search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பம்"

    பிச்சாவரம் முதல் பழையாறு வரை 20 கி.மீ தூரம் படகில் இரு கை சிலம்பம் சுற்றி 2 சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
    சீர்காழி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் அம்சா தம்பதியினர். இவர்களுக்கு 6ம் வகுப்பு பயிலும் அதியமான் (12), 4ம் வகுப்பு பயிலும் ஆதிஸ்ரீ (9) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் மாவீரர் சிலம்ப கலைக்கூடத்தில் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டை கற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொடங்கிய சிலம்பம் சுற்றும் சாதனை முயற்சி மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு வரை 10 கி.மீ தூரம் தொடர்ந்து 2 மணி நேரம் படகில் இரு கைகளாலும் கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை நடத்தினர்.

    பழையாறு வந்தடைந்த சிறுவர்களை சீர்காழி எம்.எல்.ஏ.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றனர். நிறைவில் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் 2 மணி நேரத்தில் நிறைவு செய்த சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ், பதக்கங்களை அதன் நிறுவனர் ஜேக்கப்ஞா னசெல்வன், தலைமை அதிகாரி எஸ்தர் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

    இந்த சாதனையை  இந்த வயது பிரிவில் இதுவரை எவரும்மேற்கொ ள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை புரிந்த மாணவ ர்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பழையாறு மீனவ பஞ்சாய த்தார், மீனவ கிராம மக்கள் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்து பாராட்டினர்.

    தஞ்சை அருகே பள்ளி மாணவர்களுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு மற்றும் ஜெய்ஹிந்த் விளையாட்டு கழகம் இணைந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தியது.

    ஊரணிபுரம் ஜோதி அரசு பள்ளியில் நடந்த  இந்த விளையாட்டு பயிற்சி முகாமில் கராத்தே, டேக்ஹோண்டா, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .பயிற்சி இறுதிநாளில் சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழை தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் வழங்கினார்.

    தேசிய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பழனிதுரை மாணவ- மாணவிகளை பாராட்டிப் பேசினார். பயிற்சி முகாமை பயிற்றுநர் மணிகண்டன் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

    ×