என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ola"

    • ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் அடிக்கடி Repair-ஆன ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

    ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஓலா ஸ்கூட்டர் Repair ஆனதை பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    • பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.
    • ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கிறது.

    அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஊபர் (UBER) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக டாரா கோஸ்ரோஷாஹி உள்ளார். இந்நிறுவனம் கார் டேக்ஸி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் தங்கள் பிரதான போட்டியாளராக இருந்த ஓலா (OLA) நிறுவனத்தை முந்தி ராபிடோ (Rapido) நிறுவனம் தங்களுக்கு பிரதான போட்டியாளராக மாறியுள்ளதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக, ஓலா நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர், ஓட்டுநர் கமிஷன் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.

     

    மறுபுறம், 2015-ல் துவங்கப்பட்ட ராபிடோ நிறுவனம், முதலில் இரு சக்கர வாகன டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி சந்தையில் விரைவாக வலுவான இடத்தைப் பிடித்தது. பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.

    குறைந்த கமிஷன் கட்டணமே ராபிடோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கும் நிலையில், ராபிடோ 0-5% மட்டுமே வசூலிக்கிறது. ராபிடோ தளத்தில் மாதம் 20 லட்சம் ஓட்டுநர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

    • இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.
    • ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 2025 ஓலா S1 ப்ரோ பிளஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.

    ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் விலை முன்பு ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது, இது தற்போதைய விலையை விட ரூ. 30,000 அதிகம். அதேபோல், 2025 ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.90 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 34,000 குறைவாகும்.

    வாடிக்கையாளர்கள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களையும் அருகில் உள்ள ஓலா டீலர்ஷிப் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ முன்பதிவு செய்யலாம். 2025 நவராத்திரி பண்டிகையின் போது, அதாவது செப்டம்பர் 2025 கடைசி வாரத்தில் இந்த மாடல்களின் டெலிவரி தொடங்கும்.



    ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் மாடலில் 13kW (17.5bhp) மின்சார மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 5.3kWh வேரியண்டிற்கு ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்துகிறது. 4kWh வேரியண்ட் அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் 5.3kWh வேரியண்ட் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர்கள் (IDC) வரை செல்லும் ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4kWh வேரியண்ட் 242 கிலோமீட்டர்கள் (IDC) வரை ரேஞ்ச் வழங்குகிறது.

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தை வழங்குகிறது. ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 9.1kWh வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 501 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4.5kWh வேரியண்ட் 252 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்குகிறது.

    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது

    அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது

    மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை, அதிகபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    • ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 501 கிமீ ஐடிசி வரம்பைக் கொண்டுள்ளது.
    • ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் 4.3 இன்ச் TFT திரையைக் கொண்டுள்ளது.

    ஓலா நிறுவனம் தற்போது டெல்லியில் ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலுக்கான டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பே அதன் எலெக்ட்ரிக் பைக்கிற்கான டெஸ்ட் டிரைவ் செய்ய தொடங்கிவிட்டது. வருங்கால வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவோ அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப் சென்றோ டெஸ்ட் டிரைவ் மேற்கொள்ள முன்பதிவு செய்யலாம். மேலும், முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள சலுகைகளையும் ஓலா அறிவித்துள்ளது.

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்: பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன்

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மூன்று பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டுள்ளது. 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh பேட்டரி பேக். இந்த பேட்டரி வகைகள் 9 bhp இன் பீக் பவர் வெளியிடும் திறன் கொண்டுள்ளன. இதற்கிடையில், ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 4.5 kWh மற்றும் 9.1 kWh பேட்டரி பேக் விருப்பத்தைப் பெறுகிறது. இது சுமார் 14.75 hp பீக் பவர் வழங்குகிறது.



    ஓலா ரோட்ஸ்டர் X: ரேஞ்ச்

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 501 கிமீ ஐடிசி வரம்பைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ ஆகும். மேலும் 0-40 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்: அம்சங்கள்

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் 4.3 இன்ச் TFT திரையைக் கொண்டுள்ளது. இது வழிசெலுத்தல் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான புளூடூத் இணைப்பை ஆதரிக்கிறது. இது DIY பயன்முறை, பயணக் கட்டுப்பாடு, அப்சைடு டவுன் செயல்பாடு மற்றும் பலவற்றையும் வழங்குகிறது. மேலும், அனைத்து ரோட்ஸ்டர் வகைகளும் பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம் மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பைப் பெறுகின்றன.

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்: விலை

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் ரூ.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையிலும், ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது.

    • குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள்.
    • இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார்.

    தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார். அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த பெண் அருகில் தான் எனக்கூறி இடத்தை சொல்கிறார். உடனே ஓலா பைக் டிரைவர் மேப்பில் அந்த இடத்தை பார்த்த போது, இந்த இடம் மிகவும் அருகில் தான் உள்ளது. அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள்? என கேட்கிறார். அதற்கு அந்த பெண், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு பயந்து தான் ஓலா புக் செய்ததாக கூறுகிறார். இதைக்கேட்ட டிரைவர் சிரிப்பது போல் காட்சிகள் உள்ளது.



    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
    • தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.

    வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது.

    கார், ஆட்டோ சவாரிக்கும் கூட ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்டது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவருக்கு ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது. 2 சவாரிகளும் வேறு, வேறு இடத்திற்கு முன்பதிவுக்காக வந்த நிலையில் இரு சவாரிகளையும் தஷ்ரத் ஒப்புக்கொண்டுள்ளார். வேறு, வேறு போன்களில் இருந்த வேறு, வேறு செயலிகள் வழியாக 2 இடங்களுக்கு ஒரே நம்பர் உள்ள ஆட்டோவில் தஷ்ரத் ஒப்புதல் அளித்துள்ள போனின் ஸ்கிரீன்ஷாட்டை ஹர்ஷ் என்ற பயனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பீக் பெங்களூரு என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகி றது.

    இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமப்பட்டனர்.

    ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் ஆப் வழியாக தங்கள் செல்போன் மூலம் வாகனங்களை புக்கிங் செய்து பயணம் செய்கிறார்கள்.

    இந்த போராட்டத்தால் அவர்கள் கார், ஆட்டோக்களை புக்கிங் செய்ய முடியவில்லை. ஆட்டோ நிலையங்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தினர். இதனால் வீடுகளில் இருந்து பஸ், ஆட்டோ நிறுத்தங்களுக்கு வந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் ஆப் பயன்படுத்தாத ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதில் தீவிர மாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.

    கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது.

    இதற்கிடையே இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, ஊபர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    வேலைநிறுத்தம் குறித்து ஜாகீர் உசேன் கூறியதாவது:-

    ஓலா, உபேர் செயலி மூலம் புக்கிங் செய்யப்படும் ஆட்டோ, கார் வாகனங்கள் இன்று முதல் 3 நாட்கள் ஓடாது. புக்கிங் எடுக்க மாட்டோம். 2 வருடமாக இந்த அரசு முறைப்படுத்தவில்லை. எங்கள் தொழிலை முறைப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
    • ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

    • ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
    • வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×