என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ கட்டணம்"

    • செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.
    • ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் நிறைவடைந்து 13-ம் ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

    செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.

    எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுவரை 10 மாதங்களாகிவிட்டன. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் மட்டும் இன்னும் உயரவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.

    ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?

    இனியாவது இந்தப் போக்கை கைவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ-டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது.
    • கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாவது உண்டு.

    அவ்வகையில் பெங்களூருவில் மழைக்காலங்களில் ஆட்டோ பயணங்களுக்கு அதிக பணம் வசூலிப்பதாக இணையத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

    அந்த பதிவில், ""நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒரு ஆட்டோவை முன்பதிவு செய்ய முயன்றார். அப்போது ஊபர் செயலியில் ஒரு கிலோமீட்டர் ஆட்டோ பயணத்திற்கு ரூ.425 காட்டப்பட்டது. அதே நேரத்தில் கார் பயணத்திற்கு தோராயமாக ரூ.364 விலை நிர்ணயிக்கப்பட்டது. இது குறுகிய கால பயணத்திற்கு மிகவும் விலை உயர்ந்தது. இதை பார்த்தவுடன் அவர் உடனடியாக, அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்" என்று தெரிவித்தார்.

    இந்த பதிவு இணையத்தில் வைரலாக அதிகப்படியான ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

    • காத்​திருப்பு கட்டணம் நிமிடத்​துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும்.

    சென்னை:

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும். 3 கி.மீ.க்கு ரூ.72, 4 கி.மீ.க்கு ரூ.90, 5 கி.மீ.க்கு ரூ.108, 6 கி.மீ.க்கு ரூ.126, 7 கி.மீ.க்கு ரூ.144, 8 கி.மீ.க்கு ரூ.162, 9 கி.மீ.க்கு ரூ.180, 10 கி.மீ.க்கு ரூ.198 கட்டணம் ஆகும்.

    11 கி.மீ.க்கு ரூ.216, 12 கி.மீ.க்கு ரூ.234, 13 கி.மீ.க்கு ரூ.252, 14 கி.மீ.க்கு ரூ.270, 15 கி.மீ.க்கு ரூ.288, 16 கி.மீ.க்கு ரூ.306, 17 கி.மீ.க்கு ரூ.324, 18 கி.மீ.க்கு ரூ.342, 19 கி.மீ.க்கு ரூ.360, 20 கி.மீ.க்கு ரூ.378 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    21 கி.மீ.க்கு ரூ.396, 22 கி.மீ.க்கு ரூ.414, 23 கி.மீ.க்கு ரூ.432, 24 கி.மீ.க்கு ரூ.450, 25 கி.மீ.க்கு ரூ.468, 26 கி.மீ.க்கு ரூ.486, 27 கி.மீ.க்கு ரூ.504, 28 கி.மீ.க்கு ரூ.522, 29 கி.மீ.க்கு ரூ.540, 30 கி.மீ.க்கு ரூ.558 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    31 கி.மீ.க்கு ரூ.576, 32 கி.மீ.க்கு ரூ.594, 33 கி.மீ.க்கு ரூ.612, 34 கி.மீ.க்கு ரூ.630, 35 கி.மீ.க்கு ரூ.648, 36 கி.மீ.க்கு ரூ.666, 37 கி.மீ.க்கு ரூ.684, 38 கி.மீ.க்கு ரூ.702, 39 கி.மீ.க்கு ரூ.720, 40 கி.மீ.க்கு ரூ.738 கட்டணம் ஆகும்.

    41 கி.மீ.க்கு ரூ.756, 42 கி.மீ.க்கு ரூ.774, 43 கி.மீ.க்கு ரூ.792, 44 கி.மீ.க்கு ரூ.810, 45 கி.மீ.க்கு ரூ.828, 46 கி.மீ.க்கு ரூ.846, 47 கி.மீ.க்கு ரூ.864, 48 கி.மீ.க்கு ரூ.882, 49 கி.மீ.க்கு ரூ.900, 50 கி.மீ.க்கு ரூ.918 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    51 கி.மீ.க்கு ரூ.936, 52 கி.மீ.க்கு ரூ.954, 53 கி.மீ.க்கு ரூ.972, 54 கி.மீ.க்கு ரூ.990, 55 கி.மீ.க்கு ரூ.1,008, 56 கி.மீ.க்கு ரூ.1,026, 57 கி.மீ.க்கு ரூ.1,044, 58 கி.மீ.க்கு ரூ.1,062, 59 கி.மீ.க்கு ரூ.1,080, 60 கி.மீ.க்கு ரூ.1,098 கட்டணம் ஆகும்.

    • தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார்.
    • ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முடிவு.

    வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

    ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என அறிவித்துள்ளது.

    • பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

    ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆலோசனையின்போது, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கவும் அனுமதி தரவும் வாடகை ஆட்டோக்களுக்கான செயலியை அரசு அறிமுகப்படுத்தவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஓலா, உபேர் சேவைக்கு அரசு சார்பில் செயலி உருவாக்க கோரிக்கை விடுத்தனர்.

    * சென்னையில் பைக் டாக்சிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    * முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    • ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது.

    சென்னை:

    அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தொ.மு.ச. தலைவர் துரை, ஏ.ஐ. டி.யு.சி. பொதுச்செயலாளர் சம்பத் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் மீட்டர் கட்டண உயர்வு, அரசு ஆட்டோ ஆப் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

    சென்னை ஐகோர்ட்டு ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயக்குழு அமைத்து ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது. பின்னர் ஆட்டோ கட்டண மறு நிர்ணயக்குழு கூடி ஆலோசித்து ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பான தனது ஆலோசனையை வழங்கியது.

    ஆனால் இதுவரை புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.

    இந்த காலதாமதம் ஆட்டோ தொழிலாளர்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் எங்கள் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலில் அரசுக்கு பரிந்துரை செய்தது.
    • அதன்படி 1.5 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18 ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25ஆக தமிழக அரசு நிர்ணயித்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் என்று வசூலிக்கப்பட்டது.

    மேலும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்பிறகு விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ டிரைவர்கள் கைவிட்டனர். மேலும் தனியார் செயலி நிறுவனங்களும் கட்டணங்களை நிர்ணயித்து ஆட்டோக்களை இயக்கின. இதை பயன்படுத்தி அந்த நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலிக்க தொடங்கி உள்ளன.

    இந்தநிலையில் தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து டிஜிட்டல் மீட்டர்களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் டிரைவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலில் அரசுக்கு பரிந்துரை செய்தது.

    அதன்படி 1.5 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18 ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்தநிலையில் குழு பரிந்துரைத்த கட்டண உயர்வை ஏற்க ஆட்டோ டிரைவர்கள் மறுத்து விட்டனர். சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சம் ரூ.40 என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இதுகுறித்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நேரத்துக்கும், தூரத்துக்குமான வேறுபாடுகளை ஒப்பிட்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும், கூடுதலாக 1 கி.மீட்டருக்கு ரூ.20 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். இதற்கான செயலியை உருவாக்கி அரசே இதை கண்காணித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும். ஜி.பி.எஸ். கருவிகளை பயன்படுத்தி தூரத்தை பதிவு செய்யலாம். இதனால் கட்டணம் தொடர்பாக பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை தடுக்க முடியும். 9 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கட்டணங்களை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை.

    இந்த இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

    மத்திய அரசு

    இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.

    இந்த உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், ஆன்லைன் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.







    நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு என விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா கூறியுள்ளார். #JayantSinha
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா பேசும்போது விமானக் கட்டணத்தையும் ஆட்டோக் கட்டணத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    இன்றைய காலத்தில் நமது நாட்டில் விமான கட்டணம் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ சவாரியை விட விமானக் கட்டணம் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும்.

    இது எப்படி என்று கேட்பீர்கள். 2 பேர் ஒரு ஆட்டோவில் சவாரி செய்தால் அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10-ஐ கட்டணமாக கொடுக்கிறார்கள். அப்படியென்றால் இருவரும் ஒரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.5 செலவிடுகின்றனர். ஆனால் நீண்ட தூரம், குறிப்பாக கோரக்பூரில் இருந்து மும்பைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ விமானத்தில் பயணம் செய்தீர்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூ.4 மட்டும்தான்.

    அதற்காக குறுகிய தூரத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. விமான கட்டணம் குறைவு என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன்.

    நம்மைப் போன்றதொரு பெரிய நாட்டில் தற்போது தொலைதூர விமானப் பயணம் பெரிதும் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதில் கட்டணம் குறைவு. அதேநேரம் விமான பயணம் விரைவாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JayantSinha
    ×