search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
    • மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார்.

    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது அவரை பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் ஒருவன் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்துக் கொண்டே இருந்தான்.

    இதை மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார். 'மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக் கொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்' என்றார்.

    பிரதமர் மோடியின் சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை பார்த்து பிரதமர் மோடி பேசியதும் வீடியோவாக இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.
    • 498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஹிருதய் படேல் என்ற 11 வயது சிறுவன் ரூபிக் கன சதுரத்தை பயன்படுத்தி கியூப்பில் ராமபிரானின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், பார்வைகளையும் குவித்து வருகிறது.

    498 ரூபிக்ஸ் கியூப்ஸ்களை பயன்படுத்தி ஹிருதய் படேல் ராமர் படத்தை உருவாக்கி உள்ளார். சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், நம்ப முடியவில்லை! என்ன ஒரு அசாத்திய திறமை உங்களிடம் உள்ளது, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர் என்ன ஆச்சரியம், ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் ஹிருதய் படேலின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார்.
    • சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார். சீன ஆதரவாளராக கருதப்படும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகிறார்.

    மாலத்தீவில் உள்ள இந்திய படைவீரர்கள் 88 பேரை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீன பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாலத்தீவில் உயிரிழந்துள்ளான்.

    மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு இருந்தான். சிறுவனுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் உடனடி மேல் சிகிச்சை தேவைப்பட்டது. தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.

    இதனால் 16 மணி நேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலேவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான் என தெரிவித்தார்.

    புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஓறையூர்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகல்யா (வயது 19), இவருக்கு சசிதரன் என்ற 2 வயது மகன் இருந்தான். அகல்யா,கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்தார். தனது மகன் சசிதரனுக்கு இட்லி ஊட்டி உள்ளார். சிறிது நேரத்தில் சிறுவனை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலையை கவனித்தார்.பிறகு குழந்தையை எழுப்பிய போது குழந்தை அசைவில்லாமல் இருந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அகல்யாவின் அண்ணன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரே தபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மினி பஸ் மோதி சிறுவன் பலியானான்
    • தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    அருப்புக்கோட்டை

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் திவான். இவரது தாய் மீரான்பீவி (வயது 70), மனைவி, 3 வயது மகன் தானிஷ்அகமது ஆகியோர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இன்று காலை வந்தனர்.

    அருப்புக்கோட்டை புது பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடிப்பதற்காக மதுரை சாலையில் நடந்து சென்றனர். அப்போது தவறான வழியில் வேகமாக வந்த மினி பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த தானிஷ்அகமது சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தான். மீரான் பீவி, திவானின் மனைவி மற்றும் அங்கு நின்றிருந்த கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் காயம் அடைந்த னர்.

    தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    தவறான பாதையில் மினி பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரை வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது.

    அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விளாங்குடியில் சரியாக மூடாததால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் 5 வயது சிறுவன் விழுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைக்காகவும், குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் நன்றாக உள்ள சாலையை தோண்டுவதும், பின்னர் அதனை சரியாக மூடாமல் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நகர் பகுதியில் 90 சதவீத சாலைகள் குண்டும் குழியு மாக காட்சியளிக்கின்றன.

    தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகள் மேலும் மோசம் அடைந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர்.

    விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

    மதுரை மாநகராட்சி பகுதியான 1-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி கணபதி நகர் 2-வது தெரு அருகே உள்ள சக்தி நகர் துளசி வீதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டது.

    பணிகள் முடிந்த பின் வழக்கம்போல் ஊழியர்கள் அதனை சரியாக மூடாமல் அவசரக் கதியில் மண்ணை போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனை அதிகாரி களும் கண்டு கொள்ள வில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கடைக்கு சென்றுள்ளான். அப்போது சரியாக மூடப்படாத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தான். இதில் அவ னுக்கு காயம் ஏற்பட்டது. சில அடி பள்ளத்தில் சிறு வன் விழுந்ததால் யாருக்கும் உடனடியாக தெரியவில்லை. பள்ளத்தில் விழுந்த சிறுவன் அரை மணி நேரத்திற்கு மேலாக காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளான்.

    இந்த சத்தத்தை ஏதேச்சை யாக கேட்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பள்ளத்தை பார்த்தபோது சிறுவன் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான். காயங்களுடன் அதிர்ச்சியு டன் காணப்பட்ட சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மாநக ராட்சி அதிகாரிகள், ஊழி யர்களின் அலட்சியம் கார ணமாக சிறுவன் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதி யில் காட்டுத்தீ போல் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விளாங்குடி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங் களை உடனடியாக சீரமைத்தும் புதிய சாலை அமைக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதி யில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    காளவாசல்

    இதேபோல் காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிறுவனின் தந்தை ஏற்க னவே இறந்து விட்டார். இந்நிலையில் அந்த சிறுவனை அவரது தாயார் அடிக்கடி ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று நள்ளிரவு சிறுவன் ஒருவன் கடலுக்குள் இறங்க முயற்சித்துள்ளான். இதை பார்த்த அங்கு இருந்த நரிக்குறவர்கள் பார்த்து அந்த சிறுவனைபிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை யிலான போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    அவன் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோ ட்டையை சேர்ந்த 11 வயது சிறுவன் என்பதும் 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த சிறுவன் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று தனது தாயார் பணம் வாங்கி வர சொன்னதாக கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு பண்ருட்டி யில் இருந்து கடலூர் பஸ் நிலையம் வந்துள்ளான். பின்னர் அங்குள்ள கடை யில் எலி மருந்து கேட்டுள்ளான். அந்த கடையில் இல்லை என்று சொன்ன தால், மீண்டும் பஸ் ஏறி தேவனாம்பட்டி னம் சில்வர் கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள வர்கள் பிடித்து போலீசி டம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

    மேலும் மாணவனின் தாயாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அந்த மாணவன் தாயாரை பார்த்ததும் அவரிடம் செல்லாமல் அழுதுள்ளான். பின்னர் குழந்தைகள் பாது காப்பு அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் தனது தாயாருடன் செல்வ தாக கூறியுள்ளான். இதன் பின்னர் சிறுவனின் தாயா ருக்கும் அறிவுரை கூறி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது0

    • கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர்.
    • இசக்கிமுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர். இசக்கிமுத்து 7-ம் வகுப்பு வரை படித்துள்ளான். இவன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அவனை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இசக்கிமுத்து தனது தந்தையிடம், புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நல்லியான் தோட்டம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.

    இது குறித்து இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×