என் மலர்
நீங்கள் தேடியது "Ola"
- அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
had to porter myself to office today cuz no ola uber :( pic.twitter.com/pzLHoTG2QF
— pathik (@pathikghugare) February 6, 2025
அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.
வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
- ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் 9bhp பவரை வழங்கும் 7kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
- ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கில் 14bhp பவரை வழங்கும் 11kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ரோட்ஸ்டர் எக்ஸ் . ரோட்ஸ்டர் எக்ஸ்+ என 2 மாடல்களில் 5 வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது.
ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் 9bhp பவரை வழங்கும் 7kW மின்சார மோட்டார் உள்ளது. 2.5kWh மற்றும் 3.5kWh ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 105 கிமீ வேகத்திலும் 4.5kWh ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 118 கிமீ வேகத்திலும் பயணம் செய்யலாம்.
4.5kWh மற்றும் 9.1kWh பேட்டரி கொண்ட ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கில் 14bhp பவரை வழங்கும் 11kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகளில் 2.8 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டிவிடலாம். இந்த இரண்டு மாடல்களும் 1kW சார்ஜருடனும் விருப்பப்பட்டால் 2.2kW சார்ஜருடனும் கிடைக்கும்.
ஏப்ரல் 2025 இல் வெளிவரும் 9.1kWh எலக்ட்ரிக் பைக்கை தவிர மற்ற பைக்குகள் மார்ச் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோ ரூம் விலை:
ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5kWh) - ரூ.74,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (3.5kWh) - ரூ.84,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (4.5kWh) - ரூ.94,999
ரோட்ஸ்டர் எக்ஸ்+ (4.5kWh) - ரூ.1,04,999
ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1kWh) - ரூ.1,54,999
- இந்த பைக்கின் உட்சபட்ச வேகம் 124 கிமீ ஆகும்.
- இந்த பைக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை ஓட்டலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கை பிப்ரவரி 5ம் தேதி ஓலா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
ரோட்ஸ்டர் ப்ரோ , ரோட்ஸ்டர் எக்ஸ் . ரோட்ஸ்டர் என 3 மாடல்களில் 8 வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது.
இந்த பைக்குகளில் 2.8 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டிவிடலாம். இந்த பைக்கின் உட்சபட்ச வேகம் 124 கிமீ ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை ஓட்டலாம்.
இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோ ரூம் விலை:
ரோட்ஸ்டர் ப்ரோ (8kWh) - ரூ.1,99,999
ரோட்ஸ்டர் ப்ரோ (16kWh) - ரூ.2,49,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (2.5kWh) - ரூ.74,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (3.5kWh) - ரூ.84,999
ரோட்ஸ்டர் எக்ஸ் (4.5kWh) - ரூ.99,999
ரோட்ஸ்டர் (3.5kWh) - ரூ.1,04,999
ரோட்ஸ்டர் (4.5kWh) - ரூ.1,19,999
ரோட்ஸ்டர் (6kWh) - ரூ.1,39,999
- புதிய ஓலா S1X வெள்ளை, நீலம், சிவப்பு, வெள்ளி மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் விற்பனையாகிறது.
- இந்த ஸ்கூட்டரில் இப்போது வயர் டெக் மூலம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் அதன் ஜென் 3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது தற்போதைய மாடல்களை விட அதிக அம்சங்கள் கொண்டது, மேம்பட்டது மற்றும் இலகுவான மாடலில் இன்று முதல் விற்பனையாகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள அனைத்தும் புதியவை என்று நிறுவனம் கூறுகிறது. சேசிஸ் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது. மோட்டாரில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி செல்கள் புதியவை. இந்த ஸ்கூட்டரில் இப்போது வயர் டெக் மூலம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஓலா S1X மூன்று பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும். 2kWh (ரூ. 80,000), 3kWh (ரூ. 90,000) மற்றும் 4kWh (ரூ. 1 லட்சம்). இதன் 4kWh பேட்டரி அதிகபட்சமாக மணிக்கு 123 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 242 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3kWh பேட்டரி 176 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இது அதிகபட்சம் 113 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 2kWh அதிகபட்ச வேகம் 101 கிலோமீட்டர்கள் ஆகும். இது 108 கிலோமீட்டர் வரை செல்லும்.
