என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஆட்டோ டிரைவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

    கோவை:

    கோவையில் ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


    தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தற்போது அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி அளித்து உள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் எங்கும் பைக் டாக்ஸி இல்லை. எனவே, பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

    டாக்ஸிகளுக்கு அனுமதி என்றால் ஆட்டோக்களுக்கு வெள்ளை போர்டு அனுமதி வழங்க வேண்டும். எங்களது அடுத்தகட்ட போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். மேலும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×