7 அடி உயர திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா

1330 திருக்குறள்களுக்கும், 1330 கதைகளை கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.
திருக்குறள் புத்தகத்தை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மற்றும் பலர் பார்வையிட்டனர்.
திருக்குறள் புத்தகத்தை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மற்றும் பலர் பார்வையிட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை. அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அகழ் கலை இலக்கிய மன்றம் நிறுவனர் வினோதினி, பல்கலைக்கழக வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், தொழில் அதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com