உலக கோப்பையில் விளையாட மறுத்ததால் வங்காளதேசத்துக்கு ரூ.360 கோடி இழப்பு

வங்காள தேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப் பட்டுள்ளது.20 ஓவர் உலக கோப்பையில் 'லீக்' சுற்று வரை ரூ.3.6 முதல் ரூ.6.7 கோடி வரை கிடைக்கும்.
உலக கோப்பையில் விளையாட மறுத்ததால் வங்காளதேசத்துக்கு ரூ.360 கோடி இழப்பு
Published on

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நிராகரித்தது.

தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் வங்காளதேசத்தை 20 ஓவர் உலக கோப்பையில் இருந்து நீக்கி ஐ.சி.சி. அதிரடி முடிவை எடுத்தது. வங்காள தேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப் பட்டுள்ளது.

இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட மறுத்ததால் வங்காளதேசத்துக்கு ரூ.360 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

20 ஓவர் உலக கோப்பையில் 'லீக்' சுற்று வரை ரூ.3.6 முதல் ரூ.6.7 கோடி வரை கிடைக்கும். இந்த பணத்தை வங்காளதேசம் இழக்கிறது. பாதுகாப்பு குறித்து ஐ.சி.சி. உத்தரவாதம் அளித்தும் இந்தியாவில் விளையாட மறுத்ததால் உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தின் கீழ் ரூ.24 கோடி வரை வங்காள தேசத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், வருவாய் பங்கீட்டில் இருந்து வங்காளதேசம் விலக்கப்பட்டால் ரூ.325 முதல் ரூ.330 கோடி வரை இழப்பு ஏற்படும். வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானத்தில் இது சுமார் 60 சதவீதம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தத்தில் ரூ.360 கோடி வரை இழப்பு ஏற்படும்.

வங்காளதேச முன்னணி வீரர்கள் இந்திய விளையாட்டு உபகரண நிறுவனங்களான எஸ்.ஜி. மற்றும் எஸ்.எஸ். உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தத்தில் உள்ளன்ர. அவர்களும் தங்கள் வருமானத்தை இழக்க நேரிடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com