search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silamba Competition"

    • மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கடையநல்லூரில் உள்ள லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பிரவீன் ஒற்றைக்கம்பு வீச்சில் முதலிடமும், அசோக் பாண்டியன் கம்பு சண்டையில் 2-ம் இடமும், சந்தோஷ், கிஷோர்சூர்யா, கம்பு சண்டையில் 3-ம் இடமும், இளையோர் பிரிவில் அஜய் கம்பு சண்டையில் 3-ம் இடம் பெற்றனர். பெண்கள் இளையோர் பிரிவில் ரக்சனா, கம்பு சண்டையில் 2-ம் இடமும், சுபயாழினி, தாருண்யா கம்பு சண்டையில் 3-ம் இடமும், மூத்தோர் பிரிவில் நவீனா ஒற்றை கம்பு வீச்சில் 2-ம் இடமும், ஜெயலட்சுமி கம்பு சண்டையில் 3-ம் இடமும் பெற்றனர். அபிநயா இரட்டை கம்பு வீச்சில் 3-ம் இடமும், மிக மூத்தோர் பிரிவில் அனுஸ்ரீ கம்பு சண்டையில் 2-ம் இடமும் மலர்தர்ஷினி, பிரியதர்ஷினி, கம்பு சண்டையில் 3-ம் இடமும் தனுஸ்ரீ இரட்டைக் கம்பு வீச்சில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியாகிய பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர், ஆசிரியர் - ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு ஆயுதக் கலைகள் சார்ந்த போட்டி நடைபெற்றது. பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 சிலம்பாட்ட பயிற்சி அணியினர் பங்கேற்றனர்.

    தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். அவர்களுக்கு டி.எஸ்.பி. கீதா பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.

    • ஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பப் போட்டிகள் கோவாவில் ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழகம் சார்பில் 27 மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள். விஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.

    8வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அவிநாசியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகளும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

    அவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொடர் பயிற்சி அளித்த சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் தேவ அரசு என்ற 3 பயிற்சியாளர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தனர். 15 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பாட்ட போட்டியில் 27 தங்கப்பதக்கங்களை தமிழக மாணவர்கள் பெற்றது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    ×