search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siva"

    • தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.
    • சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார்.

    தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர்.

    சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே கேட்டு விட்டது போலும். ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார்.அப்படிக் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்து இருக்கிறது.விரைவில் நடிக்கவும் இருக்கிறார்.அதற்காக எடுத்த புகைப்படம் தான் இது.

    தமிழில் புகழ்பெற்ற இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி இவர் என்பதால் தமிழிலும் பட வாய்ப்புகள் வரும் என்று தெரிகிறது..அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாகும் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவாவின் முதல் பாடல் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
    • இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். 3D தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடத்தப்பட்டது. சூர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகும் இந்த கங்குவா படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்காக ட்ரைலர் வேலைகளையும் படக்குழு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சிவா இதற்கு முன் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 அஜித் படங்களை இயக்கியவராவர்.

    மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது . படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் மனித பிணங்கள் மலைப் போல குவித்து வைக்கப்பட்டுள்ளது அதன் மேல் சூர்யா ஒரு வாழ் ஏந்தியப் படி காணப்படுகிறார்.


    அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்  திரைப்படமும் வெளியாகவுள்ளது. அதே நாலில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகப்போவதால் . மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா தற்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா44  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர்.சி மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார்.
    • மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்.

    சுந்தர்.சி நடித்து இயக்கிய அரண்மனை 4 பேய் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்தது.

    இதையடுத்து மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார். இதில் சுந்தர்.சி நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

    இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் சுந்தர்.சி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே சுந்தர்.சி. வடிவேலு கூட்டணியில் வந்த தலைநகரம், வின்னர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக இந்த படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது.

    தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுந்தர்.சி ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டு பாகங்களை எடுத்துள்ளார். இந்த படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளார்.

    கலகலப்பு 3 படத்தில் விமல், சிவா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
    • கங்குவா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது .

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்களிடம் கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும். இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும் எனவும், படத்தை 10 மொழிகளிலும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.

    சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் திஷா பதானி.

    லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி சினிமாவிலும், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் திஷா பதானி முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் திஷா பதானி.

    திஷாவும் அவரது நெருங்கிய தோழியான மவுனி ராயும் அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

     

    அந்த வகையில் திஷாபதானி விடுமுறை கொண்டாட்டமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
    • இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

    எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றது.
    • பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

    இயக்குநர் சிவா இயக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த டீசர் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது.

     


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அனிமல் படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார். கங்குவா டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இந்த படத்திற்கு மிலன் கலை இயக்குநராகவும், நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
    • . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.

    2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்

    மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
    • இங்கு வழிபாடு செய்பவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அச்சரபாக்கம் தலத்தில் சர்வேஸ்வரன் அட்சரம் என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால் இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

    மேலும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும் ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும்.

    ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம்.

    கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தை போக்கும்.

    இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும்.

    • ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
    • கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.

    அவற்றை தெரிந்து கொண்டு பிரதட்சனம் செய்தால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.

    அந்த வகையில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் "தலவிருட்ச பிரதட்சனம்" மிகவும் புகழ் பெற்றது.

    இங்குள்ள தல விருட்சத்தை 1008 தடவை சுற்றுவதாக வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.

    இந்த பிரதட்சனம் கார்த்திகை மாதம் நடைபெறும்.

    பக்தர்கள் கார்த்திகை 1ந்தேதி தொடங்கி 31ந்தேதி வரை 1008 பிரதட்சனத்தை மேற்கொள்வார்கள்.

    ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த பிரதட்சனம் நடைபெறும்.

    கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    சமீப ஆண்டுகளாக இந்த வழிபாடு மிகவும் புகழ் பெற்றுள்ளது.

    ×