search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto drivers"

    • புதுவை புதிய பஸ் நிலையம் மோடி ஆட்டோ ஸ்டேண்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
    • ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் மோடி ஆட்டோ ஸ்டேண்டில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான பிரபுதாஸ் ஏற்பாட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார். இதேபோல் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயணன், பா.ஜனதா பிரமுகர்கள் சாம்ராஜ், அந்துவான்பிரபு, சக்திவேல் கீதா, லட்சுமி, அப்பு, மோடி ஆட்டோ ஸ்டேண்ட் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
    • ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.

    ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.

    • நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • சிவப்பு நிற பஸ்கள் டிக்கெட் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி சென்று விடுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

    சிவப்பு நிற பஸ்கள்

    இங்கு ரெயில் மூலமாக வந்து இறங்கும் பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் சிவப்பு நிற பஸ்கள் டிக்கெட் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி சென்று விடுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

    சிறைபிடிக்கும் போராட்டம்

    பஸ்களை சந்திப்பு பஸ் நிலையம் அருகிலேயே நிறுத்திவிட்டு செல்லும்படியும், ரெயில் நிலையம் வரைக்கும் கொண்டு வர வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து பஸ்கள் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் அரசு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் ரெயில் நிலையம் முன்பு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்களுடன் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அவர்களுடன் நெல்லை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    • தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபு ஏற்பாட்டில் முத்தியால்பேட்டை சோலை நகரில் தி.மு.க. ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டோ ஸ்டாண்டு பெயர் பலகையை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்து, ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

    விழாவில் தொகுதி செயலாளர் சவுரிராஜன்,முன்னாள் கவுன்சிலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், துணை அமைப்பாளர் அமுதா குமார், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், தொழிற்சங்க தலைவர் அண்ணா அடைக்கலம், ஆட்டோ சங்கத் தலைவர் மெஷில், முன்னாள் கவுன்சிலர் தனசேகர், எழிலன், மணவெளி பொறுப்பாளர் சண்முகம், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, கதிர்காமம் பொறுப்பாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மேயர், துணைமேயரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    ஸமார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 நடை மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பிளாட்பாரத்தில் இருந்து அதிக தூரத்தில் இருசக்கர வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில் செல்லும் பயணிகள் வாகனங்களை காப்பகத்தில் நிறுத்திவிட்டு வெகு தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

    புதிய பஸ்நிலைய பகுதியில் சுமார் 132 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை.

    இதனால் வெளியூர்க ளுக்கு செல்லும் முதி யவர்கள், மாற்று திறனாளிகள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு சிரமத்து டன் நடந்து செல்கிறார்கள்.

    எனவே அவர்கள் நலன் கருதி 5 ஆட்டோக்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சுழற்சி முறையில் 5 ஆட்டோக்களாக தினமும் சென்று வருவோம்.

    இதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

    தேவையில்லாத கூட் டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், விபத்து அபாயத்தை தடுக்கவும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புகார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சில ஆட்டோக்கள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயங்குவதாகவும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி கூறுகையில்,பு கார்களின் அடிப்படையில் பல்லடம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது இதையடுத்து ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களை உரிய ஆவணங்களுடன் இயக்கவேண்டும், கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளுடன் ஆட்டோவை இயக்குதல், உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடக்கூடாது என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இனி அடிக்கடி ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆட்டோ டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும்.
    • மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டுமென டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து போலீசார் ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுறுத்தியதாவது:-

    ஆட்டோ மற்றும் டிரைவர்கள் அரசு அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்ற வேண்டும். அனுமதியை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றக்கூடாது. மாணவர்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் கதவு பூட்டப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வாகனத்தை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.போக்குவரத்து விதி மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குழந்தைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும். மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    வேகத்தடைகள் உள்ள பகுதிகளிலும் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் கவனமாக கடந்து செல்ல வேண்டும். வாகனத்தில் பிரேக் நல்ல முறையில் உள்ளதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    • ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது.

    சென்னை:

    அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தொ.மு.ச. தலைவர் துரை, ஏ.ஐ. டி.யு.சி. பொதுச்செயலாளர் சம்பத் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் மீட்டர் கட்டண உயர்வு, அரசு ஆட்டோ ஆப் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

    சென்னை ஐகோர்ட்டு ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயக்குழு அமைத்து ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது. பின்னர் ஆட்டோ கட்டண மறு நிர்ணயக்குழு கூடி ஆலோசித்து ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பான தனது ஆலோசனையை வழங்கியது.

    ஆனால் இதுவரை புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.

    இந்த காலதாமதம் ஆட்டோ தொழிலாளர்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் எங்கள் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை தங்களது வாகனத்தில் பயணிக்குமாறு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.

    அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கிருமாம்பாக்கத்தில் சவாரி செல்வதில் ஆட்டோ டிரைவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    பாகூர்:

    புதுவை கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது. இந்த ஆட்டோ ஸ்டேண்டில் கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 33). மற்றும் கிருமாம்பாக்கம்- பிள்ளையார் குப்பம் சாலையை சேர்ந்த வேலுமணி (40) உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் நேர அட்டவணைப்படி ஆட்டோ ஓட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கார்த்திக் செல்ல வேண்டிய சவாரியை வேலுமணி ஏற்றி சென்றார். இதனை வேலுமணியிடம் கார்த்திக் தட்டிக் கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுமணி பேனாவால் கார்த்திக் முகத்தில் சரமாரியாக குத்தினார்.

    இதில், மூக்கு, காது, உதடு உள்ளிட்ட முகம் முழுவதும் படுகாயம் அடைந்த கார்த்திக் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து வேலுமணியை தேடி வருகிறார்.

    பயணிகளை ஏற்றுவது மற்றும் முன் விரோத தகராறில் 2 ஆட்டோ டிரைவர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது.
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர். இவருக்கும், இதயம் நகரைச் சேர்ந்த ஜப்பான் ராஜா (வயது 26) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. 

    சம்பவத்தன்று பி.பி.குளம் மெயின்ரோடு பகுதியில் சுரேஷ்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது ஜப்பான்ராஜா, யோகராஜ் (26) ஆகியோர் வழிமறித்து தகராறு செய்தனர்.

    அவர்கள் சுரேஷ்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜப்பான்ராஜா மற்றும் யோகராஜை கைது செய்தனர். 

    மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (32). இவரது தம்பி கார்த்திக், ஆட்டோ டிரைவர். இவருக்கும், மற்றொரு டிரைவரான நாகராஜ் என்பவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

    இதில் நாகராஜை, சரவணன் தாக்கினார். இந்த முன்விரோதத்தில் முடக்கத்தான் கண்மாய் பகுதியில் சரவணன் நின்றபோது நாகராஜ், கருப்பு, செல்வம் ஆகியோர்  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    போலீசாரை கண்டித்து திருவாரூரில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இந்த ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் பெயரை சங்கத்திற்கு தொடர்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்தியதுடன், மற்றொரு ஆட்டோ நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தினர். இதுபற்றி சி.ஐ.டி.யூ. ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று கொரடாச்சேரி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப் பட்டு பஸ் நிலையம் ரவுண்டானாவை அடைந்தனர். அங்கு ஆட்டோ தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் குணசீலி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×