search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first place"

    • தஞ்சாவூர் மாநகரில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.
    • கல்லுக்குளம் நகர்ப்புற சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அளவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லுக்குளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில், தஞ்சாவூர் மாநகரில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.

    தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    புற நோயாளிகள் வருகை, உள்நோயாளி அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத்துக்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோவுக்கும் அதிகமான எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில், அக்டோபர் மாதத்துக்கான தரவரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடத்தையும், மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நான்காமிடத்தையும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.

    இது தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் பாராட்டினர்.

    • கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.
    • இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. சாலை போக்குவரத்தின் வருடாந்திர புத்தகத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 32.63 கோடி வாகனங்கள் இருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இருச்சக்கர வாகனங்கள் ஆகும்.

    கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜூலை மத்தி வரை மொத்த எண்ணிக்கை 34.8 கோடியாக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    கார்களின் எண்ணிக்கைகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் முதல் 3 இடங்களில் உள்ளன.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
    • இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று சாதனையை புரிந்துள்ளார்.

    புதுச்சேரி:

    2022-23 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருவண்டார் கோவில் ஸ்ரீ நவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண் பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.

    மாணவி சத்யஸ்ரீ தமிழில் 98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல் -100 என 500-க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து புதுவை மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் இப்பள்ளி மாணவர் விக்ரமவர்மன் 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் மாணவி பூஜாஸ்ரீ 481 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் 18 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்களும் 50 மாணவர்கள் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    அதுபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எங்கள் பள்ளி மாணவி ரோஷினி 600-க்கு 587 மதிப்பெண்களும் மாணவி பவதாரணி 571 மதிப்பெண்களும் மாணவி திவ்யா 560 மதிப்பெண்களும் பெற்ற தோடு எங்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த இந்த மாணவ-மாணவர்களை பள்ளியின் துணை முதல்வர் விவேக் நடராஜன் பள்ளி கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் பள்ளியின் மேலாளர் விநோதினி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நகர் புறங்களுக்கு இணையாக கிராம புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆங்கில கல்வியில் சிறந்து விளங்க எங்கள் பள்ளியின் திறமையான ஆசிரியர்களால் கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    ஏற்கனவே எங்கள் பள்ளி 2014-2015-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றது. இதற்காக எங்கள் பள்ளிக்கு அரசு சார்பில் முதல்-அமைச்சர் விருதும் கல்வி அமைச்சர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அவர்கள் கூறும் போது மாநில அளவில் எங்கள் பள்ளி முதலிடம் பெற உறுதுணையாக இருந்த பள்ளியின் பொறுப்பாசிரியர் செங்கேணியம்மாள், ஆசிரியர்கள் சந்திரமோகன், முரளி, கந்தசாமி, குமாரசாமி, பாரதிதாசன், பார்த்திபன், ராஜ்குமார், புகழேந்தி, ஆசிரியை சுலக்சனா மற்றும் பெற்றோ ர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
    • தமிழ் வழி கல்வியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    இந்த மாணவியின் தந்தை வேம்பையன், தாய் திலகா ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.

    மாணவியின் தந்தை வேம்பையன் தான் பணியாற்றும்கடின ல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி யிலேயே தனது மகளை சேர்த்து தமிழ் வழி கல்வியில் படிக்க வைத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதலிடம் பிடித்த மாண வியை தலைமையாசிரியர் சிவகுருநாதன் சால்வை அணிவித்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

    மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரவல்லி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஜி.எச்.சி.எல். உப்பு தொழிற்சாலை மேலாளர் சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    • முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஜி.சக்தி கிருபா, தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2023-ம் ஆண்டிற்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.

    ''மானுட சேவையின் தேவை'' என்ற தலைப்பில் பேசிய அவர் மாவட்ட அளவிலான முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை பெற்றார்.

    பரிசு பெற்ற மாணவி சக்தி கிருபாவை, கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
    • தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    சீர்காழி:

    தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.

    இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.

    இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.

    • 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
    • சோழன்குறிச்சி வல்லரசு முதலிடம் பிடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ் பல்கலை கழகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியைத் துணைவேந்தா் திருவள்ளு வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

    இதில், 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    இவா்களில் சோழன்கு றிச்சி வல்லரசு முதலிடமும், ஏலாக்குறிச்சி சதீஷ்குமாா் இரண்டாமிடமும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை மாணவா் தவக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.

