிப்பில், தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் உருவாக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.


    6. நடு சென்டர்:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர், ஸ்கூல் பாஸ்கெட்பால் டீம் உருவாக்கும் போராட்டத்தை சித்தரிக்கிறது. டீன் ஏஜ் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதைக்களம் ஓடிடியில் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.


    7. வேடுவன்:

    வேடுவன் வெப் தொடர் ஜீ5இல் வெளியானது. கண்ணா ரவி, ஜீவா ரவி, ரேகா நாயர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் வெப் தொடர் வெளியானது. கிரைம், சைக்காலஜிக்கல் தொடராக வெளியான வேடுவன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


    8. குற்றம் புரிந்தவன்:

    சோனி லிவ்வில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடர், சிறு ஊரில் சிறுமி காணாமல் போன பின்பு நடக்கும் ரகசியங்களை அவிழ்க்கும் கதையாகும். பசுபதி, விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டென்ஸ் நாரேடிவ், ட்விஸ்ட்கள், சஸ்பென்ஸ்ஃபுல், சைக்காலஜிக்கல் என கிரைம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைந்தது.


    9. போலீஸ் போலீஸ்:

    ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான போலீஸ் போலீஸ் வெப் தொடர், போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை , கிரைம், கரப்ஷன். இன்வெஸ்டிகேஷன், ஹை-ஸ்டேக்ஸ் ஆக்ஷன் தொடராக அமைந்தது. இத்தொடர் ஓடிடி பிரியர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.


    10. குட் வைஃப்:

    பிரியாமணி நடிப்பில் வெளியான வெப் தொடர் 'குட் வைஃப்'. திரில்லர் கோர்ட் டிராமா கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    முடிவுரை:

    இந்த ஆண்டு, தமிழ் வெப் தொடர்களில் கிரைம் திரில்லர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ரொமான்ஸ், காமெடி, ஸ்போர்ட்ஸ் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தன. 2025 தமிழ் ஓடிடி உலகின் பொன்னான ஆண்டு. அடுத்த ஆண்டு என்ன கொண்டு வரும்? காத்திருப்போம்!

    • சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.
    • 'Way Back Love' 2 வெப் தொடர் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

    2025 ஆம் ஆண்டு கொரிய சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக அமைந்தது. இந்தாண்டு வெளியான சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த தொடர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


    1. When Life Gives You Tangerines (Netflix)

    நெட்ப்ளிக்சில் வெளியான When Life Gives You Tangerines வெப் தொடர் இந்த ஆண்டின் டாப் ஸ்பாட்டை பிடித்தது. 1960களில் இருந்து இன்று வரை நடக்கும் காலகட்டங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

    ஜெஜு தீவில் ஏழ்மையான குழந்தையாக வளரும் Ae-sun-ன் போராட்டங்களையும், அவரது குழந்தைப் பருவ நண்பரும் கணவருமான Gwan-sik உள்ளிட்ட சாதாரண மனிதர்களின் வாழ்வையும் அழகாக நமக்கு கூறியது. இந்த வெப் தொடரின் காதல் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தன.

    நமது முந்தைய தலைமுறைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லல் ரசிகர்களை உருக வைத்தது. இதன்மூலம் ஆண்டின் சிறந்த டிவி சீரிஸ் என்ற புகழ் பெற்றது!


    2. Way Back Love (Viki)

    இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தை, Kim Min-ha மற்றும் Gong Myung-ன் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளியான Way Back Love வெப் தொடர் பிடித்துள்ளது.

    இந்த வெப் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த முதல் காதலன் Kim Ram-woo-வின் நினைவில் தவிக்கும் Jeong Hee-wan-ன் கதையை விவரிக்கிறது.

    வாழ்க்கை மீதான விருப்பத்தை இழந்த 24 வயதுப் பெண், சமூகத்திலிருந்து விலகி வாழ்கிறாள். அவள் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவளுடைய பால்யவயது நண்பனும் முதல் காதலனுமான ராம் வூ அவளுக்கென்று ஒரு பக்கெட் லிஸ்ட் தயார் செய்து அவளை மகிழ்விப்பதே இந்த வெப் தொடராகும். ரசிகர்களை கண்கலங்க வாய்த்த இந்த வெப் தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்தது.


    3. Squid Game Season 3 (Netflix)

    இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில உலகப் புகழ் பெற்ற Squid Game-ன் இறுதி சீசன் இடம்பிடித்துள்ளது. ஏழைகளை வைத்து பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த வெப் தொடர் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. Squid Game-ன் இறுதி சீசன் நவீன முதலாளித்துவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தியது.

    பிரமிப்பூட்டும் ஆக்ஷன், சஸ்பென்ஸ், சமூக விமர்சனம் என அனைத்தும் கலந்து, இந்த ஃபிரான்சைஸ்க்கு சிறந்த முடிவை வழங்கியது.


    4. Tempest (Hulu)

    இப்பட்டியலில் நான்காவது இடத்தில், Jun Ji-hyun மற்றும் Gang Dong-won-ன் கெமிஸ்ட்ரி மிளிரும் ஸ்பை த்ரில்லரான Tempest இடம்பிடித்துள்ளது.

    அரசியல் பிரச்சாரம், பன்னாட்டு சதி, ஜியோபாலிடிகல் டென்ஷன்கள் என கலந்த இந்தத் தொடர், முதிர்ச்சியான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது.

