என் மலர்
நீங்கள் தேடியது "Smriti Irani"
- கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
- மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி மற்றும் கல்வி உதவி வழங்கப்படுகிறது.
- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தக் குழந்தைகளுக்கு இடம்.
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால்,பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ், பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இது போன்ற குழந்தைகள் 23 வயதை எட்டும் வரை கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுகிறது.
இந்த தொகையை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம்.
உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் இந்த குழந்தைகளுக்கு ரூ.20,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ் 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.
- சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
- சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது.
- ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதிப்பு
புதுடெல்லி :
பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.
இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதித்து விட்டார். அவர் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை, பெண்களை, ஏழைகளை, நலிவுற்றோரை அவமதித்து விட்டார்" என சாடினார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.
நண்பகல் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசைக்கு சென்றார். பீகார் பா.ஜ.க. எம்.பி. ரமாதேவியிடம், "இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?" என கேட்டார்.
அப்போது அங்கே மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வந்து, சோனியா காந்தியை நோக்கி சைகை காட்டினார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் ஸ்மிரிதி இரானியின் எதிர்ப்பை சோனியா காந்தி புறக்கணிக்க முயற்சித்தார். ஆனால் ஏனோ திடீரென ஸ்மிரிதி இரானியை நோக்கி சோனியாவும் சைகை செய்து கோபமாக பேசினார்.
சோனியாவும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் சூழ்ந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டபோது சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலேயும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா பொத்தாரும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
பின்னர் ரமாதேவி நிருபர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன் என சோனியா கேட்டார். நான் அவரிடம், நீங்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமித்ததுதான் தவறு என்று சொன்னேன்" என குறிப்பிட்டார்.
பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "பா.ஜ.க. எம்.பி.க்களிடம் மிரட்டும் தொனியில் சோனியா காந்தி பேசினார். என்ன விவாதிக்கப்படுகிறது என தெரிந்து கொள்ள விரும்பிய பா.ஜ.க. எம்.பி.க்களிடம் அவர் நீங்கள் என்னிடம் பேசக்கூடாது என கூறினார்" என்று தெரிவித்தார்.
"மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என பிரச்சினையை அவர் திசை திருப்பினார்" என்றும் நிர்மலா சீதாராமன் சாடினார்.
இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் குறிப்பிடுகையில், "இன்று மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் நடத்தை கொடூரமானது, மூர்க்கத்தனமானது. அவரை சபாநாயகர் கண்டிப்பாரா? விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?" என குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்திக்கு ஆதரவு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மக்களவையில் இருந்தபோது, 75 வயதான மூத்த பெண்மணியை (சோனியாவை) ஓநாய் பாணியில் சுற்றி வளைத்தனர். அவர் செய்ததெல்லாம் மற்றொரு மூத்த பெண் குழு தலைவரிடம் நடந்து சென்று பேசியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, "ஒரு பெண்ணாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களவையில் உள்ள அவரது சொந்தக் கட்சி தலைவர் அவமதித்ததற்காக நாட்டின் முன் அவர் வந்து, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது. அத்தகைய கருத்துக்களை கூறுவது தவறு. இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது தவறுதான்" என குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார்.
- கோவாவில் செயல்பட்டு வரும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகம் சர்ச்சையில் சிக்கியது.
- தனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார்.
புதுடெல்லி:
கோவாவின் அசகாவோவில் செயல்பட்டு வரும் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் என்பது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் உணவகமாகும். இதை ஸ்மிருதியின் மகள் ஜோயிஷ் இரானி இயக்குவதாக கூறப்படுகிறது.
இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இறந்தவரின் பெயரிலேயே அந்த உணவகத்திற்கான குடி உரிமை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவா மாநில கலால் வரி விதிகளின்படி ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெறமுடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமம் பெறவில்லை. அதில் மதுக்கடை நடத்தப்படுகிறது. அந்த உணவகத்தின் மதுபான உரிமம் ஆண்டனி டிகாமாவின் பெயரில் உள்ளது. மேலும் கடந்த மாதம் தான் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்தோனி டிகாமா என்ற உரிமத்தில் பெயரிடப்பட்ட நபர் மே 2021-ல் காலமானார். இந்த அந்தோணி திகாமா மும்பையின் வைல் பார்லேயில் வசிப்பவர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவரது மரணத்தை உறுதி செய்து இறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரோட்ரிக்ஸ் இந்த மோசடியை அம்பலப்படுத்தினார்.
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர், தொழில்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் கலந்தாலோசித்து மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை கோரி வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதி வர உள்ளது.
இந்த சர்ச்சையை வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் வெளிப்படுத்தியுள்ள போதிலும், கோவா அரசின் கலைத்துறை அந்த உணவகத்திற்கு நிகழ்ச்சி குறித்த செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது காங்கிரஸ் தலைமையின் தூண்டுதலின் படி செய்யப்படுகிறது. எனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தவறானது. அவரது குணத்தை படுகொலை செய்வது மட்டுமல்லாமல், என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயல் ஆகும் என தெரிவித்தார்.
மேலும், தனது 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
- இதற்கு முன்பு 2020 ஆண்டு கொரோனா தொற்றால் ஸ்மிருதி இரானி பாதிக்கப்பட்டிருந்தார்.
- கொரோனா பாதிப்பு காரணமாக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.
நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 12,899 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி ஜூபின் இரானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா பரிசோதனை செய்திருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி ஸ்மிருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2020 ஆண்டு முதல் கொரோனா அலை வீசிய போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளதாவது:
(டெல்லி) ராஜேந்திர நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம், டெல்லியில் நடந்தது. அதில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
ஏழை குடும்பங்களில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பதாக பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.
பணக்கார குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.



காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துவந்த ராகுல் காந்தி, பின்னர் மெல்ல பின்னடைவை சந்திக்க தொடங்கினார்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 479அதிக வாக்குகளையும் ராகுல் காந்தி ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 772 வாக்குகளையும் பெற்றிருந்தனர், ராகுல் காந்தியைவிட ஸ்மிருதி இரானி சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.