search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"

    ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். 

    அஜித் - ரஜினி
    அஜித் - ரஜினி

    இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  
    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியை, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

    ரஜினியின் சந்திப்பு
    ரஜினியின் சந்திப்பு

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் ரிகர்சலில் கலந்துக் கொண்ட ரஜினி கைத்தட்டி பாடல்களை ரசித்துள்ளார்.
    சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, “என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். 

    ரஜினிகாந்த் - இளையராஜா
    ரஜினிகாந்த் - இளையராஜா

    “அப்படியா.. நானும் அங்கே வருகிறேன்” என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார். இவர்களின் இந்த சந்திப்பு சினிமா வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×