search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volleyball competition"

    • 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

    கம்பம்:

    மதுரை சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

    இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற்றது.
    • ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆடவர்-பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இப்போட்டியில் 29 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் முத்தியால் பேட்டை ஜாலி பிரதர்ஸ் கிளப் அணி முதலிடமும், குனிச்சம்பட்டு ஜூப்பிடர் அணி 2-ம் இடமும், பெண்கள் பிரிவில் கருவடிக்குப்பம் ஸ்பைடர் ஸ்போஸ் முதலிடமும், முத்தியால்பேட்டை சூதுமத் கிளப் அணி 2-ம் இடமும், பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு செல்வ கணபதி எம்.பி., கென்னடி எம்.எல்.ஏ. பரிசு கோப்பை வழங்கினர். நிகழ்ச்சியில் புதுவை ஒலிம்பிக் சங்கம் தனசேகர், வாலிபால் சங்கம் முருகையன், சுந்தர்ராசு, சுகுமாறன், வேணுகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை புதுவை வாலிபால் சங்க செயலாளர் ராமதாஸ் செய்திருந்தார்.

    • ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி வேட்டுவபாளையம் பகுதியில் கிங் ஆப் ஆர்.எப்., மற்றும் கே.டி.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 14வயதுக்குட்பட்டோருக்கான கே.டி.எம்.சாம்பியன்ஸ் டிராபி (வாலிபால் போட்டி) நடைபெற்றது.இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.இதில் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் முதல் இடம் பிடித்தன.

    இரண்டாம் பரிசை வேலவன் பள்ளி அணியும் , மூன்றாம் பரிசை ஜெய் சாரதா பள்ளி அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சதிஷ் குமார், ஞானவேல், ஆர்.எப்.குழு நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் பாராட்டினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதல் இடமும், இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 2 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
    • போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27-வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் சிறுபூலுவப்பட்டியில் உள்ள டிசெட் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் மாணவர்களுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் பள்ளி 2-ம் இடமும், கே.எஸ்.சி. அரசு பள்ளி 3-ம் இடமும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. இதேபோல் மாணவர்களுக்கான மிகமூத்தோர் பிரிவில் வேலவன் பள்ளி முதலிடமும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி 2-ம் இடமும், பிரண்ட்லைன் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.

    மாணவிகளுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், செயிண்ட் ஜோசப் பள்ளி 2-ம் இடமும், இன்பன்ட் ஜீசஸ் பள்ளி 3-ம் இடமும், லிட்டில் கிங்டம் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. மாணவிகளுக்கான மிக மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், வேலவன் பள்ளி 2-ம் இடமும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.

    இந்த போட்டியில் வித்ய விகாசினி பள்ளி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி வரவேற்றார். பொருளாளர் தேவராஜன், துணைத் தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் டிசெட் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பையும், கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு தனிநபர் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.

    போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.

    இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பி‌ஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.
    57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் வேலம்மாள் (சென்னை), செயின்ட் அந்தோணி (தஞ்சாவூர்), செயின்ட் பீட்டர்ஸ் (சென்னை), காஜா மியான் (திருச்சி) உள்பட 37 அணிகளும், பெண்கள் பிரிவில் பாரதியார் (ஆத்தூர்), செயின்ட் ஜோசப்ஸ் (சென்னை), செயின்ட் மேரிஸ் (சேலம்), அரசு மேல்நிலைப்பள்ளி (ஈரோடு) உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் போட்டியில் சிறந்து விளங்கும் 5 வீரர்கள், 5 வீராங்கனைகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அளிக்கப்படும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் வருமான வரி கூடுதல் கமிஷனர் ஏ.சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    இந்த தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் ஆகியோர் தெரிவித்தனர். 
    ×