என் மலர்
நீங்கள் தேடியது "Boy"
- மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். சிவில் என்ஜீனியர். மனைவி வித்யாலட்சுமி . தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆங்கிலத்தில் அதிகம் நாட்டம் மிகுந்த மாணவனாக திகழும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக விரைந்து படிப்பதில் திறமை வாய்ந்தவன்.
தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்து உள்ளார். மாணவனின் இந்த சாதனை நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ல்ட் சில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். .
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கார் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் ஹோட்டல் எக்ஸ்பிரஸ் இன்னில் நடந்தது. உயிரிழந்த குழந்தையின் பெயர் துருவ் ராஜ்புத் என தெரியவந்துள்ளது.
துருவ் தனது அப்பாவுடன் ஹோட்டல் பார்க்கில் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குப் பிறகு, துருவ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
TW: Sensitive Visuals⚠️ (Five-year-old boy crushed by car, video shocks Nashik, boy d!es in accident) pic.twitter.com/Uel6cj9pFj
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 7, 2025
- அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த சிறுவன் வாங்க வந்தான்.
- இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஆடைகளை தைத்து தர தாமதமானதால் தையல் கடைக்காரரைச் சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூரில் சோமு நகரில் உள்ள பக்கா பந்தா சௌராஹாவில் உள்ள தேவ் மருத்துவமனைக்கு அருகில் சூரஜ்மல் பிரஜாபத் [60 வயது] ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த 14 வயது சிறுவன் அதை வாங்க நேற்று காலை 10 மணியளவில் கடைக்கு சென்றுள்ளான்.
ஆனால் ஆடைகளை இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளான். அவ்வழியாக பைக்கில் சென்ற ஒருவர் இதை பார்த்து முதியவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
தையல் கடைக்கு விரைந்த முதியவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தாக்குதல் நடத்திய சிறுவனை தப்பிக்கவிடாமல் பிடித்து முதியவரின் குடும்பம் போலீசிடம் ஒப்படைத்துள்ளது,
- ரஞ்சி டிராபியில் மும்பைக்காக களமிறங்கிய ரோகித், மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் எனறு சிறுவன் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா. கடந்த ஆண்டுகளில் இறுதியில் இருந்து இவரது கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மோசமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் பார்ம் இல்லாத காரணத்தால் கடைசி டெஸ்ட்டில் தாமாகவே வெளியேறினார்.
இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் ரோகித் ஓய்வு அறிவித்து விடுவார் என தகவல்கள் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த கருத்துக்கு ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்தார். எனது ஓய்வு அறிவிப்பை நான் தான் முடிவு செய்வேன் என திட்டவட்டமாக கூறினார்.
இந்திய அணியின் பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தாத நிலையில் அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடினர்.
அந்த வகையில் மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா, மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவர் ஓய்வு அறிவிக்க உள்ளார் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் என்றும் வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்றும் 15-வது வயது சிறுவன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம். வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். ஆனால் உங்களின் தலைமை பண்பு சிறப்பாக உள்ளது. தயவுசெய்து ஓய்வு அறிவித்துவிடாதீர்கள். நான் கிரிகெட் பார்ப்பதற்கு காரணமே நீங்கள்தான். உங்கள் ERA-ல் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு சிறுவன் கூறியுள்ளார்.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.
இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.
இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.
Mohammed Saeed, a child from Gaza, lost both his legs and a hand after his home was bombed.Yet, he still dreams of growing up to become a police officer and seek justice for what was done to him. He dreams of having legs and a hand again, to play like other children. pic.twitter.com/9oHdAqxoNZ
— Eye on Palestine (@EyeonPalestine) September 14, 2024
Six-year-old #Palestinian child Mohammed Saeed has become a triple amputee as a result of Israel's attacks. A man walking through the displacement camp was shocked to come across the child, who had lost both legs and an arm, and was using a roller skate to help aid his… pic.twitter.com/wr4AJVcJAb
— Gulf Times (@GulfTimes_QATAR) December 16, 2024
இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார்.
