என் மலர்
நீங்கள் தேடியது "Beach Volleyball"
- மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
- மாவட்ட சிலம்பம் போட்டியில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார்.
சங்கரன்கோவில்:
மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர்.
இதில் இளையோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் 3-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அதுபோன்று மாவட்ட சிலம்பம் போட்டியில் மாணவர்கள் இளையோர் பிரிவில் பிரகலாதன் கம்பு வீச்சில் 2-ம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் - ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இன்று (21ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்
இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஏக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






