search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trophy"

    • ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளி வளாகத்தில் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை சுற்றுப்பயண விழா நடந்தது.
    • நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னையில் நடைபெற உள்ள 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை (பாஸ் தி பால்) சுற்றுப்பயண விழா நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பாஸ் தி பால் நிகழ்வு மற்றும் கோப்பையினை அறிமுகப்படுத்தி பேசினார்.

    உற்சாக வரவேற்பு

    பின்னர் தனுஷ்குமார் எம்.பி., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ.., தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் தலைவர் கல்யாணி சுந்தரம் மற்றும் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாணவரணி உதயகுமார், அப்பாஸ் அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், அன்சாரி, வீராசாமி, ராமர், ரகுமான் விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் சதாசிவம், காவல்கிளி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் செயலாளர் பால்மகேஷ் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    • தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    • ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    இது 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக, ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகம், ராமு ஆகியோர் பெற்று கொண்டனர்.

    • சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
    • இன்று மாலை 19-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 16-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வெற்றிப் பெற்றது.

    17-வது லீக் ஆட்டத்தில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் மோதின. இதில் 8:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பாங்க் அணி வெற்றிப் பெற்றது. 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் புனே கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணி மற்றும் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கிஆகிய அணிகள் இரவு மோதுகின்றன.

    • மாநில கபடி போட்டி வடிவேல்கரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேதாஜி கிரிக்கெட் கிளப், பி.டி.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து 5-ம் ஆண்டு மாநில கபடி போட்டியை நடத்தியது. பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டி யன் தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்திய பிரியா முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் 106 அணிகள் பங்கேற்று மின் ஒளியில் இரவிலும் பகலிலும் விளையாடினர். இறுதியில் 5 அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

    இந்த போட்டியில் முதல் இடம் பெற்ற வடிவேல்கரை அணிக்கு கே.டி.ரஞ்சித் நினைவு சுழல் கோப்பையும் மற்றும் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் சார்பாக ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் வழங்கப் பட்டது. 2-ம் இடம் பிடித்த தொண்டூர் அணிக்கு மாயக் கண்ணன் சகோதரர்கள் சார்பாக ஆர்.எஸ்.மீனாட்சி தர்மராஜ் நினைவு சுழல் கோப்பை, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாசாமி நினைவாக வைரமணி சகோதரர்கள் சார்பாக ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடம்பிடித்த மேலக்குயில்குடி அணிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராஜா சகோதரர்கள் சார்பாக சோனை நினைவு சுழல் கோப்பையும், சுந்தர ஜெயமணி சார்பாக ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதுபோல் 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    போட்டியின் நடுவர்களாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகத்தை சேர்ந்த மூர்த்தி தலைமையில் சுரேஷ்,பாண்டி செல்வம், பாலமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் பணி செய்தனர். இதன் ஏற்பாடுகளை நேதாஜி கிரிக்கெட் கிளப் மற்றும் பி.டி.பி விளையாட்டு கிளப்பினர் செய்திருந்தனர்.

    • 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
    • வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.

    திருவாரூர்:

    மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.

    இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.

    இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

    இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.

    மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.

    மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

    வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், வழங்கினார்.

    திசையன்விளை:

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 32- க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி 6 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், 2-ம் பரிசை எம்.எம். அணிக்கு ரூ.15,013, சுழற்கோப்பையும் வழங்கினார். 3-வது பரிசை ஐ- மேக்ஸ் ஸ்போர்ட் கிளப் அணிக்கு ரூ.10,013 பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும், ராதா புரம் ஊராட்சி மன்ற கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இடையங்குடி ஜெபகுமார், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர்,எழில் ஜோசப், குமார், முத்தையா,சுகுமார் ஜெபதுரை,சுகிர்தராஜ், பவுல், ரமேஷ், தேவ அலெக்ஸ் அருள், சாம், ரமேஷ், கணிபாய், அமுதன், ஜெபகுமர், ராஜா, சுஜா, வினோகார், ரூபன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான இசை, நாட்டிய, நாடக கலைகளின் சங்கம திருவிழா "ஆரோஹண்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 38 பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. விழாவில் திரைப்பட புகழ் ஜாஃபர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:- 'ஒவ்வொருவரும் முதலில் தன்னை நம்ப வேண்டும்.

    அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மேடை ஒன்றுதான் அதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை என்றார்.போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் வல்லம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பிரிவில் திருச்சி மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளியும் முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு தாமரை பன்னாட்டுப்பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலாவெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு ப்பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாமரை பன்னாட்டுப்பள்ளி மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    • இறுதிப் போட்டிக்கு தேர்வான 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் ஊராட்சி மற்றும் விழுவை நண்பர்கள் இணைந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தினர். கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, பழனி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தேர்வா ன 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் தோப்புத்து றை கியூஎம்சிசி கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசுத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2வது பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பையை விழுந்தமாவடி விஎம்டபுள்யுசிசி அணியி னரும்,

    3வது பரிசினை 30 ஆயிரம் மற்றும் கோப்பையை நாகூர் ஆர்கே என் எப்சிசிஅணியினரும் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் அகிலா வெங்கடேஷ், கிராம நாட்டாண்மை பூமாலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை விழுவை கோவிந்த் தொகு த்து வழங்கினார்.

    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • இறுதி போட்டியில் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதியதில் சீர்காழி அணி வெற்றி பெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவுபகலாக மின்னொளியில் நடை பெற்று வந்தது.

    போட்டி க்கு பள்ளி தாளாளர் ராதாகிரு ஷ்ண ன்தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார்.போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில்தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சி.பி.எஸ்.இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

    • கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.

    போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.

    • எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர்.
    • ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

    தென்காசி:

    கீழப்பாவூர் அருகே உள்ள திப்பணம்பட்டியில் வி.கே.எஸ் நண்பர்கள் திப்பணம்பட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான 2-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. அதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    அதில் வெற்றி பெற்ற எம்.எஸ்.கே. ஆலங்குளம் அணியினர் முதல் பரிசான சுழற் கோப்பையை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை திப்பணம்பட்டி வி.கே.எஸ். அணியினர் வென்றனர்.

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா திப்பணம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஐவராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

    ×