.@HamdanMohammed undertakes to provide prosthetic limbs for the Palestinian child, Mohammad Saeed Shaaban, who lost his legs and right hand in an Israeli airstrike on northern Gaza. pic.twitter.com/31XpG91cMB
— Dubai Media Office (@DXBMediaOffice) December 21, 2024
- 1993 ஆம் ஆண்டு ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார்.
- ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் ராஜூ, 30 வருடங்களுக்கு பிறகு 37 வயதில் அவரின் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1993 ஆம் ஆண்டு சாஹிபாபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும் ராஜுவை கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நாள் முழுவதும் அவரை வேலை வாங்கி உண்பவதற்கு வெறும் ஒரே ஒரு ரொட்டி மட்டும் கொடுத்துள்ளனர். இரவில் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக ராஜூவை அவர்கள் கட்டி வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து ராஜு தப்பித்து டெல்லிக்கு சென்று போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம் இவரின் குடும்பத்தினரை கண்டறிய போலீசார் உதவியுள்ளனர்.
- சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டமடைந்துள்ளார்.
- தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 3 அன்று ப்ரூடோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டு கொண்டிருந்தான். கொஞ்சம் பெரிதாக உள்ள சாக்லேட் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.
சிறுவனின் தொண்டையில் சாக்லேட் சிக்கியதை அறிந்த அவரது தாய், பதட்டத்தில் சிறுவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
किंडरज्वॉय जैसी दिखने वाली फ्रूटोला टॉफी खाने के बाद 4 साल के बच्चे के गले में फंसने से मौत हो गई...।किसी भी जिम्मेदार अफसर ने इस घटना का संज्ञान नहीं लिया। मेरी @DMKanpur से निवेदन है कि खाद्य विभाग से इस टॉफी की सैंपलिंग कराकर कार्रवाई करें...।https://t.co/4XeZZLKgLM pic.twitter.com/JDNuAbHOW1
— Dilip Singh (@dileepsinghlive) November 4, 2024
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களால் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த சாக்லேட்டை அகற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் அந்த சிறுவனை மேலும் பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு போதிய சிகிச்சை கிடைக்கவில்லை.
இறுதியில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 3 மணி நேரமாக மூச்சுத் திணறித் துடிதுடித்து சிறுவன் உயிரிழந்தான்.
சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த கடைக்காரர் கடையை மூடிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடைக்காரரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து, அந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
- சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.
சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
- போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.
- சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் சிறுவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இன்று மாலை 6 மணி அளவில் நெரிசல் மிகுந்த பகுதியான பாரதி சாலையில் திடீரென ஒரு கார் அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என அனைத்து மீதும் தாறுமாறாக ஓடிய கார் விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக அங்கு இருந்த ஜாம்பஜார் போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.
பிடிப்பட்ட ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தனது உடன் படிக்கும் நண்பருடன், காரை இயக்கி வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தனது பெரியப்பாவின் காரை கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக விபத்து தொடர்பாக 2 சிறுவர்களிடமும் அண்ணாசதுக்கம் புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்திருக்கிறது. 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஜாம்பஜார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.
- தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான்
அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.
- ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
- போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றி உள்ளனர்.
9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி மூளைக்கட்டிக்கு மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இத்தகைய சூழ்நிலையில், ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சிறுவனின் விருப்பம் வாரணாசி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் ரன்வீர் பார்தி விருப்பத்தை வாரணாசி போலீசார் நிறைவேற்றினர்.

போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு மற்ற அதிகாரிகள் கைகுலுக்கி சல்யூட் அடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ADG Zone Varanasi tweets, "9-year-old child Ranveer Bharti is undergoing treatment for a brain tumour at Mahamana Cancer Hospital, Varanasi. In such a situation, Ranveer expressed his wish to become an officer at IPS, so the child's wish was fulfilled in the office" pic.twitter.com/VplVtIJI3f
— ANI (@ANI) June 26, 2024