search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி  பண்ணை அலகுகள் நிறுவ வாய்ப்பு- கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவிப்பு
    X

    தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ வாய்ப்பு- கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவிப்பு

    • கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும்.
    • மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டுக் கோழி

    நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக் கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    தேர்வு செய்யப்பட வேண்டிய பனாளிகளின் தகுதிகள். ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

    கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபக ரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    50 சதவீதம் மானியம்

    திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனா ளிக்கும் 250 எண்ணிக்கையின 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இத்தப்பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது.

    தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட திட்ட மிடப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி நிறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×