search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup"

    • அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியவை உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகின்றன.
    • மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி முதல் போட்டி நடைபெறும் என பிபா அறிவித்துள்ளது.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். அதன்படி 2026-ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன.

    இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதிப் போட்டியை நடத்த நியூயார்க், டெக்சாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூயார்க் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

    மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கி, ஜூலை 19-ந்தேதி நியூயார்க்கில் முடிவடைகிறது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

    • உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

    இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

     


    போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

    அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்தனர்.
    • சௌமி பாண்டே நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா- வங்காளதேசம் அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என நோக்கத்துடன் களம் இறங்கின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடங்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் கிங் ஒரு பக்கம் சிறப்பாக விளையாட மறுபக்கம் அர்ஷின் குல்கர்னி (7), முஷீர் கான் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு ஆதர்ஷ் சிங் உடன் கேப்டன் உதய் சஹாரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் அரைசதங்களால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 167 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சௌமி பாண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா 25-ந்தேதி அயர்லாந்தையும், 28-ந்தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

    • மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    • இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனை.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டார். தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது 2023 உலகக் கோப்பை தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிகம் ஆகும். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஒரே உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை தகர்த்த முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனையாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சம்பவம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

     


    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தனது ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தார். இதனை நெட்டிசன்கள் வேறு விதத்தில் புரிந்து கொண்டு, அதனை சர்ச்சையாக்கும் செயலில் தீயாக ஈடுபட்டனர்.

    அதன் படி, "ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டி ஒன்றில் நீங்கள் தரையில் முழங்கால் வைத்தீர்கள். உடனே பாகிஸ்தானை சேர்ந்த சிலர், முகமது ஷமி ஒரு இந்திய முஸ்லீம், அவர் சஜ்தா (பிரார்த்தனை) செய்ய முற்பட்டார், ஆனால் இந்தியாவில் இதை செய்ய அவர் அஞ்சுகிறார்," என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "யாராவது சஜ்தா செய்ய நினைத்தால், யார் தடுக்க முடியும். நான் மற்ற மதத்தை சேர்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டேன், நீங்களும் மற்ற மதத்தை சார்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டீர்கள். எனக்கு சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? நான் ஒரு முஸ்லீம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்."

     


    "எனக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நான் இந்தியாவில் வசித்து இருக்க மாட்டேன். நான் சஜ்தா செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டும் என்றால், நான் ஏன் இங்கு வாழ வேண்டும். நானும் அத்தகைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பார்த்தேன். நான் எப்போதாவது மைதானத்தில் சஜ்தா செய்திருக்கிறேனா? நான் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். நான் சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை எங்கு செய்ய வேண்டும் என சொல்லுங்கள், நான் அதை செய்வேன்."

    "இந்தியாவின் ஒவ்வொரு மேடையிலும் நான் அதை செய்வேன். யாரும் என்னை தடுக்க முடியாது. இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உங்களுடனோ அல்லது என்னுடனோ இல்லை. அவர்கள் யாரையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பிரச்சனை மட்டுமே ஒரே குறிக்கோள். நான் எனது உடலை வருத்திக் கொண்டு பந்துவீசியதால் முழங்காலிட்டேன். எனக்கு சோர்வாக இருந்தது. மக்கள் அந்த செய்கையை வேறு மாதிரி நினைத்து கொண்டனர்," என தெரிவித்துள்ளார். 

    • ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    • பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

    இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியதாவது:-

    உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.

    உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

    ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

    நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர்.
    • ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியை "காவி நிறமாக்கும்" முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் ஆட்சி முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். நம் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது வான்கடேவில் (மும்பையில்) நடந்திருந்தால் நாம் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின்போது அந்த ஜெர்சிகளை அணிய வேண்டியதில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போதான உரையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் "துர்ரதிர்ஷ்டசாலி'' என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட இருக்கின்றனர்.

    கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாளான நாளைய தினத்தில், சத் பூஜை முன்னிட்டு டெல்லியில் நாளை ஒரு நாள் மட்டும் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாத் என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்களால் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

    இதுகுறித்து, ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பிரதிஹர் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) ஞாயிற்றுக்கிழமை உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
    • இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டி இருந்தது.

    இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.

    இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சூழல். இருப்பினும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்து.

    இதனால், அரையிறுதிக்கு 4வது அணியாக நியூசிலாந்து முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
    • இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர், 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து, பாபர் அசாம் 38 ரன்கள், முகமது ரிஸ்வான் 36 ரன்கள், சவுட் ஷகீல் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பகார் சமான், இஃப்திகர் அகமது, ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.

    35.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.

    களத்தில், அகா சல்மான் மற்றும் ஷஹீன் அஃப்ரிதி ஜோடி விளையாடினர். சல்மான் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு, அஃப்ரிதியுடன் முகமது வாசிம் ஜோடி சேர்ந்தார்.

    79 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.

    இதில், அஃப்ரிடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முகமது வாசிமுடன் ராஃப் ஜோடி சேர்ந்தார். இதில், ஹரிஸ் ராஃப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனால், அரையிறுதியில் 4வது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.

    இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
    • வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

    இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று 38வது போட்டி நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார்.

    பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், கே.எல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

    ஆனால், ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இதில், குயின்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார், தொரடர்ந்து, தெம்பா பவுமா-11, அய்டன் மார்க்ரம்-9, ஹெயின்ரிச் கிளாசன்-1, ராசி வேன் டெர் துசன்-13, டேவிட் மில்லர்-11, கேஷவ் மகாராஜ்-7, மாக்ரோ ஜான்சன்-14, காகிசோ ரபாடா-6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால், தென் ஆப்பிரக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் சுருண்டது.

    இதன்மூலம், இந்திய அணி 243 ரன்களில் இமாலய வெற்றியை அடைந்தது.

    ×