search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான் போட்டி நடந்தது.

    மாரத்தான் போட்டி

    • 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
    • சோழன்குறிச்சி வல்லரசு முதலிடம் பிடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ் பல்கலை கழகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியைத் துணைவேந்தா் திருவள்ளு வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

    இதில், 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    இவா்களில் சோழன்கு றிச்சி வல்லரசு முதலிடமும், ஏலாக்குறிச்சி சதீஷ்குமாா் இரண்டாமிடமும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை மாணவா் தவக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.

    இவா்களுக்கு பதிவாளா் (பொ) தியாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் துவாரா கே.ஜி.எப்.எஸ். மண்டலத் தலைவா் மணிராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    முன்னதாக, பல்கலை க்கழக மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் வரவேற்றாா்.

    முடிவில் நிறுவன வா்த்தகப் பிரிவு தலைவா் சிவா நன்றி கூறினாா்.

    Next Story
    ×