புதிய ஓலா S1X வெள்ளை, நீலம், சிவப்பு, வெள்ளி மற்றும் கருப்பு என ஐந்து வண்ணங்களில் விற்பனையாகிறது. இந்த ஸ்கூட்டர்கள் 3 ஆண்டுகள்/40,000 கிலோமீட்டர்கள் உத்தரவாதத்துடன் வருகின்றன. ஆனால் கூடுதலாக ரூ.14,999 செலுத்துவதன் மூலம் பேட்டரி உத்தரவாதத்தை 8 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோமீட்டர்களாக நீட்டிக்கலாம்.
- ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது.
- புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பைக் பிரியர்களுக்கு புது மாடல்கள் வரவர அதன் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். அதே சமயத்தில் தங்களின் பொருட்செலவுக்கு ஏற்றார் போல் இருந்தால் கேட்கவே வேண்டாம். கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் அறிவித்த ஓலா ஜென் 3 ஸ்கூட்டரின் டீசர் வீடியோ வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஓலா ஜென் 3 ரேஞ்ச் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்காக பலரும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் அதன் ஜென் 3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இது தற்போதைய மாடல்களை விட அதிக அம்சங்கள் கொண்டது, மேம்பட்டது மற்றும் இலகுவானது என்று நம்பப்படுகிறது.
மோட்டார், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை ஒரு யூனிட்டில் ஒருங்கிணைக்க அந்நிறுவனம் பேட்டரி கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஜென்-1 மாடலில் வழங்கப்பட்ட 10 பிராசஸர்கள், ஜென்-2 மாடல்களில் நான்காக குறைக்கப்பட்டன. தற்போது ஜென் 3 மாடல்களில் இது மேலும் குறைந்து ஒற்றை பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இது திருத்தப்பட்ட ஆர்கிடெக்ச்சரில் வயரிங் அமைப்பை பெருமளவு மாற்றியுள்ளதோடு, அதன் சிக்கலையும் குறைக்கும்.

அம்சங்களைப் பொறுத்தவரை, ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த அமைப்பை இயக்கும் மென்பொருள் புதுப்பிக்கப்படும். இத்துடன் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது ஆரம்பத்தில் வழங்கப்படாமல், அப்டேட் மூலம் பின்னர் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஓலா S1 X 2kWh மாடலின் விலை ரூ. 79,999 (எக்ஸ்-ஷோரூம்) என்று துவங்கும் என தெரிகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.59 லட்சமும், 4kWh மற்றும் 3kWh மாடல்களின் விலை முறையே ரூ. 1.5 லட்சம் மற்றும் ரூ. 1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என தெரிகிறது.
- ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பவிஷ் அகர்வால் பகிர்ந்துள்ளார்.
- இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் சந்தைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Going to ride this soon! Arrowhead @OlaElectric pic.twitter.com/mXPmXo4GWD
— Bhavish Aggarwal (@bhash) January 28, 2025
- உபேர், ஓலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.
- ஐபோன், ஆண்ட்ராய்டில் பதிவுசெய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
புதுடெல்லி:
டாக்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.
இந்தச் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வெளியாகின.
இந்தப் புகார்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவுசெய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக உபேர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்.
- கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஓலா கேப் வாடிக்கையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
மும்பையை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் பிஸியான சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஆம்லெட் செய்யும் செய்முறை வீடியோக்களை பார்ப்பதைக் காட்டுகிறது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வாடிக்கையாளர், ஓட்டுநரின் நடத்தைக்காக ஓலாவை கடுமையாக சாடி உள்ளார்.
டார்க் நைட் என்ற எக்ஸ் தள பயனாளர் இந்த வீடியோவை வெளியிட்டு அதில், அன்புள்ள ஓலா, உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார். உங்கள் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதுவும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாக மாறுவதற்கு முன்பு நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கேப் டிரைவரின் நடத்தையை கடுமையாக சாடிய அவர், தற்போதைய விவகாரத்தில் நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வைரலான வீடியோ தொடர்பாக மும்பை காவல்துறை அவரது எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்தது.
கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும், பரபரப்பான சாலைகளில் வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வாகன ஓட்டுநரின் கவனக்குறைவானது, காரில் பயணிப்போர் மற்றும் சாலையில் செல்லும் குடிமக்களின் உயிர்களை இழக்கும் பெரும் சோகத்தில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.
