search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Ravichandran"

    • பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • புதிய வாக்காளர்கள் படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024- ன் படி தென்காசி மாவட்டத்தில் 1.1.2024-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2005 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறும் வகையில் வரும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தற்போது படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு வாக்காளர்கள் சார்பில் உறவினர் எவரேனும் இறப்பு சான்று நகலுடன் படிவம் 7-யை பூர்த்தி செய்து பெயரை நீக்கம் செய்யலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயோ அல்லது தொகுதிக்கு வெளியிலோ புலம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8-யை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு சென்று இந்த வாக்காளர்களும் தங்களது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாலிபன்பொத்தை, டி.என்.எச்.பி காலனி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு, களக்கோடித் தெரு, பாறையடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    கலெக்டர் திறந்து வைத்தார்

    இதில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, உதவி செயற் பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரன், கார்த்திகா, நாகூர் மீரான், ரெஜினா, சீதாலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கலநாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய நெல் விதைகள் ஒரு கிலோ ரூ.25-க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.25-க்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த விதை அளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா கூடலூர் சமுதாய நலக் கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். முகாமில் 86 பயனா ளிகளுக்கு ரூ.10.98 லட்சம் மதிப்பிலான நலத்தி ட்ட உதவிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போ ம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்களை சிறப்பாக செய ல்படுத்தி பொது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சிவகிரி வட்டம் கூடலூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து தங்களது கிராம த்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வில் முன்னேற தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவி களை கேட்டறிந்து பயன் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்கா ட்சியினையும், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் அமை க்கப்பட்டிருந்த கண்காட்சி யினையும் மாவட்ட கலெக்டர் மற்றும் ஏராள மான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திர லீலா, சங்குபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அருணா, கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது பயோமைனிங் முறையில் பழைய குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடங்கள் தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகளும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது. அவற்றை தினமும் சுத்தம் செய்து அகற்றப்படும் வாறுகால் கழிவுகள் மற்றும் மண்ணையும் உரமாக்கிய பிறகு மீதமுள்ள மரக்கழிவுகள் போன்றவற்றை கொட்ட உரக்கிடங்கு தேவைப்படுகிறது. எனவே வாறுகால் கழிவுகள், மண்ணை கொட்டுவதற்கு தகுந்த இடத்தினை தேர்வு செய்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 628 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    நலத்திட்ட உதவிகள்

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 25 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்திற் கான காசோலை களையும், ஒரு பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9 ஆயிரத்திற்கான காசோலையினையும், 7 பேருக்கு ரூ. 9 ஆயிரம் கல்வி உதவித் தொகைக் கான காசோலைகளையும், ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து மரணம் நிதி உதவி தொகை என மொத்தம் ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திற னாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 628 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • அடைக்கலப்பட்டினத்தில் உள்ள டி.டி.டி.ஏ. தூய பவுல் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மதிப்பீட்டு குழுவினர் கலந்துரையாடினார்.
    • வல்லத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா ஆகியோர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்குழுவினர் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினத்தில் உள்ள டி.டி.டி.ஏ. தூய பவுல் நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்படங்கள் மூலமாக மாணவ ர்களுடைய தனித்திறன் வளர்க்கும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 76,236 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தை பார்வையிட்டனர். செங்கோட்டை அருகே வல்லத்தில் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை பார்வையிட்டனர். செங்கோட்டை ஒன்றியம், சீவகநல்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, இணை இயக்குநர் (சுகாதரப் பணிகள்) பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், மண்டல இணை இயக்குநர்(கால்நடைத் துறை) தியோபிலஸ் ரோஜர், உதவி இயக்குநர் (கால்நடைத்துறை) மகேஷ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருது பெரும் போட்டியில் வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் சான்றிதழை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    மத்திய அரசின் 2023-ம் ஆண்டிற்கான தேசிய ஊராட்சிகள் விருது பெரும் போட்டியில் பங்கு கொண்டு தமிழ்நாடு மாநில அளவில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தையும், மாறாந்தை ஊராட்சி மாநில அளவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பாக வழங்கப்பட்ட சான்றிதழை தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் வழங்கினார்.

    • விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாக லமாக நடைபெற்றது.

    கலெக்டர் கொடி ஏற்றினார்

    தென்காசி இ.சி.இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்ட னர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது.
    • கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படையில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது.

    தென்காசி:

    மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக தென்காசி தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது. இதில் 232 குக் கிராமங்கள் உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 85 வங்கி இல்லா கிராம பகுதிகளில் அனைத்து வங்கிகளின் பி.சி. மற்றும் ஏ.டி.எம். மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

    மேலும் கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படை யில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் மிகவும் பின்தங்கிய பகுதி களில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாதம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளில் நடைபெற்று வரும் கடன் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை முன்னோடி வங்கி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.

    • மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையை கலெக்டர் பார்வையிட்டடார்.
    • முகாமில் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, மாற்றுதிறனாளி நலத்துறையின் மூலம் ஒருவருக்கு உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆவுடையானுார் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நலத்திட்ட உதவிகள்

    முகாமில் 9 பயனாளி களுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை, மாற்றுதிறனாளி நலத்துறை யின் மூலம் ஒருவருக்கு உதவி தொகைக்கான ஆணை, 4 பேருக்கு வரன்முறை பட்டாவிற்கான ஆணை, 7 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, ஒருவருக்கு வாரிசு சான்று, கணவரால் கைவிடப் பட்டோருக்கான சான்று, தாட்கோ மூலம் 34 பேருக்கு தூய்மை பணியாளர் அடை யாள அட்டை என மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 851 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    முன்னதாக மறுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன் பெரும் வகையில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியி னையும் கலெக்டர் ரவிச் சந்திரன், பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன், தோட்டக் கலைததுறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, தென்காசி தாசில்தார் சுப்பையன், தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சண்முகம், மாவட்ட காவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபி என்ற குத்தாலிங்கராஜன் (ஆவுடையானூர்), தினேஷ் (அரியப்பபுரம்), உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×