என் மலர்
நீங்கள் தேடியது "அதிக கட்டணம்"
- அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
- மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
22 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இதனை வெளியில் சொன்னால் மருத்துவ கல்வியில் தொடர முடியாது என்று அச்சுறுத்தவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, ஏழை, நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது
அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது
மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை, அதிகபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.
- மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
- இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம்.
ஈரோடு:
ஈரோட்டில் நேற்று தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தவில்லை. சில பஸ்களில் சில்லறை இல்லை என்பதால் ரூ.1, ரூ.2 தராமல் இருந்திருப்பார்கள். நாங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.
இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். அரசு அறிவித்தால் மட்டுமே உயர்த்தலாம். தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5 சில்லரை தட்டுப்பாடாக உள்ளது. சில்லரையை நாங்கள் கமிஷன் கொடுத்து வாங்குகிறோம்.
டீசல் ஒரு லிட்டர் ரூ.65 இருந்தபோது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும் இதர செலவுகள் அதிகரித்து ள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றனர். தங்களது கை காசுகளை போட்டு பஸ்களை இயக்கி வருகின்றனர் என்றனர்.
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு குறித்து கேட்டபோது ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து அரசு உத்தரவு இல்லாமல் பஸ் கட்டணம் நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். இன்று முதல் பழைய கட்டணம் வசூலிப்பதாக எங்களிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறிய ப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
- சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி ப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:-
அந்த்யோதயா ரெயிலானது முன்பதிவு இல்லா பெட்டி களுடன் ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
இந்த ரெயில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கப்பட வில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குறையாக உள்ளது.
இதனால் அந்த மக்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.
எனவே, அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல ஏதுவாக திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை வசூல்
- உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை
ஆலங்காயம்:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்பிளாசா அருகில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வேலூர் துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன்( வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி சொகுசு பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.
வழக்கமாக ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை கூடு தலாக அதிக கட்டணம் வசூல் செய்து வந்ததும்,சரக்கு வாகனங்கள் போல் பஸ்சின் மீது பொருட்கள் ஏற்றிச் சென்றது, சுற்றுலா வாகனம் என அனுமதி பெற்று பயணிகளை ஏற்றி பயன்படுத்தி வந்தது என அனுமதிக்கு புறம்பாக இயக்கி வருவது கண்டறியப்பட்டது. 4 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மீதான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
- ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது.
- ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், பிரீமியம் வகை பஸ்கள் ஆகியவற்றில் இருக்கை, படுக்கை வசதி கொண்டவை என 6 வகையான பஸ்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வழித் தடத்துக்கும் கட்டணம் வேறுவிதமாக இருக்கும்.
பஸ்களின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப் படி பஸ்களை முன்பதிவு செய்கின்றனர். இந்தப் பஸ்களில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பஸ்களைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த தொழிலுக்கு எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை. இந்தத் தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.
ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்த போதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது. ஆம்னி பஸ்கள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிதம்பரத்தில் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடலூர்:
சிதம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து பஸ்நிலையத்துக்கு பயணிகளிடம் அதிகமான வாடகை வசூல் செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 5 ஆட்டோ வாகனங்கள் அதிகமாக வசூல் செய்ததற்காகவும், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம், காப்புச் சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காகவும் அதனை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தினார். இனிவரும் காலங்களில் கோவில் நகரமான சிதம்பரத்துக்கு வருகை தரும் பயணிகளிடம் அடாவடியாக வசூல் செய்வதை ஆட்டோ டிரைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச் சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப் படங்களுக்கு ரூ.176.44, ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப் பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன.
ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தன.
அவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் தான் சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5 சதவீதம் முன் வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.
நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைக் கூறுகின்றனவா, இல்லையா? என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாட்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் லட்சியம் ஆகும்.
இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள் கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்ட தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்த பலவீனம் தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத்தயாரிப்பாளர்களின் பலம். ஆனால், இந்தக் கலாச்சாரம் தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களை கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.
ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். உரிமைகளுக்காக போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும் கூட, தமது திரைப்படத்தில் கைத்தட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான் நடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.
அதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ, காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kaala #PMK #AnbumaniRamadoss
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேரு பூங்கா முதல் சென்னை விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல்- நேரு பூங்கா மற்றும் சைதாப்பேட்டை- ஏஜி-டி.எம்.எஸ். இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரெயிலில் நேரடியாக செல்ல முடியும். சென்ட்ரல், எழும்பூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையம் இணைந்து தற்போது மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியுள்ளது.
பஸ் நிலையம், ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இடையே வரவேற்பு பெருகி வருகிறது. மேலும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்உள்ளதாக அமைந்துள்ளது.
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ஆகிய முக்கிய பகுதிகள் தற்போது இணைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கி இருப்பதால் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்ல ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.60-ம், சென்ட்ரல் -கோயம்பேடு ரூ.40, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.- விமான நிலையம் ரூ.50, சென்ட்ரல்- எழும்பூர் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரண வகுப்புகளுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விசேஷ வகுப்புக்கு இருமடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும், அதிகபட்சமாக ரூ.140 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் அல்லது ஸ்மார்ட்கார்டு மூலம் பயணம் செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பயணிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணம்தான் நாட்டிலேயே அதிகம் என்று தெரியவந்துள்ளது. கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை விட சென்னை மெட்ரோ ரெயிலில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், “இந்த அளவு கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என்றால் மெட்ரோ ரெயில் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். ரெயில்களை இயக்குவதற்கு தேவையான செலவுகளை சமாளிக்க கூடிய வகையில் இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் மாற்றி அமைப்பதும் கஷ்டமாகும்.
தினமும் மெட்ரோ ரெயிலில் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் வருவதாக இருந்தால் ஒரு பயணி மாதம் ரூ.2000 செலவிட வேண்டும். இது நடுத்தர மக்களுக்கு உகந்த கட்டணமல்ல. வசதி படைத்தவர்கள் செல்வதற்குதான் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
எனவே மெட்ரோ ரெயில் கட்டணத்தை சற்று குறைத்தால் நடுத்தர மக்களும் அதிகளவு பயன்படுத்துவார்கள் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.#Chennaimetrotrain
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.