    இப்படத்தின் ரொமான்ஸும்கெமிஸ்ட்ரியும் சிகர்களை கட்டிப்போட்டது. நவீன உலக பிரச்சினைகளை தைரியமாக தோட்ட இந்த வண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    5. Our Unwritten Seoul (Netflix)

    இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் Park Bo-young இரட்டை வேடங்களில் நடித்த Our Unwritten Seoul வெப் தொடர் இடம் பிடித்துள்ளது.

    ஒரே தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள் தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த வெப் தொடரின் கதை. இந்த தொடரின் கதை ரசிகர்களை நெகிழ வைத்தது.

    முடிவுரை:

    இந்த டாப் 5 தொடர்கள், 2025-ஐ K-டிராமாவின் தங்க ஆண்டாக மாற்றின. உணர்ச்சி, ஆக்ஷன், ரொமான்ஸ் என வெரைட்டி நிறைந்தவை. TIME-ன் பட்டியல் சொல்வது போல, இவை உலக சினிமாவின் சிறந்த உதாரணங்கள் ஆகும்.

    • 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி, டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது. அடுத்ததாக 2 புதிய சீசன்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். கடந்த 2023 வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் படத்திற்காக சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வாங்கியது அவரது நடிப்புத்திறனுக்கு சான்று.

    இதற்கிடையே பீக்கி பிளைண்டர்ஸ் தொடரை படமாக தயாரிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. படத்திலும் சிலியன் மர்ஃபி -யே டாமி ஷெல்பியாக நடிக்கிறார். முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் இந்த படத்திற்கு "தி இம்மோர்டல் மேன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் "தி இம்மோர்டல் மேன்" திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

     

    • ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார்.
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது.

    நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் சர்வம் மாயா என்ற படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளது.

    இதற்கிடையில் பி.ஆர். அருண் எழுதி இயக்கியுள்ள 'பார்மா' என்ற வெப் தொடரில் நிவின் பாலி நடித்திருந்தார் .

    இந்த படம் வரும் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

    • 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.

    உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.

    புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

    • 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
    • பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

    கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.

    தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

     இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. 

    • வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
    • சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

    ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

    இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.

    லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

     இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.

    திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.

    இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.

    சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது. 

    • எனது நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் காட்டுவதாகும்.
    • 'ரா', என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் தற்போது நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

    உத்தரகாண்டைச் சேர்ந்த லக்கி பிஷ்ட், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோவாக இருந்தவர் ஆவார்.

    தற்போது MX பிளேயரில் ஒளிபரப்பாகும் "சேனா - கார்டியன்ஸ் ஆஃப் தி நேஷன்" என்ற வலைத் தொடரில் அவர்  நடித்துள்ளார்.

    இந்த வலைத் தொடரை அபினவ் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சேர அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு வரும் கார்த்திக் என்ற இளைஞன் பயங்கரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதைச் சுற்றி இந்தத் தொடர் அமைந்துள்ளது.

    ஊடகங்களிடம் பேசிய லக்கி பிஷ்ட், "ஒரு உண்மையான வீரரை திரையில் சித்தரிக்கும் எண்ணத்துடன் இந்த வேடத்தை நான் ஏற்றேன்.

    இராணுவ பின்னணி மற்றும் பயிற்சியில் பெற்ற அனுபவங்கள் நடிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. நடிப்பு எனக்கு ஒரு புதிய துறை என்றாலும், ஒரு வீரராக நடிப்பது என்பது எனது நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் காட்டுவதாகும்."

    லக்கி பிஷ்ட் தனது வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.

    கூடுதலாக, எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோய் போன்ற பிரபலங்களுக்கு மெய்க்காப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010 இல் இந்தியா வந்தபோது பாதுகாப்பு அளித்த குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்தார். 'ரா', என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.    

    • இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ்.
    • இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ். இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம்  தயாரிக்க கோபி புத்ரன் இயக்கியுள்ளார். தொடர் வரும் ஜூலை 25 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடரில் ரகுபிர் யாதவ், குல்லாக் புகழ் வைபஜ் ராஜ் குப்தா மற்றும் ஜமீல் கான் நடித்துள்ளனர்.

    இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

    • கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
    • கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா.
    • சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    முதல்வன், பம்பாய், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான வெப் தொடர் ஹிரமண்டி. இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தொடரில் பாலியல் தொழில் செய்யும் மல்லிகாஜான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதி நிகழ்ச்சியின் பின்னணியாகும். பிரிட்டிஷ் ராஜ் சகாப்தத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தால் பாலியல் தொழிலாளிகளும் நவாப்புகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதே இந்த தொடரின் கதை.

    சோனாக்ஷி சின்ஹா , அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் ஸ்ருதி ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இது பற்றி மனிஷா கொய்ராலா கூறியதாவது:-

    இந்த தொடரில் எனது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மகிழ்ச்சி. தொடரில் தவறுகள் மீது விமர்சனங்கள் இருந்த போதும் வரவேற்பு பெற்றுள்ளது. படப்பிடிப்பில் 12 மணி நேரம் நீருக்குள் நான் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நீருக்குள் நின்றதால் களைப்பை தந்தாலும் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் தந்தது.

    தண்ணீர் சூடாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் சில நேரங்களில் சேரும் சகதியும் என் உடலில் ஏறியது. சில சமயங்கள் எனக்கு மன அழுத்தம் கொடுத்தாலும் நெகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×