search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை
    X

    சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை

    • ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தனர்.
    • தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும்.

    தஞ்சாவூர்:

    நான்காவது தேசிய அளவிலான சிலம்ப போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. சிலம்பம் இந்திய சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு முதலிடமும், புதுச்சேரி இரண்டாமிடமும், கர்நாடக மூன்றாமிடமும் பிடித்தது.

    மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மட்டுமே தேசிய போட்டிக்கு தேர்வானவர்கள்.

    தஞ்சை மாவட்ட செயலாளர் லோக கலாஸ்ரீ ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து மாநில வெற்றியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் ஜூனியர் பிரிவில் நித்யஸ்ரீ மற்றும் ரோகித் முதலிடமும், சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திக் 3-ம் இடமும் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் தமிழ்நாடு சங்க தலைவர் சந்திரமோகன், துணை தலைவர் பொன் ராமர், செயல் தலைவர் கண்ணதாசன் மற்றும் சிலம்பம் தஞ்சை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதுகுறித்து, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா கூறுகையில்:- மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற தயாராகி வருகின்றனர்.

    அவர்களுக்கு மலேசியாவில் நடைபெறும் சிலம்பம் சர்வதேச போட்டியில் பங்கு பெற அரசு நிதியுதவி அளித்தால் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பர். தமிழ் கலை வளர்ச்சி அடைய அரசு உதவ வேண்டும் என்றார்.

    Next Story
    ×