என் மலர்
நீங்கள் தேடியது "Kalaivani school"
- மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பாராட்டினர்.
சங்கரன்கோவில்:
மாநில அளவிலான எறிபந்து போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்.
- மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
- மாவட்ட சிலம்பம் போட்டியில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார்.
சங்கரன்கோவில்:
மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர்.
இதில் இளையோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் 3-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அதுபோன்று மாவட்ட சிலம்பம் போட்டியில் மாணவர்கள் இளையோர் பிரிவில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் - ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது.
- 24 மாணவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பங்களா சுரண்டையில் உள்ள பேரன் பரூக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் பிரிவில் கலைவாணி பள்ளி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மூத்தோர் பிரிவில் பிரகாஷ் என்ற மாணவன் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற 24 மாணவ- மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரிய- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்
சங்கரன்கோவில்:
தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும், மாணவிகள் இளையோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
- வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.
- தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளை பள்ளி முதல்வர், ஆசிரியர் - ஆசிரியர்கள், பொதுமக்கள், வெகுவாக பாராட்டினார்கள்.