என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jinping"

    • சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடை பிடித்தது.

    இதற்கிடையே சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    மேலும் சீனா, ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது. இதையடுத்து மோடி எப்போதும் எனக்கு நண்பர் தான். இந்தியா- அமெரிக்கா உறவு சிறப்பாக உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜின் பிங்குடன் டிரம்ப் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு தென் கொரியாவின் ஜியாங்சு நகரில், அக்டோபர் இறுதியில் தொடங்கி, நவம்பர் தொடக் கம் வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் உயர்மட்ட ஆலோசகர்களும் செல்ல உள்ளனர்.

    மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

    அதில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிரம்ப், ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு குறித்து தீவிர விவாதங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் உறுதியான திட்டங்கள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும்போது, "டிரம்பின் தென்கொரிய பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.

    தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பீஜிங்:

    தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது.

    தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக உள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் பேசும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 57 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோவை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி அரசின் மூத்த ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கசிய விட்டுள்ளனர் என்று யூடியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

    அந்த ஆடியோவில், 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார் படுத்துமாறு சீன அதிபர் ஜின்பிங் பேசி உள்ளார். மேலும் ஆடியோவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி செயலாளர், துணை செயலாளர், கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் பேசியதும் இடம் பெற்றுள்ளது.

    சீன ராணுவம்

    1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் 1,653 ஆளில்லாமல் இயங்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்கம் மையங்கள், 14 அவசர கால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், ஆஸ்பத்திரிகள், ரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், கியாஸ் நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானில் நடந்து வரும் குவாட் அமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


    ×