என் மலர்
நீங்கள் தேடியது "அமேதி"
- எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு.
- அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை.
மத்திய முன்னாள் அமைச்சரும், அமேதி தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி, ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அமேதி சென்றிருந்தார்.
அப்போது ஸ்மிருதி இரானி கூறியதாவது:-
எனக்கு அமேதியுடன் பழைய தொடர்பு இருக்கிறது. இது ஒரு குடும்ப உறவு. ரத்த உறவு. அத்தகைய உறவுகள் ஒருபோதும் பலவீனமாகாது ஒருபோதும் முறிவதில்லை. அமேதி என்னை ஒரு சகோதரியாக ஏற்றுக்கொண்டது. ஒரு சகோதரிக்கும் அவளுடைய வீட்டிற்கும் உள்ள பிணைப்பு அவளுடைய இறுதிச் சடங்கோடுதான் முடிவடையும். நீங்கள் அனைவரும் என்னுடன் கட்டியெழுப்பிய உறவு முறிந்து போக அனுமதிக்கப்படாது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டபோது, கிராமப்புற மேம்பாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது.
2014-க்கு முன்பு, பஞ்சாயத்து மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.70,000 கோடியாக இருந்தது. இது ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்தியா இன்று வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், நமது பொருளாதாரம் இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.
2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியை தோற்கடித்தார். 2024 தேர்தலில் கிஷோரி லால் சர்மா ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
- சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அமேதி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார்.
அங்கு தனது சொந்த தொகுதியான ரேபரெலிக்கு சென்ற ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று அமேதி தொகுதிக்கு செல்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விமர்சித்தனர். மேலும் மோடியை கேலி செய்து படம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ்தள பக்கத்தில் பகிரப்பட்டது. இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று ராகுல்காந்தி அமேதி செல்லும் நிலையில் உத்தரபிரதேச நகரம் மற்றும் அமேதி பகுதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டி வார் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டதாக கூறி அவர்களை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
- ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.
பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.
நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.
மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- கடந்த முறை ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- தற்போது அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வருடம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி கண்டார். வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வருகிற 26-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது, வருகிற வெள்ளிக்கிழமை (நாளைமறுதினம்) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
- சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.
2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.
தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.
வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-
ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.
அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.
ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.
- கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
- ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நாளை மாலை கூடுகிறது. அப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுவரை மக்களவை தேர்தலில் 317 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். தற்போது உடல் நலம் காரணமாக மக்களவை தொகுதியில் சோனியாக காந்தி போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
- ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.
ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.
இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
- அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.
காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்
ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
- ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
அமேதியில் இன்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வருகிற 3-ந்தேதிதான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக்குழு இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த குழு ஆலோசனை நடத்தியது. இருந்தபோதிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுகும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.
வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 24 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்ற முடிவை எடுக்க தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிப்போம். யாரும் பயப்படவில்லை, யாரும் விட்டு ஓடவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
- காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி.
- 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.
1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.
அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார்.
அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பா.ஜ.க.வுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார்.
கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
ரேபரேலி தொகுதியில் 2004, 2006 இடைத்தேர்தல், 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 முறை சோனியாகாந்தி வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்து வந்தார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இம்முறை ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
அமேதியில் ராகுல்காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கேஎல் சர்மா அமேதி தொகுதியிலும் வேட்பாளராக களமிறங்குகிறார்கள்.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
- அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.
அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.






