என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூலாங்குளம் தொழிற்சாலையில் கலெக்டர் ஆய்வு
- சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மத்திய, மாநில அரசு மானியத்தில் இயங்கி வருகிறது.
- கலெக்டர் ரவிச்சந்திரன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில், மத்திய, மாநில அரசு மானியத்தில் சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை தலைமையில் பங்குதாரர்கள், தென்காசி கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்தும், புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை, பங்குதாரர்கள் வெண்ணிநாடார், ராஜன், தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் மற்றும் கே.ஆர்.பி. இளங்கோ, சஜனா, பரமசிவன், அலுவலர்கள் சேகர், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்