search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attend"

    டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.

    இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

    தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

    ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.

    கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
    தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த இப்தார் விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்பட பலர் பங்கேற்றனர். #IftarParty #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் முக்தார் அப்பாஸ் நக்வி.

    இவர் தலைநகர் டெல்லியில் இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  மற்றும் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



    முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்க்காகவே இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #IftarParty #MukhtarAbbasNaqvi
    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    இந்த இப்தார்  விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல்  மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல்,  சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



    மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress  #Congress #IftarParty #RahulGandhi 
    ×