என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித உரிமைகள் ஆணையம்"

    • 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
    • பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

    கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.

    தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

     இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. 

    • இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
    • இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    இன்ஸ்பெக்டரால் அடித்து துன்புறுத்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டி.லட்சுமணன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி இரவு சுமார் 10.15 மணிக்கு குடும்பத்துடன் காரில் கொடுங்கையூர் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் குடிபோதையில் காருக்கு முன்பு வந்து விழுந்தார். நான் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தி, சாலையில் பாதுகாப்பாக, ஓரமாக செல்லும்படி அவருக்கு அறிவுரை கூறினேன்.

    அவர் என் காரை கையால் அடித்து வெளியில் வரும்படி கூறினார். நான் காரைவிட்டு இறங்கியதும் என்னை கண் மூடித்தனமாக தாக்கினார். பின்னர், போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.

    அவர்கள் என்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தும் என்னை அடித்து உதைத்தபோது தான், குடிபோதையில் காருக்கு முன்னால் விழுந்தவர் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் என்று தெரியவந்தது. குடிபோதையில் இருந்த அவர், போலீஸ் சீருடை அணியவில்லை.

    இதன்பின்னர் என்னுடைய மகன் போலீஸ் நிலையத்துக்கு வந்து, வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, என்னை அழைத்து சென்றான். என்னை அடித்து உதைத்த இன்ஸ்பெக்டர் சம்பத்தின் செயல் மனித உரிமைகளை மீறியதாகும். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவுக்கு இன்ஸ்பெக்டர் சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அன்று இரவு சுமார் 10.15 மணிக்கு தான் ஓட்டப்பயிற்சியில் (ஜாக்கிங்) ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வேகமாக மனுதாரர் காரில் வந்து தன்மீது மோதினார் என்றும் இதில் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

    மேலும், எழும்பூர் கோர்ட்டில் என்மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர், மனித உரிமைகள் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார்.

    இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் லட்சுமணன் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் போலீசாரால் அடித்து உதைத்து, அவமானப்படுத்தி இருப்பது நிரூபிக் கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலீசாரின் செயலை ஏற்கமுடியாது. எனவே, புகார்தாரருக்கு ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு இழப்பீடாக 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் இருந்து அரசு வசூலித்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×