search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaivani school"

    • மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரவீன் ஒற்றைக்கம்பு வீச்சில் முதலிடமும், அசோக் பாண்டியன் கம்பு சண்டையில் 2-ம் இடமும், சந்தோஷ், கிஷோர்சூர்யா, கம்பு சண்டையில் 3-ம் இடமும், இளையோர் பிரிவில் அஜய் கம்பு சண்டையில் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் இளையோர் பிரிவில் ரக்சனா, கம்பு சண்டையில் 2-ம் இடமும், சுபயாழினி, தாருண்யா கம்பு சண்டையில் 3-ம் இடமும், மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர். அபிநயா இரட்டை கம்பு வீச்சில் 3-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் அனுஸ்ரீ கம்பு சண்டையில் 2-ம் இடமும் மலர்தர்ஷினி, பிரியதர்ஷினி, கம்பு சண்டையில் 3-ம் இடமும் தனுஸ்ரீ இரட்டைக் கம்பு வீச்சில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியாகிய பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர், ஆசிரியர் - ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்றனர்.
    • மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 88 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களில் மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடை பெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வரும், நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பாராட்டினர்.

    சங்கரன்கோவில்:

    மாநில அளவிலான எறிபந்து போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.

    • மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
    • மாவட்ட சிலம்பம் போட்டியில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர்.

    இதில் இளையோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் 3-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

    அதுபோன்று மாவட்ட சிலம்பம் போட்டியில் மாணவர்கள் இளையோர் பிரிவில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் - ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது.
    • 24 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற 24 மாணவ- மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்

    சங்கரன்கோவில்:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும், மாணவிகள் இளையோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற அணிகளை பள்ளி முதல்வர், ஆசிரியர் - ஆசிரியர்கள், பொதுமக்கள், வெகுவாக பாராட்டினார்கள்.


    ×