search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "achievement"

    • சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.
    • குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராணி என்ற இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், அக்குழந்தை பிறக்கும் போதே அதன் இரு சிறு நீரகங்களிலும் வீக்கத்துடனும், வலது கையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இல்லாத நிலையும் இருந்து வந்தது.

    மேலும், சுவாச கோளாறுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமான நிலையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் இருந்த அந்த குழந்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டது.

    உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் அறிவுறுத்தலின் பேரில் அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட துறை டாக்டர்கள் மேற்பார்வையில் ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அந்த சி.டி ஸ்கேனில் குழந்தையின் வலது கையின் ரத்தக்குழாய் 1.8 மில்லி மீட்டர் அளவிற்கு தடைப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். 5 மணி நேர தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு வலது கையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.

    அடுத்தடுத்த சிகிச்சைக்கு பின்னர் வென்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தை ஆக்சிஜன் உதவியில்லாமல் இயற்கை சுவாச நிலையை அடைந்து உள்ளது. மேலும், அக்குழந்தையின் உடல்நிலை தற்போது முற்றிலும் தேறியுள்ளது.

    தென் தமிழகத்தில் சிறந்த சிகிச்சை அளிப்பதில் முக்கிய இடம் வகிப்பது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதுபோன்ற பல அரிய அறுவை சிகிச்சைகள் செய்து தென் மாவட்ட மக்களின் நலம் பேணுவதில் கவனம் செலுத்தும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு சாதனையாக இந்த அறுவை சிகிச்சை அமைந்துள்ளது என மருத்துவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

    இதே போல கோவில்பட்டியை சேர்ந்த மோகன செல்வி என்ற 9 வயது சிறுமி கடந்த 10-ந்தேதி அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவின் முன் பகுதியில் இருந்த இரும்பிலான வேல் அவரது தொடையில் குத்தியது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

    • கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 3 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெற்று வருகிறது
    • இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது

    கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்'  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

    நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

    இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

    இதுவரை ரூ.150 கோடி வரை வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கமல் நடித்த 'குணா' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
    • வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    மனதில் என்ன தோன்றுகிறதோ?

    யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

    அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.

    நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.

    அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

    இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

    அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.

    விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.

    சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.

    அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.

    1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.

    புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

    தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.

    ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.

    விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.

    1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    • எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.
    • முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார்.

    கேரளாவை சேர்ந்த ஷேக் ஹசன்கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏறி கொடி நாட்டி உள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.

    உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா.
    • வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்- மந்திரி மற்றும் மந்திரிகள் இணைந்து சென்று மக்களை சந்திக்கும் நவ கேரள சதஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தாய்-சேய் நட்பு மருத்துவமனை முயற்சியை செயல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. மற்ற மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும் கூடுதல் சேவைகளை வழங்கி நாட்டிற்கு முன்னோடியாக நமது மாநிலம் திகழ்கிறது.

    சுகாதாரத்துறை முழுவதும் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வருகிற 31-ந்தேதிக்குள் இந்த பெயர் மாற்றத்தினை முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெயர் மாற்றத்தின் மூலம், சுகாதாரத்துறையில் மாநிலத்தின் சாதனைகளுக்கான பெருமையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திருட முயற்சிக்கிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.

    மேலும் கேரளா, கோ-பிராண்டிங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பல்வேறு மானியங்கள், ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களில் மத்திய பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏ.வி.பி. கல்வி குழுமத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடையும் நோக்கில் உங்கள் கனவுகளை தேடி கண்டடையுங்கள் என்ற தலைப்பில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி கலையரங்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பள்ளி அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பகவதி, கோவை எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கோவையை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம்.தாருகேஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அறிவியல் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மையை பற்றியும், இந்த உலகத்திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றியும், இந்தியர்கள் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். ஆர்வமும் சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.

    இந்தியாவின் லட்சிய சந்திர பயணமான சந்திரயான்-3 கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையாகும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்பதால் ககன்யான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

    ககன்யானின் வெற்றி விண்வெளி பயணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். இது தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் கனவுக்கும் ஒரு பூரணம் கொடுக்கும். இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் 3 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, காந்திநகர் ஏ.வி.பி. சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    உடுமலை:

    2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 15 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவி பாண்டீஸ்வரி புள்ளியியல் துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், மின் வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    இதுதவிர தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், கே.ரமணி 10-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி அா்ஸ்மா 7-ம் இடத்தையும், வேதியியல் துறையில் மாணவன் பொன் ஜீவகன் 6-ம் இடத்தையும், தமிழ் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவன் பத்மநாதன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வேதியியல் துறையில் மாணவன் கிஷோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் வென்றுள்ளனா். பொருளியல் துறையில் மாணவி பி.அபிதா 5-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி கே.அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்நிலையில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் கல்யாணி மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • தேசிய சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர்

    ராமநாதபுரம்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசாள் மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச் சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர் இப்போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள் ஆகிய 3 பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர். 56 தங்கப்பதக்கம், 34-வெள்ளி பதக்கம், 5- வெண்கலப் பதக்கம் வென்று ஓவரால் சாம்பியன் கோப்பையினை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர்கள் திருமுருகன், ஜெயஸ்ரீ, செல்லபாண்டி, பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
    • 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.

    பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.

    தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.

    மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×