என் மலர்
நீங்கள் தேடியது "South Korea"
- தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது.
- மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வாஷிங்டன்:
தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். மறுநாள் (30-ந்தேதி )அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார். அதிபர் டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென்கொரியா செல்ல இருக்கிறார் என அவர் கூறி இருக்கிறார்.
அமெரிக்காவி வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது டிரம்ப்பும், ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.
- ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
- தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.
47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.
விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.
அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.
இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.
மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
- இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர் 4 சுற்று முடிவடைந்தது.
சூப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிராவு டன் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், தென் கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி 4-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த தொடரிலும் இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் மோதுகின்றன.
- முன்னாள் அதிபர் மனைவி மீது பரிசு பொருள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
சியோல்:
தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தென் கொரியா முன்னாள் அதிபரின் மனைவி கிம் கியோன் ஹீ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் இறுதியில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
- தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
- இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
சியோல்:
தென் கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.
பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா சென்ற 26 பேர் பலியாகினர்.
- இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கிடையே, தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி சோ ஹியூன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.
இந்நிலையில், தென் கொரிய வெளியுறவு மந்திரி சோ ஹியூன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் நாங்கள் மிக திடத்துடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பயங்கரவாத தாக்குதல் எதுவாக இருப்பினும் அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதுணையாக நாங்கள் நிற்போம் என தெரிவித்தார்.
- தென்கொரியாவில் கனமழை கொட்டி வருகிறது.
- மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சியோல்:
தென்கொரியாவில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் இறந்தனர். 5 பேர் காணாமல் போயினர். மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
- தென்கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
- இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சியோல்:
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன.
சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
- 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.
குறிப்பாக ஜப்பான், தென்கொரியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
புதிய வரிவிதிப்பு குறித்து 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை டிரம்ப் வெளியிட்டார். அதில், நாங்கள் உயர்த்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை உயர்த்தினால், அமெரிக்க அரசு இன்னும் வரிகளை உயர்த்தும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டது.
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்டட்டார்.
கடந்த மே 31 அன்று ஹான் நதிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் உள்ளே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார்.
தீ விபத்தில் 22 பயணிகள் புகையை சுவாசித்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வோன்-உம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தீ விபத்தில் 330 மில்லியன் வோன் சொத்து சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மனைவியுடன் விவாகரத்து வழக்கின் முடிவில் ஏற்பட்ட விரக்தியால் வோன் இந்த செயலைச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
- 2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.
தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி திடீரென்று அவசர ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சட்டத்தை திரும்ப பெற்றார். இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தற்காலிக அதிபராக ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே தென் கொரியாவில் ஜூன் 3-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வேட்பாளர் லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதன்மூலம் அவர் தென் கொரியாவின் புதிய அதிபர் ஆகிறார்.
அவருக்கு அடுத்தபடியாக மக்கள் கட்சி தலைவர் கிம் மூன் சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையில் புதிய அதிபராக நேற்று பதவியேற்ற லீ ஜே மியூங்க், நீண்ட கால பகையாளி ஆன வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விழைந்துள்ளார்.

வெற்றிபெற்ற பின்பு பேசிய மியூங்க், "வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதியளித்தார்.
61 வயது வழக்கறிஞரான லீ ஜே மியூங்க், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சியோங்னாமின் மேயராக எட்டு ஆண்டுகளும், கியோங்கி மாகாணத்தின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக்-இயோலிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.
இராணுவச் சட்ட நெருக்கடியின்போது, லீ ஜே-மியுங் உட்படப் பல அரசியல்வாதிகள் தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது, அவர் தேசிய சட்டமன்றத்தின் சுவர்களில் ஏற முயன்ற காட்சி வைரலானது, மேலும் அதைத் தொடர்ந்து இராணுவச் சட்டம் நீக்கப்பட்டது.






