என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam"

    • முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள்.
    • முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள்.

    மத்திய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணிக்காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் ஆகும். இந்த தேர்வுகளை ஸ்டாப் செலக்சன் கமிஷன்- எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) நடத்தி வருகிறது.

    இந்த தேர்வு குறித்த தகவல்கள் கடந்த வாரங்களில் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்தும், எவ்வாறு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

    தேர்வுக்கு தயார் செய்யும் முறை

    முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) பொறுமையாக, அமைதியாக படியுங்கள். பின்பு அதை ஒரு தனித்தாளில், பாடவாரியாக (கணிதம், ஆங்கிலம், புத்திக்கூர்மை, பொது அறிவு) எழுதுங்கள். பின்பு மீண்டும் அதை வாசித்துப் பாருங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படியுங்கள். எப்படி படிப்பது, எதிலிருந்து ஆரம்பிப்பது, எந்தப் பகுதிக்கு விடையளிப்பது, எது கடினமாக உள்ளது என்பது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.

    பொது அறிவுப்பகுதி, புத்திக்கூர்மைத் திறன் மற்றும் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் வினாக்கள் பட்டப்படிப்பு கல்வித் தரத்தில் அமையும். கணிதப்பகுதி மட்டும் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தில் அமையும். பொது அறிவுப் பகுதியில் வரலாறு, புவியியல், இந்திய கலாச்சாரம், பொருளாதாரம், அறிவியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.

    ஜெனரல் இன்டலிஜன்ஸ் (General Intelligence)

    அனைத்து திறனறி தேர்வுகளிலும் இப்பகுதி இடம்பெறுகிறது. இதில் Verbal Reasoning மற்றும் Non Verbal Reasoning என இரு பகுதி களாக வினாக்கள் அமைகின்றன. Non- Verbal Reasoning பகுதியில் படங்கள் (Diagrams மற்றும் Figures) இடம் பெறுகின்றன. இந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பில் அமைக்கப்படுகின்றன. இந்த தொடர்பைக் கண்டறிந்து, அதன் விடையை தேர்வு செய்வதில் நமது திறனைப் பயன் படுத்த வேண்டும். இத்தேர் வின் நோக்கம் விண்ணப்பதாரரின் ஆராய்ந்தறியும் திறனைக் கண்டறிதலே ஆகும்.

    இப்பகுதியில் வினாக்கள் மூன்று பிரிவுகளில் அமைகிறது.

    1) Series, 2) Analogy, 3) Classification

    ஒவ்வொரு பிரிவிலும் எப்படியெல்லாம் வினாக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை பயிற்சியின் மூலம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், வேகமாக சிந்திக்கும் திறன், கொடுக்கப்பட்ட வினாவில் உள்ள படங்களுக்கு இடையே உள்ள தொடர்பு (Correlation) மற்றும் வேறுபாடு ஆகியவற்றை கண்டறியும் நுட்பம், அறிவுத்திறன் (Mental Ability) ஆகியவை மேம்படுவதுடன், இவ்வினாக்களைத் தீர்வு செய்ய தனி யுக்தியையும் வகுத்துக் கொள்ளலாம்.

    Verbal Reasoning பகுதியில் படங்களுக்குப் பதிலாக எண் தொடர்கள், ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொடர்கள் Coding, Decoding ஆகிய பிரிவுகளில் வினாக்கள் அமைகிறது. இந்த வகை வினாக்கள் எத்தனை வகைகளில் (Pattern) அமைகிறது என்பதை அறிந்து அதைத் தீர்வு செய்ய பழகிய பின்பு, குறைந்த நேரத்தில் தீர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் நேர நிர்வாகம் மிக முக்கியம்.

    இப்பகுதிக்கு இதர மூன்று பகுதி களைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. LOGIC-ஐ புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். Analogy, Ranking, Sitting Arrangements, Blood relations, Directions, Series Problems போன்ற பகுதிகளை முதலில் முடித்து விட வேண்டும். Syllogism, Statement and Conclusion, Coding and Decoding போன்ற பகுதிகளுக்கு Analytical Reasoning தொடர்பான புத்தகங்களைப் படிக்கலாம். அதிக அளவில் இவ்வினாக்களை பயிற்சி செய்யும்போது உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.

    லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning)

    பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிந்த தகவல் களைக் கொண்டு சரியாக யூகிப்பது அல்லது முடிவுகளை எடுப்பதை 'ரீசனிங்' என விளக்கலாம். அறி வியல் பூர்வமான சரியான காரணம் அறிதலே 'லாஜிக்' எனப்படுகிறது. பொதுவாக தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களில் நம்மை அறியாமலேயே லாஜிக்கை (Logic) பயன்படுத்துகிறோம். ஆனால் பயன்படுத்தும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.

    Logical Reasoning வகை வினாக்களில் இரண்டு அல்லது மூன்று கூற்றுகள் (Statement), புள்ளி விவரம், நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் அளிக்கப்படும். இந்த கூற்றுகளின் (Premises) அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று முடிவுகளும் (Conclusion) இருக்கும். இவற்றில் எவை சரியானது, எவை தவறானது, அனைத்தும் சரியா அல்லது அனைத்தும் தவறா என்பதை விடையாகக் குறிக்க வேண்டும். கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்கள்.

    கூற்று: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 200 ரன்களை எடுத்தது. இதில் 160 ரன்களை எடுத்தவர்கள் அந்த அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள்.

    முடிவு: 1) அந்த அணியில் 80 சதவீதம் வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள். 2) இந்த போட்டியில் துவக்க நிலை ஆட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள்.

    இப்போது கீழே கொடுக்கப்பட்டவற்றில் இருந்து விடையைத் தேர்வு செய்யவும்.

    A. முடிவு 1 மட்டும் சரி, B. முடிவு 2 மட்டும் சரி, C. முடிவு 1 அல்லது 2 சரி, D. முடிவு 1 மற்றும் 2 தவறு, E. இரண்டும் சரி

    முதல் முடிவை ஆய்வு செய்வோம். அந்த அணியில் 80 சதவிகிதம் சுழற்பந்து வீசுபவர்கள் என்ற விவரம் கூற்றில் எங்கும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் 160 ரன்கள் சுழற்பந்து வீசுபவர்கள் எடுத்தார்கள் என்பதற்காக அவர்கள் துவக்கநிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கலாம் எனக் கூற முடியாது. எனவே இதற்கான விடை D ஆகும்.

    கூடுதல் மாதிரி வினாக்களை அடுத்த வாரம் பார்க்கலாம். அது உங்களை நீங்களே சோதித்துக் கொள்ள வழிவகுக்கும்.

    எம்.கருணாகரன்,

    துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.

    • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது
    • தேர்வினை 14 மையங்களில் 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்க ளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர். பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வின் நடவடிக்கை களை பதிவு செய்ய 15 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 14 மையங்களில் இன்று நடைபெற்றது.
    • 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அள வையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

    நெல்லையில் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்பட 14 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காலை, மதியம் என 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    காலையில் தொடங்கிய தேர்வை 2,332 பேர் எழுதினர். இது 60.87 சதவீதம் ஆகும். 1,499 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    தேர்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் தேர்வினை கண்காணித்தனர்.

    • முதுகலை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
    • இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிமாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு ரூ 4000, இளங்களை கல்விபயிலும் மாணவமாணவியருக்கு ரூ 6000 மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

    பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000 வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் 5000 கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்தி றனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைமற்றும் பார்வைற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

    1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத்தி றனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

    9 வகுப்பு மேல்க ல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகள்கல்வி உதவித்தொகை பெற 30.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர்உ தவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில்க ல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண்சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இதுசம்பந்தமா னவிவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடா;பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, 65 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட 92 பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு, அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி மாநிலம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்த ப்பட்டு இருந்தன. விண்ணப்பதாரர்கள் அதிகாலை முதலே தேர்வு மையத்துக்கு வந்தனர். அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வி தாளில் 175 வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், 25 வினாக்கள் எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும் இருந்தது. மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கு 20 ஆயிரத்து 259 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையங்களில் 65 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    துணை தாசில்தார் தலைமையில் 18 மொபைல் குழுவினர், துணை கலெக்டர் தலைமையில் 5 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 66 வீடியோ கிராபர்கள் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 முதல் நிலை தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.

    தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முழு வேலை நாள் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடக்கும் மையங்களில், 12.30 மணிக்கு பிறகு பள்ளிகளை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மட்டுமின்றி பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கான பருவ இடைநிலை தேர்வும் இன்று நடந்தது.

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்வு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. அதேபோல, குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா அறிவுரை வழங்கினார்.
    • நாளை நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 -ம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    நெல்லையில் மாநகர பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதனை 7,321 பேர் எழுதுகின்றனர். இதனையொட்டி தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து தேர்வு அறையில் பணியாற்ற உள்ள போலீசாருக்கு மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா அறிவுரை வழங்கினார்.

    தேர்வையொட்டி மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் இன்று சுத்தப்படுத்தி தயார் படுத்தப்பட்டது. அங்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நாளை நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. இதில் தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரிவில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசு பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட, எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாநில சிலம்ப போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவிகள் அக்‌ஷயபுஷ்பா, பவித்ரா சகி முதலிடமும், மாணவிகள் பிரியதர்ஷினி, துர்கா நந்தினி 2-ம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களையும் உடற்கல்வி ஆசிரியைகளையும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளி தலைவர் ஜெயவேல் பாண்டியன், உதவி தலைவர் அஜய், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். 

    • 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது
    • 17,871 பேர் எழுதினார்கள்

    திருச்சி:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாநகரில் 16 மையங்களில் 8,371 பேரும், புறநகர் பகுதியில் 7 மையங்களில் 9500 பேரும் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.

    இதையடுத்து காலை 7 மணி முதல் மையங்களுக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வரத் தொடங்கினர்.

    தேர்வு மையத்துக்குள் பேனா மற்றும் கால் டிக்கெட் தவிர வேறு எந்த பொருளும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக டிஜிட்டல் வாட்ச்,செல்போன் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் உடற் தகுதி தேர்வு நடத்தப்பட்டு காவலராக தேர்வு செய்யப்படுவார்கள்.

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தேர்வு நடந்த மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
    • நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.

    • 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 5,466 பேர் எழுதினர்.
    • 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் உள்ள 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து இந்த தேர்வினை எழுத 5,347 ஆண்களும், 1,487 பெண்களும் என மொத்தம் 6,834 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்திலும், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்திலும் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது.

    தேர்வு எழுத தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதில் ஆண், பெண்களை தனித்தனியாக வரிசைப்படுத்தி போலீசார் நிற்க வைத்தனர். தேர்வு எழுத வந்த ஆண்களை ஆண் போலீசாரும், பெண்களை பெண் போலீசாரும் சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாக வரச்சொல்லியும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அவர்களை அனுமதித்தனர். தேர்வாளர்கள் பேனா, தேர்வு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள செல்போன், புளூடூத், கால்குலேட்டர் போன்ற அதிநவீன மின் சாதனங்களையும், கைக்கடிகாரம், தொலைநகலி போன்ற சாதனங்களையும், பென்சில் ஆகியவற்றையும் தேர்வாளர்கள் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை கொண்டு வந்தவர்களிடம் இருந்து, அந்த பொருட்களை போலீசார் வாங்கி வைத்து, தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.

    சரியாக காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 12.40 மணிக்கு முடிந்தது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 6,834 பேரில், 4,302 ஆண்களும், 1,164 பெண்களும் என மொத்தம் 5,466 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,045 ஆண்களும், 323 பெண்களும் என மொத்தம் 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    எழுத்து தேர்வினை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மைய பணி மற்றும் பாதுகாப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்."

    • காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை படித்து வருகின்றனர்.
    • குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேரகிளை நூலகம் எண் இரண்டில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் போட்டி தேர்வு நூல்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் அவர்கள் கொண்டுவரும் நூல்களையும் மாணவர்கள் அனுதினமும் படித்து வருகின்றனர்.

    இதில் அனுதினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு படித்து வருகின்றனர். காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை உணவு கொண்டு வந்து அங்கேயே உணவருந்தி படித்து வருகின்றனர். குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் விடுமுறை நாட்களிலும் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் நூலகர்கள் நூலகத்தை திறந்து மாணவர்கள் நூலக போட்டித் தேர்வு அறைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×