search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "library"

    • புதுச்சேரியில் தலைமை நூலகம் உட்பட 55 கிளை நூலகம், காரைக்காலில் 19, மாகியில் 4, ஏனாமில் 3 உட்பட மொத்தம் 81 கிளை நூலகம் பயன்பாட்டில் உள்ளது.
    • சிறுவர் பிரிவிற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நூல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலை, பண்பாட்டு துறையின் கீழ்,197 ஆண்டு பழமைவாய்ந்த ரோமன் ரோலண்ட் நூலகம் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் 4 லட்சம் நூல்கள் உள்ளன.

    நூலகத்தில் பெரியவர்கள் பிரிவில் உறுப்பினர்களாக 54,924 பேரும், சிறுவர்கள் பிரிவில் 9,696 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    புதுச்சேரியில் தலைமை நூலகம் உட்பட 55 கிளை நூலகம், காரைக்காலில் 19, மாகியில் 4, ஏனாமில் 3 உட்பட மொத்தம் 81 கிளை நூலகம் பயன்பாட்டில் உள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்கள், அரசு நூலகங்களுக்கு வாங்கப்படாமல் இருந்து வந்தது. முன்னாள் கவர்னர் தமிழிசை மாணவர்களிடையே நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் 23 தொகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு உபகரணங்களுடன், சிறு நூலகங்களை அமைப்பதற்கும், கிளை நூலக சிறுவர் பிரிவில் விளையாட்டு உபகரணங்களுடன் இயங்கவும் கலை, பண்பாட்டு துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் 2023- 24-ம் ஆண்டிற்கான அரசு நூலகங்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த 211 எழுத்தாளர்களின் 21,100 நூல்கள் ரூ.40 லட்சத்துக்கும், பொது பிரிவில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் ரூ.40 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.

    சிறுவர் பிரிவிற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நூல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இதில், புதுச்சேரி வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா, லாஸ்பேட்டை அசோக்நகர் பூங்கா, ஏர்போர்ட் சாலை, பொன்னியம்மன் கோவில் பூங்கா ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் மகிழ்ச்சி நூலகம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இது தவிர கிளை நூலகத்தில் உள்ள சிறுவர் பிரிவிலேயே விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    அதையொட்டி கிளை நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அனுப்பும் பணி ரோமன் ரோலண்ட் நூலகத்தில் வேகமாக நடந்து வருகிறது.

    • நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
    • பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராயபுரம்:

    இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை , நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால் வாசிப்பு பழக்கம் முடங்கிவிட்டது.

    இந்த நிலையில் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர்.

    இதில் முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற் குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் காமிக்ஸ், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் உள்ளன.

    பூங்காவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக வருபவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பசுமையான பூங்காவில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். புத்தகங்களை பூங்காவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் நூலகம் தொடர்பாக பொதுமக்கள் அங்கு வைத்துள்ள நோட்டு புத்தகத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளிப்படுத்தலாம்.

    புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

    இதைத்தொடர்ந்து வடசென்னை பகுதியில் மேலும் 8 பூங்காக்களில் வரும் நாட்களில் இதேபோல் சிறிய நூலகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து இளநிலை பொறியாளர் எஸ்.சர்தாஜ் கூறும்போது, பூங்காவில் அமைக்கப்படும் சிறிய நூலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் எம்.ஆர்.எப். கார்டன், பூந்தோட்டம் பூங்கா, மணலி மண்டலத்தில் 2-வது பிரதான சாலையில் உள்ள பூங்கா, எம்.எம்.டி.ஏ. பூங்கா, மாதவரம் மண்டலத்தில் பத்மகிரி பூங்கா, கே.கே.ஆர்.கார்டன், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜி.என்.டி. சாலையில் உள்ள அன்சா கார்டன் மற்றும் ஜீவாபூங்காவில் நூலகம் திறக்கப்பட உள்ளது என்றார்.

    • புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் தளபதி விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ.பர்வேஸ் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே விலையில்லா உணவகம், மாணவ, மாணவிகள் பயில பயிலகம் திறக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் ெதருவில் தளபதி விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ.பர்வேஸ் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே விலையில்லா உணவகம், மாணவ, மாணவிகள் பயில பயிலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பயிலகம் அருகிலேயே விஜய் நூலகத்தை டாக்டர் ஜெ.பர்வேஸ் திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் இந்நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    விஜய் ரசிகர்களை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் இதுபோன்ற செயல்களால் ஒருங்கிணைக்கிறார். ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் செய்ய எண்ணியுள்ள நிலையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் அதை நோக்கி செல்கிறது. எப்படி இருந்தாலும் யார் இருந்தாலும் மக்களுக்கு நன்மை கிடைத்தால் பரவாயில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் .

    • முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.
    • முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.

    முசிறி

    முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.

    போட்டியில்முசிறியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏவூர், முசிறி எம் .ஐ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முசிறி சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சந்தப்பாளையம், மற்றும் முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் 3ம் நிலை நூலகர் தனலட்சுமி, 2ம் நிலை நூலகர் ஆனந்த கணேசன், உதவியாளர் வீரமணி மற்றும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக அம்மன் சிவகுமார், சித்ரா பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • 1330 திருக்குறள்களுக்கும், 1330 கதைகளை கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
    • முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை. அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அகழ் கலை இலக்கிய மன்றம் நிறுவனர் வினோதினி, பல்கலைக்கழக வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், தொழில் அதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    • தஞ்சை மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிதி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் .கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ஒதுக்கினார்.

    இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
    • தமிழ் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுவின் தலைவா் சுதா்சனம் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல்-அமைச்சரும், விளையாட்டு, இளைஞா் நலன் துறை அமைச்சரும் அதிகக் கவனம் செலுத்து கின்றனா்.

    ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என எங்களுடைய இளைஞரணி செயலா் கூறியதன்பேரில் அதற்கு முயற்சி மேற்கொள்ளப்ப டுகிறது.

    அதன்படி பல இடங்களில் நூலகங்கள் தொடங்கப்ப ட்டுள்ளன. மக்களிடையே வாசிப்புத்தன்மை, விழிப்புணா்வை ஏற்படுத்தவும், வரலாற்றை அறிவதற்காகவும் நூலகங்கள் தொடங்கப்படுகின்றன.

    மாணவா்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்து க்கும் முக்கியத்துவம் அளிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

    இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னா், மாவட்ட ஆட்சியரகத்தில் சுதா்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, சம்பத்குமாா், சரவணகுமாா், ஸ்டாலின்குமாா், குழு அலுவலா் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் இடம் பெற்றனா்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
    • போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.

    இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.

    இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 2-ம் நிலை கிளை நூலகர் அண்ணாமலை அனைவ ரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் மதுக்கூர் கிளை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றி காலை 8 முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படவும், மேலும், 2 நூலகரை நியமிக்க வேண்டும், மதுக்கூரில் உள்ள படித்த கல்வியாளர்கள் மாணவ- மாணவிகள் அனைவரையும் உறுப்பி னராக சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் மேகலாதன், துரை ராசு, அ.தி.மு.க. கிளை செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் துரைராஜன், வட்டார கல்வி அலுவலர் ஓய்வு சுப்பிரமணியன், முத்துக்க ண்ணு, செல்வம், பாலசுப்பி ரமணியன், எஸ்.எஸ்.ராஜன், வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் புரவலராக அ.தி.மு.க. மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, அன்னை திருமண மண்டபம் ஹரிகரன், கோவிந்தராசு, கதிர்வேலன், கோவிந்தராஜ், வக்கீல் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.எஸ்.ராஜன், செந்தில்குமார், சண்முகா ஸ்டோர் ஆகியோர் தலா ரூ.1000 செலுத்தி கொண்டனர்.

    முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம் கட்டப்பட்டது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராமத்தினர் இணைந்து நடத்திய விழாவுக்கு, விழாக்குழு தலைவர் முடியப்பன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவொளி, மேலாண்மை க்குழு தலைவர் ஹேமா வைரவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராமத்தினரால் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நூலகத்தை கோட்டாட்சியர் மதியழகன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பே ரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, தாசில்தார் ஜெயசீலன், கல்வி அலுவர்கள் ராஜமாணிக்கம், விமலா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், பங்குத்தந்தைகள் ஜான்கென்னடி, வின்சென்ட், தலைமையாசிரியர் சிவருகு நாதன், கலை, பண்பாட்டு பயிற்றுநர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்லப்பன், ஜான்முத்து, மலர்விழி தமிழழகன், ஹெல ன்ஜான்முத்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.முன்னதாக தலைமையா சி்ரியை வாணி அனைவ ரையும் வரவேற்றார்.

    ஆசிரியை கலையரசி அறிக்கை வாசித்தார்.

    முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளிக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர், சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

    தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது.
    • மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது.

    இந்தியாவில் எண்ணிக்கை அளவில் அதிக பொது நூலகங்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. டாப்-5 மாநிலங்களின் மொத்த நூலக எண்ணிக்கை வருமாறு...

    * மகாராஷ்டிரா - 12,191

    * கேரளா - 8,415

    * கர்நாடகா - 6,798

    * தமிழ்நாடு - 4,622

    * மேற்கு வங்கம் - 5,251

    வழக்கம் போல இந்தி பெல்ட் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருக்கின்றன.

    * உத்தரப் பிரதேசம் - 573

    * பீகார் - 192

    * மத்தியப் பிரதேசம் - 42

    இதில் இன்னொன்று; ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது. எனவே மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது:

    1. கேரளா - 4,112

    2. மகாராஷ்டிரா - 9,218

    3. கர்நாடகா - 9,429

    4. தமிழ்நாடு - 16,547

    5. குஜராத் - 18,100

    - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    • அவனியாபுரத்தில் நூலகத்தை காணவில்லை என்று புகார் எழுந்தது.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் 1953-ம் ஆண்டு திரு.வி.க. நூல் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது அவனியாபுரம் ஊராட்சியாக இருந்தது.

    பின்னர் அவனியாபுரம் நகர் பஞ்சாயத்து யூனியனுக்கு கட்டிடங்கள் கட்டும்போது இந்த நூலகம் அவனியாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த கட்டிடம் பழமையான கட்டிடமாக மாறிய நிலையில் இந்த நூலகம் தற்போது அவனியாபுரம் அஞ்சலகம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரண்மனைகாரர் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. அதன் பின்னர் அவனியாபுரம் நகராட்சியாக மாறியது. தற்போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது இந்த நூலகம் எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாசகர் சிவமணி கூறுகையில், மிகப் பழமை வாய்ந்த அவனியாபுரம் நூலகம் தற்போது எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. திரைப்பட நகைச்சுவை காட்சியை போல் கல்வெட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடத்தை காணவில்லை.

    தற்போது இந்தப்பகுதி யில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார். இந்தப்பகுதியில் தமிழ் அகிலன் கூறுகையில், அவனியாபுரத்தில் இருந்த நூலகத்தில் நான் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, மாஜி கடவுள், நீதி தேவன், ஓர் இரவு,போன்ற புத்தகங்களை படித்து இருக்கின்றேன் மேலும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஜெயகாந்தனின் சிறுகதைகள் போன்ற புத்தகங்களை இந்த நூலகத்தில் படித்திருக்கி றேன். தற்போது இந்த பகுதியில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கிறது என்றார்.

    மேலும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாசிப்பு திறனை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் புத்தகத்திருவிழா நடத்தி மாணவர்களிடம், இளைஞர்களிடம் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் பழமை யான நூலகத்தை கண்டு கொள்ளாமல் விட்டது அதிருப்தி அளிகிறது. எனவே கலெக்டர் இதில் கவனம் செலுத்தி அவனி யாபுரம் மையப்பகுதியில் கவுன்சிலர்கள் அலு வலகத்தின் மாடியில் காலியாக உள்ள இடத்தில் நூலகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றனர்.

    ×