search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்- கலெக்டர் வெளியிட்டார்
    X

    இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டபோது எடுத்தபடம்.

    தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்- கலெக்டர் வெளியிட்டார்

    • வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகரப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத் தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கி ணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதைமுன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது.

    இத்தேர்தலில் ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 5 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வாக்குப்பதிவு இருக்கு மானால் வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துகுமார், அலுவலக மேலாளர் (வளர்ச்சி) சண்முகசுந்தரம், செங்கோட்டை நகராட்சி ஆணையர் ஜெயபிரியா, செயல் அலுவலர் (குற்றாலம்) சுஷ்மா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×