Dear Ola,Your driver is learning how to cook an omlette while driving at the cost of risking our lives. Your scooters are already on fire, hope you take corrective measures before this one also turns up in flames and soon turn into ashes.@Olacabs @bhash @MumbaiPolice @MMVD_RTO pic.twitter.com/RBi0jEWbgX
— DARK KNIGHT (@ROHANKHULE) December 24, 2024
- ஒரே பயணத்திற்கு ஐபோனில் காட்டும் கட்டணத்தை விட ஆண்ட்ராய்ட் போனில் ரூ.52 அதிகமாக காட்டுவதாக புகார்.
- ஊபரில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும் ஸ்க்ரீன்ஷாட்டை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஊபர் செயலியில் ஒரே பயணத்திற்கு இருந்து புக்கிங் செய்தபோது வெவ்வேறு கட்டணங்கள் காட்டுவதாக எக்ஸ் பக்கத்தில் சுதிர் என்ற பயனர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், "ஒரே பயணத்திற்கு எனது மகளின் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஊபர் செயலியில் கட்டணம் ரூ. 290.79 ஆகவும், என்னுடைய ஐபோனில், கட்டணம் ரூ.342.47 ஆகவும் காட்டுகிறது. அதனால் எனது மகளிடம் தான் பெரும்பாலும் ஊபர் புக் செய்ய சொல்வேன். உங்களுக்கும் இது நடக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஊபர் செயலியில் 2 தொலைபேசியில் இருந்து வெவ்வேறு கட்டணங்கள் காட்டும்" ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
இவரது குற்றச்சாட்டிற்கு ஊபர் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், "இந்த இரண்டு சவாரிகளிலும் உள்ள பல வேறுபாடுகள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில், பிக்-அப் பாயிண்ட், வாடிக்கையாளரின் இடத்திற்கு வரும் நேரம் மற்றும் டிராப்-ஆப் பாயின்ட் மாறுபடுகிறது. அதற்கேற்ப கட்டணங்கள் மாறுபடுகிறது. செல்போன்களின் அடிப்படையில் பயண விலைகளை ஊபர் மாற்றியமைப்பதில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- புதிய செயலியை உருவாக்க ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் கோரிக்கை.
சென்னை:
சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.
ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.
ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூட காண்பிக்கும் தொகையை விட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் என கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.
இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.
புதிய கட்டண விவரத்தை அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.
- ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார்.
- குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.
எலக்ட்ரிக் வாகனங்களை அரசு ஊக்குவித்தாலும் அவற்றை பராமரிப்பது பழுதுபார்ப்பதில் உள்ள சிக்கல் வாடிக்கையாளர்களைப் பின்வாங்கச் செய்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா விளங்கி வருகிறது.
அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார். ஆனால் வாங்கிய ஒரு மாதத்திலேயே அதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதை பழுதுபார்க்க ஓலா நிறுவனம் ரூ.90,000 சார்ஜ் கேட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.
ஷோரூம் வாசாலில் தடாலடியாக அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குட்டி யானையில் இருந்து இறக்கிய அவர் கையோடு கொண்டு வந்த சுத்தியலால் ஆத்திரம் தீர அதை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ரிப்பேர் செய்ய ரூ.90,000 ஓலா கேட்டதையும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
OLA with Hatoda ????@kunalkamra88 pic.twitter.com/mLRbXXFL4G
— Anil MS Gautam (@realgautam13) November 23, 2024
கடந்த மாதம், Ola Electric நிறுவனம் தங்களுக்கு வந்த 10,644 புகார்களில் 99.1 சதவீதம் தீர்க்கப்பட்டதாக்கத் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (NCH) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்கூறிய சம்பவம் எங்கு எப்போது நடந்து என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்தனர். இந்த மாத தொடக்கத்தில், ஓலா எலெக்ட்ரிக் அதன் இரண்டாவது காலாண்டில் ரூ.495 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.524 கோடியாக இருந்தது. ஆனால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
ஓலா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகார்கள் சரி செய்யப்பட்டதாகவும், அதன் விற்பனை மற்றும் இணைந்த சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.