என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Archery"
- மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
- ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.
இவரது மனைவி செம்மலர்.
இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.
இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.
அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.
மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.
மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.
இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.
எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
பாரீஸ்:
பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.
ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 235-235 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது.
மகளிர் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கி லாந்தை தோற்கடித் தது. இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.
- இறுதிச்சுற்றில் பிரியன்ஷ், அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை வீழ்த்தினார்.
- இந்தியா இதுவரை 5 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது.
லிமரிக்:
அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்
- பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
- பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொக்கலாடி ஊராட்சி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அருள் முன்னிலை வகித்தார். நீர்நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
இதில் மாணவர்கள் வனங்களை காப்பது குறித்து பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
- அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
- தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
சீர்காழி:
தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.
இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.
இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.
- செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
- இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர்
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பாரத் மாண்டிசேரி, இசக்கி வித்தியாஷ்ரம், வேல்ஸ் வித்யாலயா, செய்யது ரெசிடென்சியல் போன்ற பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் வில்வித்தை பயிற்சியாளர் ஜாகிர் உசேன் பாராட்டினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.
ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது. #AsianGames2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்