என் மலர்
புதுச்சேரி

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர் சாதனை
- தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது.
- இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
புதுச்சேரி:
தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது. இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதில்
தேர்வு செய்யப்பட்ட 50 குழுக்களுக்கு 24 மணி நேரத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு 6 குழுக்கள்
தேர்வு செய்யப்பட்டன 15 நிபுணர்கள் குழுவினர் சிறந்த திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் சமர்ப்பித்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை யில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் சுபாஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார். இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவருக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெ ங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், சி.எஸ்.பி.எஸ். துறை தலைவர் தனபாக்கியம், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுதுறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சுபாஷ்ராஜை பாராட்டினர்.






