search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி, ராகுல் காந்தி
    X
    சோனியா காந்தி, ராகுல் காந்தி

    பாஜக அரசை கண்டித்து டிசம்பர் 12ம் தேதி மெகா பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு

    விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக பிரதமர் மோடி அரசைக் கண்டித்து மெகா பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசைக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் அடுத்த மாதம் 12-ம் தேதி தலைநகர் டெல்லியில் மெகா பேரணியை நடத்த உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், மக்களின் தீராத வலியையும் துன்பத்தையும் பிரதமர் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×