என் மலர்
நீங்கள் தேடியது "auto"
- சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
சேலம்:
மலேசியா ஜேலான் தெண்டல் பேர்மை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவரது மனைவி ராஜேஸ்வரி (40), மகன் தீபன் (21) ஆகியோருடன் சேலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில், தங்கள் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை பகுதிக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது சேலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்ற, அரசு பஸ் கவிழ்ந்து கிடந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால், அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
- நாகேந்திரன் குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார்.
- ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிச்சை பிள்ளை மகன் நாகேந்திரன் (வயது 48).
பாலத்தில் மோதி கவிழ்ந்தது
ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 18-ந் தேதி குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரம் ஊருக்கு கிழக்கே உள்ள பாலத்தில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நாகேந்திரன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்ததை பார்த்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்காவில் 466-வது ஆண்டு கந்தூரி விழா வருகிற 24-ந் தேதி தொடங்கி ஜனவரி 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாகூர் பகுதியில் உள்ள 150 ஆட்டோ, ரிக்க்ஷா ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசும்போது:-
ஆட்டோ, ரிக்க்ஷா வாகனங்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்களை ஏற்றக்கூடாது, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றார்.
- ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81).
- இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81). இவர் நேற்று அவரது ஊரில் இருந்து ரெட்டியார்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, அய்யாதேவர் சென்ற மொபட்டின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யாதேவர் சம்பவ இடத்திலலேயே இறந்தார்.
இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிகயில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கபிலர்மலை அட்மா தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய கழக செயலாளருமான சண்முகம், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவக்குமார், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது.
- பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்
தஞ்சாவூர்:
தஞ்சையில் புதிதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ என்று புதிதாக ஆரம்பித்து உள்ளனர்.
இந்த மீட்டர் ஆட்டோ வாகனமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது .
அதனை தொடர்ந்து அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆட்டோ ஓட்டுநர்களை தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு லட்சுமி நாராயணன் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் வழிநடத்திச் செல்கின்றார்.
குறிப்பாக பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ குடும்பத்தில் இணைவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு தங்களது வாகனத்தின் அசல் சான்றுகளை சமர்ப்பித்து தங்களுடன் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ சார்பாக தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் முற்றிலும் எந்த ஒரு வாகனம் நிறுத்தும் ஸ்டேன்ட் இடம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களை கருத்தில் கொண்டு அவர்களை ஒன்றிணைத்து மீட்டர் ஆட்டோ என்று தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
- தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
- இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் சேகர் என்பவரும் நண்பர்கள் எனக் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ராஜ்குமாரை திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீ சார் , அடிதடி வழக்கில், தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (47), அவரது மகன் அரவிந்த் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார்.
- இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.
உடுமலை :
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மனப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 38).டிரைவரான இவர் கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார். அங்கு பேப்பரை இறக்கி விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த அவர் அதிகாலை உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி அருகில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லோடு ஆட்ேடா ஒன்று நின்று கொண்டிருந்த லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அந்த லாரியில் இடது புறம் அமர்ந்திருந்த கேரள மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த கிளீனர் உன்னிகிருஷ்ணன் (வயது 52) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த டிரைவர் ராமச்சந்திரனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25).
- நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
நெல்லை:
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
பன்னீர் ஊத்து விலக்கில் இருந்து இரண்டும் சொல்லான் கிராமம் செல்லும் ரோட்டில் சென்றபோது எதிர்பா ராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
பெண் பலி
இதில் செல்வி படுகாயம் அடைந்தார். முத்துகாளை, சுப்பிரமணியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வி உள்பட 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
- முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கி தருமாறு உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-
விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முதல் 2017ம் ஆண்டு வரை அதிக மக்களை ஏற்றியதாக 27 ஆயிரத்து 751 ஆட்டோக்களும், மீட்டர் இல்லாமல் இயக்கி யதாக 10 ஆயிரத்து 286 ஆட்டோக்களும், சீட்டை மாற்றி அமைத்து இயக்கி யதாக 2 ஆயிரத