    இவா்களுக்கு பதிவாளா் (பொ) தியாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் துவாரா கே.ஜி.எப்.எஸ். மண்டலத் தலைவா் மணிராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    முன்னதாக, பல்கலை க்கழக மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் வரவேற்றாா்.

    முடிவில் நிறுவன வா்த்தகப் பிரிவு தலைவா் சிவா நன்றி கூறினாா்.

    • போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.
    • நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் பிடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் துரோணாஸ் பேட்மிட்டன் கிளப் சார்பில் இன்னர் கிளப் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டது.

    கிளப்பின் உரிமையாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    போட்டியை சந்திரசேகர் வழி நடத்தினார்.

    இந்த போட்டியில் மோகன்பிரவீன் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.

    இரண்டாம் இடத்தை ஜெயராம் அசோகன், மூன்றாம் இடத்தை உதயன் தீபக் சூர்யா, நான்காம் இடத்தை பிரகாஷ் அர்ஜுன் ஆகியோர் பிடித்தனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சிவப்பிரகாசம் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இப்போட்டியில் தஞ்சை பகுதியை சுற்றி உள்ள ஏராளமான பேட்மிட்டன் வீரர்கள் பங்கு பெற்றனர்.

    • ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தனர்.
    • தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நான்காவது தேசிய அளவிலான சிலம்ப போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. சிலம்பம் இந்திய சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு முதலிடமும், புதுச்சேரி இரண்டாமிடமும், கர்நாடக மூன்றாமிடமும் பிடித்தது.

    மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மட்டுமே தேசிய போட்டிக்கு தேர்வானவர்கள்.

    தஞ்சை மாவட்ட செயலாளர் லோக கலாஸ்ரீ ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து மாநில வெற்றியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் தமிழ்நாடு சங்க தலைவர் சந்திரமோகன், துணை தலைவர் பொன் ராமர், செயல் தலைவர் கண்ணதாசன் மற்றும் சிலம்பம் தஞ்சை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதுகுறித்து, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில்:- மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற தயாராகி வருகின்றனர்.

    அவர்களுக்கு மலேசியாவில் நடைபெறும் சிலம்பம் சர்வதேச போட்டியில் பங்கு பெற அரசு நிதியுதவி அளித்தால் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பர். தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும் என்றார்.

    • 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது
    • மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை 7 முறை மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. மாநில அளவில் நடைபெற்ற இந்த கூட்டுறவு வார விழாவில் தமிழ்நாட்டில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறந்த நகர கூட்டுறவு கடன் சங்கமாக தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான பாராட்டு கேட யத்தினை அமைச்சர்கள் பெரியசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் சங்கத்தின் தலைவர் சோலையப்பராஜாவிடம் வழங்கினர்.

    மீளவிட்டான் நகர கூட்டுறவு கடன் சங்கம் இதுவரை 7 முறை மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கம் தொடங்கப்பட்டு 52 ஆண்டு காலத்தில் மாநில அளவில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும். இச்சங்கம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருவாகவும், 2005 -ம் ஆண்டு முதல் நிகர லாபத்தில் செயல்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு 14 சதவீதம் ஈவுத்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஆண்டு மாவட்ட, மாநில அளவில் சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு மாநிலத்தில் முதலிடம் பெற்று அமைச்சர்களால் வழங்கப்பட்ட பாராட்டு கேடயத்தினை சங்க தலைவர் சோலையப்பராஜா மற்றும் செயலாளர் சுதாகர் ஆகியோர் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்து குமாரசாமி, தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி, சரக துணைப்பதி வாளர் ரவீந்திரன் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    சுவாமிமலை:

    இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.

    கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்றன.
    • மாணவர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.

    சீர்காழி:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் நடத்தும் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி -வினா போட்டி சீர்காழியில் நடைபெற்றது.

    13 பள்ளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மதன்ராஜ், ஜெய் சபரிவாசன், சந்தோஷ்குமார் ஆகியோர் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், யோஷ்வின், கீர்த்திவாசன், ஸ்ரீவர்சன் ஆகியோர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடமும் பெற்று சான்றிதழ்களையும், பரிசுகளையும் வென்று வந்துள்ளனர்.

    இவர்களை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ண முதலியார், நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை, வழிகாட்டி ஆசிரியர் தமிழ்வாணன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழரசன், கிரிஜாபாய் ஆகியோர் பாராட்டினர்.

    ×